சென்னை:
தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணெலா கிஷோர், சமுத்திரக்கனி, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘ ஹனு மான்” பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் நிரஞ்சன் ரெட்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை பிரசாந்த் வர்மா கதை எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
அஞ்சனாத்ரி என்ற கிராமத்தில் தனது சகோதரி வரலட்சுமியுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் தேஜா சஜ்ஜா சின்ன சின்ன திருட்டு தொழிலில் ஈடுபட்டு அந்த கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள பயில்வான் ராஜ் தீபக் ஷெட்டி, தனது அடியாட்களை வைத்துக் கொண்டு, அந்த ஊர் மக்களிடம் வரி வசூல் என்ற பெயரில் பணத்தை அடாவடித்தனமாக அடித்து பறித்துக் கொண்டிருக்கிறான். அப்படி பணம் தராதவர்களை மல்யுத்த குஸ்தி போட்டிக்கு வர சொல்லி அவர்களை அடித்து உதைத்து காலை உடைத்து முடமாக்குகிறார். இந்நிலையில் அந்த கிராமத்தில் பள்ளியில் படித்த கதாநாயகி அம்ரிதா நாயர் மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை படித்துவிட்டு அந்த கிராமத்திற்க்கு வருகிறார்.
ஒரு கட்டத்தில் காட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த மருத்துவர் மீனாட்சியை திருடர்கள் தாக்கும்போது, அங்கு சென்ற கதாநாயகன் தேஜா சஜ்ஜா அவளுக்கே தெரியாமல் மீனாட்சியை காப்பாற்றுகிறான். திருடர்களிடம் சண்டையிட்ட தேஜா சஜ்ஜாவை கொள்ளையர்கள் அடித்து உதைத்து தூக்கி அங்கு இருக்கும் நீர் அருவியில் போட்டு விடுகின்றனர். அந்த அருவியில் ஆஞ்சநேயரின் ரத்த துளியால் உருவான ஒரு மாயகல் அவனுக்கு கிடைக்கிறது. அந்த மாயக் கல்லை எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்கு வரும் தேஜா சஜ்ஜா மிகப்பெரிய பலசாலியாக உருவெடுப்பதோடு தன் உடலில் ஒரு வித புதிதாக சக்தியும் கிடைக்கிறது. அந்த புதிய சக்தியை வைத்துக்கொண்டு அந்த கிராமத்தில் அனைவரையும் மிரட்டி கொண்டிருந்த பயில்வான் ராஜ் தீபக் ஷெட்டியை அடித்து பந்தாடி கை,கால்களை நொறுக்கி விடுகிறார் தேஜா சஜ்ஜா.
அந்த கிராமத்து மக்கள் தேஜா சஜ்ஜாவின் சக்தியை கண்டு ஆச்சரியப்படுகின்றனர். ஆஞ்சநேய கடவுளால் கொடுக்கப்பட்ட அந்த மாயக்கல்லின் அபூர்வ சக்தியை பற்றி தெரிந்து கொண்ட வில்லன் வினய், எப்படியாவது தேஜா சஜ்ஜாவிடம் உள்ள மாயக்கல்லை கைப்பற்ற வேண்டும் என்று தனது அடியார்களுடன் அந்த கிராமத்திற்கு வருகிறார். தேஜா சஜ்ஜாவிடம் உள்ள சக்தி வாய்ந்த மாயக்கல்லை வினய் கைப்பற்றினாரா? ஹனுமானின் சக்திவாய்ந்த மாயக்கல்கிடைத்ததற்கான காரணம் என்ன? என்பதுதான் “ஹனுமான்” படத்தின் மீதி கதை..
கதாநாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா, அனுமந்த் கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவராக இருக்கிறார். அவர் ஏர்றிருக்கும் கதாபாத்திரத்திரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதத்தில் தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சகோதரி பாசக்காட்சிகளில் நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். மாயக்கல்லின் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்களை காமெடி கலந்த நடிப்பில் தெலுங்கு கதாநாயகர்கள் திரைப்படங்களில் செய்வதை சொல்லும்போது முடிவில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை போல ரயிலை நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் கைத்தட்டலில் தியேட்டரே அதிர்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்க்கு வலு சேர்த்து அசத்தி இருக்கிறார்.
கதாநாயகன் தேஜா சஜ்ஜாவின் சகோதரியாக நடித்திருக்கும் வரலட்சுமி வழக்கம்போல் மிகவும் சிறப்பாக அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிரட்டி இருக்கிறார். அவர் இறக்கும் காட்சிகளை படமாக்கிய விதம் நம் கண்களில் கன்ணீரை வரவழைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் வினய், சூப்பர் மேனாகப் போகிறேன் என்று ஆசைப்பட்டு இறுதியில் சூப்பர் வில்லனாக அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி ஹாலிவுட் ஸ்டைலில் இருப்பவர், தனது நடிப்பையும் ஸ்டைலிஷாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிராமத்து தலைவராக பயில்வானாக பயமுறுத்தும் ராஜ் தீபக் ஷெட்டி, தனது பெரிய பல்லைக் காட்டி சிரிக்க வைக்கும் வெண்ணிலா கிஷோர் மற்றும் சாமியாராக வரிம் சமுத்திரக்கனி என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மிகவும் இயல்பாகவே நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்றவாறு எது கிராபிக்ஸ், எது உண்மை என்று தெரியாவதாறு மிக சிறப்பாக பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன.
ஒரு கிராமத்தில் கதாநாயகனுக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைத்த பின் அந்த சக்தியினால் சூப்பர் ஹீரோவாக உருமாறி அவர் நிகழ்த்தும் சாகசங்களை கதையாக கொண்டு ஆன்மிகம் கலந்த விறு விறுப்பான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் அனைவரும் சிரித்து மகிழும் காட்சிகளிலும், குரங்கு வரும் காட்சிகளும் கைத்தட்டல் பெறுகின்றன. ஹாலிவுட் திரைப்பட பாணியில் வடிவமைக்கப்பட்ட பக்திப்படம் என்கிற தோற்றம், கேலி, கிண்டல் ஆகிய எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. பல சிறப்பான காட்சிகளுடன் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மாவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில் இந்த “ஹனு மான்” திரைப்படம் அனைவரும் ரசிக்கும் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படம்.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.