ஏ.சி.எம். சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் இந்த ‘ரூம் பாய்’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன். இப்படத்தில் நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி ,பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர் ,அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், நிதிமரோலி நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து பிழைப்பு தேடி வெளியில் வருகிறார் கதாநாயகன் நிகில். அவருக்கென்று குடும்பம் எதுவும் இல்லாததால் அவரே தன்னுடைய பிழைப்பை பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது. அங்கிருந்து நிகில் வேலை தேடி தன் சித்தப்பா வசிக்கும் ஏலகிரி மலைக்கு செல்கிறார். அங்கே சன்னி பன்னி ஹோட்டலை நடத்தும் இமான் அண்ணாச்சியிடம் வேலைக்கு சேர்கிறார். அங்கு ஏற்கனவே வேலை பார்க்கும் காத்து கருப்பு கலையோடு நட்புடன் பழகுகிறார். அந்த ஹோட்டலில் வேலை செய்யும்பொழுது அங்கே ஏற்பட்ட சண்டையினால் நண்பனுடன் சேர்ந்து நிகிலும் வெளியேற்றப்படுகிறார். இப்போது அதே ஏலகிரியில் உள்ள குயின் மார்க் என்ற வேறொரு ஹோட்டலில் நண்பன் காத்து கருப்பு கலையுடன் வேலைக்கு சேர்கிறார் நிகில்.
இந்த சூழலில் அங்கு வேலை பார்க்கும் இளைஞர்களை அங்குள்ள மேனேஜர் அடிமைப்படுத்தி அடித்து துன்புறுக்கிறார். அதுமட்டுமல்லாமல், அங்கு வரும் ஜோடிகள் தங்கும் அறையில் ஹிடன் கேமராவை வைத்து வீடியோ எடுத்து பணம் பறிக்கும் வேலையில் மேனேஜருடன் இணைந்து ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் பாலியல் அத்துமீறல்கள் நடந்த வீடியோ பிரதிகள், மற்றும் அங்கு நடந்த பல மோசடி களை கண்டுபிடிப்பதற்காக ஒரு இரவில் ரூம் பாயாக இருக்கும் நிகில் முயற்சி செய்கிறார். அந்த சமயத்தில் ஹோட்டல் மேனேஜர் அங்கு வந்து விடவே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு அந்த மேனேஜரை கொலை செய்து விடுகிறார் நிகில். இந்த சூழ்நிலையில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்த வார்டனும் காணாமல் போய் விடுகிறார். இதனால் வார்டன் காணாமல் போன நேரத்தில் கூடவே இருந்த நிகிலை காவல் துறை விசாரிப்பதற்காக தேடுகிறது. இறுதியில் காவல் துறையிடம் நிகில் சிக்கினாரா? சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் வார்டன் காணாமல் போனதன் காரணம் என்ன? என்பதை அதன் பிறகு நடக்கும் அதிரடி திருப்பங்களுடன் உருவாகி இருக்கும் படம்தான் “ரூம் பாய்”
அறிமுக நடிகரான நிகில் இளம் வயது வாலிபன் கதாப்பாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். தனது துடிப்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து நடனம் மற்றும் ஆக்ஷன் இரண்டிலும் அசத்தியிருக்கிறார் நிகில்.
நாயகி நிஷாவாக வரும் ஹர்ஷாவுக்குப் பெரிதாக வேலையில்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அருண்ராஜாவை விட, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் வார்டனாக நடித்திருக்கும் பிரபாகர் வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படத்தில் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, கேரளா பெஹமின் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீபாரதிராஜன் ஏலகிரியின் அழகையும், அதன் சுற்றுப்புறங்களையும் இயற்கை எழில் மிகுந்த இடங்களை மிக அழகாக படமாக்கியிருக்கிறார்.
வேலன் சகாதேவன் இசையில், சூரியமூர்த்தியின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தற்போதுள்ள சில ஹோட்டல்களில் தங்கும் பெண்களின் ஆபாசமாக வீடியோ காட்சிகளை படம் பிடித்து அதை வைத்தே அவர்களிடம் பணம் பறிக்கும் ஒரு கும்பல் இருப்பதை யதார்த்தமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராயன்,.இப்படத்தின் கதையை நகர்த்த.. ஒரு க்ரைம் திரில்லர் கதையில் எப்படி திரைக்கதை அமைக்க வேண்டுமோ அதே போல கச்சிதமாக அமைத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். பாலியல் குற்றங்கள்,சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளில் நடக்கும் கொடுமைகள் ஆகியனவற்றை மிக சிறப்பாக வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.
மொத்தத்தில், ‘ரூம் பாய்’ படத்தை அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5..
RADHAPANDIAN.