‘ஐஆம் கேம் ‘ – திரைப்பட விமர்சனம்!

சென்னை:

துல்கர் சல்மான்,கயாடு லோஹர்,மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட், கதிர், ஜெயசுதா,மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “ஐ ஆம் கேம்”. இப்படத்தை.நஹாஸ் ஹிதாயத் கதை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

பெரிய கோடீஸ்வரர் வீட்டு மகனான துல்கர் சல்மான் எப்போது பார்த்தாலும் சூதாட்டத்திலும் மது அருந்துவதிலும் தனது நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார். அவரது தந்தை அலுவலகத்தில் பணிபுரிய சொன்னாலும் எந்த வேலையும் செய்யாமல் வெளியில் ஊதாரி தனமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் துல்கர். அவரது தந்தை எவ்வளவு புத்திமதிகள் சொன்னாலும் அதை கேட்காமல் சூதாட்டம் மோகத்தால் பல கோடிகள் பணத்தை அழிக்கிறார்.  இந்த சூழலில் அவர் பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி சூதட்டம் ஆடியதால் கடனாளியாகிறார்.

இந்த கடன்களை அடைக்க துல்கர் சன்மானின் தாயார் 60 லட்சம் ரூபாய் கொடுத்து, பாதி கடனை அடைத்து விடு என்று சொல்கிறார். ஆனால் அவர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு அந்த 60 லட்சத்தையும் இழந்து விடுகிறார். இந்த சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் துல்கர் சல்மான், அந்த சூதாட்டம் நடத்திய கும்பலை அடித்து நொறுக்குகிறார். அதன் பிறகு அந்த 60 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் செல்லும்போது வில்லனது அடியாட்கள் பின்னால் தொடர்ந்து வந்து  துல்கர் சல்மானை மரணம் ஏற்படுகின்ற அளவுக்கு சராமாரியாக அடித்து உதைத்து அவர்கள் அந்த 60 லட்சம் பணத்தை பிடுங்கிக் கொண்டு செல்கின்றனர்.  இந்த சூழ்நிலையில் துல்கர் சல்மான் அடிபட்டு விழுந்து மயக்க நிலையில் இருந்ததால் அவரை மருத்துவமனையில் அவரது தந்தை சேர்த்து துல்கர் சல்மானுக்கு இருந்த கடன்களை அடைக்கிறார்.

அப்போது மருத்துவமனையில் துல்கர் சல்மானின் வலது கை பாதி நசுங்கி போன நிலையில்,  அதனால் மருத்துவர்கள் வேறு ஒரு மாற்றுக்கையை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி அதை சரி செய்கின்றனர். அந்த மாற்று கையை உடலோடு இணைத்து செயல்பட மருத்துவர்கள் பயிற்சி அளிக்கும்போது பிசியோதெரபி நிபுணரான கயாடு லோகர், துல்கர் சல்மானுக்கு கூடவே இருந்து உதவி செய்கிறார். அப்போது செயற்கையாக இணைக்கப்பட்ட கை அவரது கட்டுப்பாட்டையும் மீறி  அதன் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த துல்கர் சல்மான் இது யாருடைய கை என்று புரியாமல் தவிக்கிறார். அந்த கையின் உள்ளே இன்னொரு ஆன்மா புகுந்து ஆட்டி படைக்கிறது என்பது உணர்கிறார் துல்கர் சல்மான்..

பின்பு அந்த கை யாரு யாருடையது என்பதை விசாரிக்கும் போது பிரபல கிரிக்கெட் வீரரின் கையை தான் இவருக்கு பொருத்தி அறுவை சிகிச்சை செய்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.குறிப்பாக தொழிலதிபர் மிஷ்கினை கொலை செய்ய தனது வலது கரம் துடிப்பதை உணரும் துல்கர் சல்மான், அதற்கான உண்மையான காரணம் தெரிய வர, அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த கிரிக்கெட் வீரர் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் தன்னை கொலை செய்த அனைவரையும் பழிவாங்க அந்த கை முயற்சி செய்கிறது. இறுதியில் அந்த கையின் மூலம் கிரிக்கெட் வீரரை கொலை செய்த அனைவரையும் பழி வாங்கியதா? இல்லையா? என்பது தான் ‘ஐ ஆம் கேம்’ படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ,டேன் ஜான் என்ற கதாபாத்திரத்தில் அபாரமாக நடித்து அசத்தி இருக்கிறார். அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும், பதற்றமான காட்சிகளிலும் துல்கரின் நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கிறது. தன் கையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்தக் கையுடன் போராடும் காட்சிகளில் மிகவும் உணர்ச்சி கரமாகவும்,.இந்தப் படத்தின் கதையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஐ ஆம் கேம் என்று ரசிகர்களை ரசிக்க வைத்து  இருக்கிறார் துல்கர் சல்மான் .

 

 

 

 

 

 

 

Comments (0)
Add Comment