’யாதும் அறியான்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

புதுமுகம் தினேஷ்,  பிரானா, கே பி ஒய் ஆனந்த் பாண்டி,  ஷியாமல், அப்புகுட்டி ஆகியோர் நடித்திருக்கும் படம்தான் “யாதும் அறியான்”. இப்படத்தை என்.கோபி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

கதாநாயகன் தினேஷும், கதாநாயகி பிரானாவும்சில நாட்களாக வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வருகின்றனர்,  தன் காதலி பிரானாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று காதலன் தினேஷ் ஆசைப்படுகிறார். ஆனால், கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கே அனுமதி மறுக்கும் பிரானா, எல்லா விசயங்களும் திருமணத்திற்குப் பிறகு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.  எதற்கும் ஒத்துழைக்காமல் இருக்கும்  பிரானாவைப்பற்றி தனது நண்பர் ஆனந்த் பாண்டியிடம் வேதனைப்படும் தினேஷிடம்  அவரது நண்பர் ஒரு யோசனை சொல்கிறார். அதாவது தினேஷின் காதலிக்கு பிறந்த நாள் வருவதால் அதை கொண்டாட வனப்பகுதியில் இருக்கும் சொகுசு விடுதிக்கு செல்லலாம் என்று கூறுகிறார். தனது காதலி பிரானா மற்றும் நண்பர் ஆனந்த் பாண்டியின் காதலி ஷியாமள் என இரண்டு ஜோடியினர் வனப்பகுதியில் இருக்கும் சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள். அந்த விடுதியில் அப்பு குட்டி பணியாளராக இருக்கிறார்.

நண்பர் ஆனந்த் பாண்டியின் யோசனைப்படி தனது காதலியுடன் உடலுறவு கொள்ள காதலன் தினேஷ் முயற்சிக்கிறார். அவரின் முயற்சிக்கு முதலில் முட்டுக்கட்டை போடும் பிரானா, பிறகு அவரது தொடர் முயற்சிக்கு அடிப்பணிகிறார். பிறகு அவருடன் அனைத்தையும் முடித்துவிட்டு, மகிழ்ச்சியான  மனநிலையில் இருக்கும் தினேஷுக்கு,  பிரானா மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிச்சியடைகிறார். அவரது நண்பர் ஆனந்த் பாண்டியை அழைத்து பிரானா மயங்கி கிடப்பதை காட்டும்போது அவரும், அவரது காதலி ஷியாமளும் பிரானாவின் கையை தொட்டுப் பார்க்கிறார்கள். பிரானா இறந்து விட்டார் என்பதை உறுதிபடுத்துகிறார்கள். இந்த விஷயத்தை நண்பர் ஆனந்த் பாண்டி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்கிறார்.  ஆனால் தினேஷ், நான் எந்த தவறும் செய்யவில்லை என மறுக்கிறார்.  இதனால் நண்பர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். . இந்நிலையில் அதிர்ச்சிகரமான சம்பவங்களின் பின்னணியில் நடந்தது என்ன? உண்மையாகவே பிரானா இறப்பதற்கு என்ன காரணம்.?என்பதை  ‘யாதும் அறியான்’ படம் பார்த்தால் புரியும்.

அறிமுக நாயகன் தினேஷ், தனக்கு கொடுத்த ஒரு அப்பாவியான கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். இரண்டாம் பாதியில் சைக்கோவாக மாறி நடிக்கும்போது ஒவ்வொரு  காட்சியிலும் வியக்கவைக்கும் அளவுக்கு அசத்தி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரானா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமள், விடுதி பணியாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி, தம்பி ராமையா என அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எல்.டி.. கொடுக்கப்பட்ட காட்டுபங்களாவில் தன் திறமையை காட்ட முயற்சித்து வெற்றி பெற்று இருக்கிறார்..

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடல் கேட்கும் ரகம்தான், பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு தகுந்தவாறு  மிகப் பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு சின்ன ஒன் லைன் கதைக் கருவை வைத்துக்கொண்டு, பல திருப்பங்கள் மூலம் மாறுபட்ட முறையில் ஒரு அப்பாவியை   சைக்கோவாக காட்டி திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கோபி, ஒரு சில இடங்களில், விஜய்யை முதல்வராக காட்ட வேண்டும் என்பதற்காகவே 2026 ஆண்டு நடக்கும் காட்சிகளை வைத்திருப்பதை நம்ப முடியவில்லை.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

"Yaadhum Ariyaan" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment