நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

சென்னை:

தெய்வ நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளின் பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் உலக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.மண் சார்ந்த கதை களத்தில் இருக்கும் வாழ்வியலை பல படங்கள் பேசியுள்ளது.ஆனால் அந்த வாழ்வியலுக்கு பின்னால் மறைந்திருக்குற பல ‘அமானுஷ்ய’ கதைகள் நம்ம ‘நாட்டார்’ மரபில் உண்டு. அப்படி ஒரு ‘நாட்டார் மர்மக்கதை’ தான் இக்கதை.

நாட்டார் மர்மக்கதையை களமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ரகுமான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.1980களின் பின்னணியில் நடக்கும் கதையில் ‘அமானுஷ்ய’ சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காக்க முயற்சிக்கும் ஜமீன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். 250-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ரகுமானின் திரை பயணத்தில் இந்த படம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்கிறார்கள் படக்குழுவினர்.

1980களின் தென் மாவட்டங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், நாட்டார் மரபுகளிலும் தெய்வ நம்பிக்கைகளிலும் மறைந்திருக்கும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டதாக உருவாகிறது. பல ஆண்டுகளாக மக்களின் வாய்மொழிக் கதைகளாக இருந்து வந்த உண்மை சம்பவங்களை சினிமா மொழியில் மிரட்டலாக சொல்லும் முயற்சியாக இப்படம் அமைகிறது.

இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் நடிகர் ரஹ்மான். இதுவரை அவர் நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். 250-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்த ரஹ்மான், இந்த படத்தில் தனது குடும்பத்தை அமானுஷ்ய சக்திகளிடமிருந்து காப்பாற்ற போராடும் ஜமீன் கதாபாத்திரமாக தோன்றுகிறார். அவரது திரைப்பயணத்தில் மிகவும் பேசப்படும் படமாக இது அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

“GENTLEWOMAN” படத்தை தயாரித்த “கோமளா ஹரி பிக்சர்ஸ்” நிறுவனத்தின் சார்பில் கோமளா மற்றும் ஹரி பாஸ்கரன் இணைந்து இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனத்தின் நான்காவது படைப்பாக உருவாகும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை என்றாலும், தற்போது திரையுலகில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மண் வாசனையோடு கூடிய படைப்பாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த “விழா” திரைப்படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன், இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். நாட்டார் மரபுகளின் ஆழத்தையும், அமானுஷ்ய மர்மங்களின் அதிர்வையும் இணைத்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கப் போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு இம்மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. சில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட உள்ளன.

மரபு, மர்மம், மனித உணர்வு, அமானுஷ்யம் — இந்த நான்கு அம்சங்களையும் ஒன்றாகக் கலந்து, தமிழ் சினிமாவில் பேசப்படும் புதிய முயற்சியாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

 

Actor Rehmaan New Movie newsFeatured
Comments (0)
Add Comment