சென்னை:
விஜய்யின் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா, பரத் கோபன்னா, அபிஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மிஷன் சாப்டர்1”
இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்.இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சந்தீப் கே விஜய். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
‘மிஷன் சாப்டர்-1″ தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக செண்டிமென்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படமாக வெளி வந்து இருக்கும், இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
காவல்துறையில் ஜெயிலராக பணியாற்றிய அருண் விஜய் தன் மனைவியின் இறப்புக்கு பிறகு தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக மகளை அழைத்துக் கொண்டு லண்டன் செல்கிறார். மகளின் ஆபரேஷனுக்காக ஹவாலா மூலம் இந்தியன் பணத்தை கொடுத்து லண்டனில் சென்று அங்குள்ள பணத்தை வாங்க முயற்சி செய்கிறார். அச்சமயத்தில் அவரிடம் ரகசியமாக பத்து ரூபாய் இருப்பதை தெரிந்து கொண்ட சில ரௌடிகள் அந்த பத்து ரூபாய் நோட்டை பறிக்க முயல்கின்றனர். இதனால் கோபம் அடைந்த அருண் விஜய் அவர்களிடம் பயங்கரமாக சண்டை போட்டு அந்த பத்து ரூபாய் நோட்டையும், தனது பர்ஸையும் மீட்கிறார். இந்த சூழ்நிலையில் அங்குள்ள லண்டன் காவல்துறையினர் அங்கு வந்து அருண் விஜய்யை கைது செய்து சிறையில் அடைகின்றனர். அந்த சிறையில் சிறை வார்டனாகபணி புரியும் எமி ஜாக்சனிடம் தன் மகளுக்காக அறுவை சிகிச்சை செய்ய இந்தியாவிலிருந்து லண்டன் வந்து இருப்பதாக எவ்வளவு சொல்லியும் எமி ஜாக்ஸன் அவர் சொல்லை புரிந்து கொள்ள முடியாமல் சிறையில் அடைக்கிறார்.
இந்நிலையில் லண்டன் காவல்துறையினரால் கைதாகி அந்த சிறையில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் மூவரை சிறையில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக ஒரு தீவிரவாத குழு பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி அவர்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்கின்றனர். அந்த தீவிரவாதிகள் வெளியே தப்பிக்க முயற்சி செய்யும்போது, மற்ற கைதிகளும் வெளியே வர முயலுகின்றனர் அந்த சமயத்தில் அருண் விஜய் சிறைச்சாலையில் அனைத்து கைதிகளையும் அடித்து நொறுக்கி யாரையும் தப்பிக்க விடாமல் ஜெயிலில் அடைக்கிறார். இதற்கிடையில் தீவிரவாத தலைவன் மருத்துவமனையில் இருக்கும் அருண் விஜய்யின் மகளை கடத்துகிறான். தன் மகளின் சிகிச்சைக்காக லண்டன் சென்ற அருண் விஜய் தன் மகளைக் காப்பாற்றினாரா? தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்தாரா? இல்லையா? என்பதுதான் “மிஷன் சாப்டர்-1” படத்தின் மீதி கதை.
கதாநாயகன் அருண் விஜய் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன், அதிரடி, சண்டைக்காட்சிகளில் அசுரத்தனம் காட்டி அனைவரையும் ஆச்சரியபட வைத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், தனது கடுமையான உழைப்பை கொடுத்து மிக சிறப்பாகவே நடித்துள்ளார். மிக கடினமான ஆக்சன் காட்சிகளையும் கொஞ்சமும் சிரமம் பாராமல் நடித்து இருப்பது அருண் விஜய்யின் மன துணிச்சலையும், உடல் வலிமையையும் காட்டுகிறது.
ஆக்ஷன் காட்சிகளில் தனது பலத்தை காட்டியிருக்கிறார் எமி ஜாக்சன். இதுவரை கவர்ச்சி காட்டி நடித்து வந்தவர் இந்த படத்தில் எனக்கும் நடிக்க தெரியும் என்று நிரூபித்துள்ளார். இப்படத்தில் அவர் லண்டன் சிறை வார்டனாக அதிரடி ஹாலிவுட் கதாநாயகியாக நம் கண் முன்னே மின்னுகிறார்.
செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் பரத் போபண்ணா, சர்தார் வேடத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், விரஜ், ஜேசன் ஷா, சிறுமி இயல் என இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் விதமாக, அனைவரும் ரசிக்க வைக்கும் மெலோடியாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜயனின் ஒளிப்பதிவு அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒவ்வொரு காட்சிகளையும் மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
இயக்குனர் விஜய் இப்படத்தின் மூலம் தன்னை முற்றிலுமாகவே வேறு படுத்தி காட்டி இருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தன்னால் ஒரு ஆக்சன் படத்தை இயக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். அவரது கதைக்கான கடின உழைப்பு இப்படத்திற்கு பெரிய அளவில் பலத்தை சேர்த்திருக்கிறது. இனி அவர் ஆக்சன் படங்களை தொடர்ந்து இயக்குவார் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில் ஆக்ஷன், அதிரடி சண்டைக் காட்சிகளை ரசிப்பவர்களுக்கு இந்த ‘மிஷன் – சாப்டர் 1’ படம் விருந்தாக அமையும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.