’மைலாஞ்சி’ – திரைப்பட விமர்சனம்!

சென்னை:

ஸ்ரீராம் கார்த்திக் , கிரிஷா குரூப், முனீஷ்காந்த், செந்தி,சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “மைலாஞ்சி”  இப்படத்திற்கு அஜயன் பாலா கதை, எழுதி இயக்கியுள்ளார்.பாடல்கள் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஊட்டியில் உள்ள ஒரு மலைப் பிரதேசத்தில் ‘மைலாஞ்சி’ என்கிற பெயரில் பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிற குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் கிரிஷா குரூப்.. அவர் தனது சித்தியின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.  குடிகாரனான தன் தம்பிக்கு கிரிஷாவை திரும்ணம் செய்து  வைத்தால் அவர்களது சொத்துக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறார் சித்தி. ஆனால் கிரிஷாவுக்கு பிடிக்காத அந்த திருமணத்திலிருந்து தப்பிக்க முயல்கிறார். எனவே தன் வீட்டில் குடி இருந்த ஒருவர் மீது அன்பு கொண்டு அவரை காதலிக்க வேண்டும் என்று நினைக்கும்போது, அவரிடம் தன் காதலை சொல்ல முயலும் போது, சில பணிகள் காரணமாக  சென்னைக்கு சென்று விடுகிறார். இந்த சமயத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, யாருக்கும் தென்படாத ஒரு பறவையை  புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். ஊட்டிக்கு வந்த ஸ்ரீராம் கார்த்திக்கு கிரிஷா குரூப்பின் அறிமுகம் கிடைக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப்.இருவருக்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு ஸ்ரீராம் கார்த்திக்,  கிரிஷா குருப் மீது காதல் கொள்கின்ற அளவுக்கு மாறுகிறது. அதே நேரத்தில் தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தன் மனதில் உள்ள காதலை சொல்லி, தன்னை சென்னையில் இருக்கும் காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார். இதனைக் கேட்ட ஸ்ரீராம் கார்த்திக் தன் காதலை மறைத்துக் கொண்டு அதற்கு உதவுவது போல் நடிக்கிறார். மின்னஞ்சலில் காதலனுடன் தொடர்பு கொள்வது போல் பாசாங்கு செய்து.  கிரிஷா குரூப்பின் காதலன் வருவதாக சொல்லி ரயில்வே நிலையத்தில் காத்திருக்க செய்து ஏமாற்றுகிறார் ஸ்ரீராம் கார்த்திக். ஆனால் அவரது மனம் மாறி  கிரிஷா குரூப்பின் காதலனை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார்.  அவரை கண்டுபிடித்து, அவரிடம் கிரிஷா குரூப்பின் காதலை தெரியப்படுத்தி, அவரை மீண்டும் ஊட்டிக்கு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இறுதியில் சென்னையிலிருந்து ஊட்டிக்கு வரும்  தன் காதலனுடன் கிரிஷா குரூப் திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் “மைலாஞ்சி” படத்தின் மீதிக் கதை.

இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் இயல்பான தோற்றம் யதார்த்தமான நடிப்பு என அவர் ஏற்றுள்ள சூர்யா கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கும்படி உள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து அதனை சிறப்பாக செய்து நியாயம் சேர்த்து, அதை முழுமையாக உள்வாங்கி சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாரு கதாபாத்திரத்தில் வரும் கிரிஷா குரூப் துறுதுறு கண்கள், தோற்றம், நடிப்பு எனபார்ப்பவர் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.காதல் குறித்து அறிந்து கொள்ளும் நேரம்,அதை வெளிப்படுத்தத் துடிக்கும் தவிப்பு ஆகிய எல்லா இடங்களிலும் வெகுளித்தனமாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி வரும் காட்சிகள் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி, நாயகியின் சித்தியாக நடித்திருக்கும் நடிகை, மாமனாக நடித்திருக்கும் கலையரசன் கண்ணுசாமி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.

மலையும் மலை சார்ந்த இடங்களிலும் இந்தக் கதை பயணம் செய்வதால் இயற்கை எழில் மிகுந்த ஒவ்வொரு இடங்களையும்  அழகாகப் படம் பிடித்து ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்து இருப்பதை பாராட்ட வேண்டும்.

தனது இனிமையான இசையின் மூலம் பாடல்கள் கேட்கும் ரகமக இருக்கிறது பின்ணணி இசை மூலமும் செழுமை செய்து இப்படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளார் இளையராஜா.

காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் அஜயன்பாலா. ஒவ்வொரு மனிதர்களின் மனதில் இருக்கும் காதல் மற்றும் அதன் மூலம் ஏற்படும் உணர்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு, பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்.

மொத்தத்தில், ‘மைலாஞ்சி’ பழைய காதல் படம்.

ரேட்டிங் 2/5.

RADHAPANDIAN.

"Mailanji" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment