சென்னை:
எஸ் ஆர் பிலிம் பேக்டரி எஸ் ஆர்.ராஜன் தயாரிப்பில், முருகா அசோக், ராகினி திவேதி,மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பில்லி முரளி, ஆர்த்தி ஶ்ரீ, மிட்டாய் பிரபா, ஆதவ் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஈமெயில்’
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராகினி திவேதியும் அவரது தோழிகள் நால்வரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றனர். ராகினி திவேதி, மனோபாலா நடத்தும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அங்கு அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததாலும் வீட்டு வாடகையை கட்ட முடியாத சூழ்நிலையில், அவரது குடியிருப்பில் வசிக்கும் முருகா அசோக்கிடம் தனக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருமாறு சொல்கிறார். கண்டிப்பாக நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்கிறார் முருகா அசோக். இதற்கிடையிலே ராகினி திவேதி தனது செல்போனில் உள்ள சூதாட்ட செயலியில் சென்று கேம் விளையாடுகிறார். அதில் அவரது செல்போன் எண்ணை பதிவு செய்கிறார். இந்நிலையில் அவரது வீட்டைத் தேடி கொரியர் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறது.
அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட ராகினி திரிவேதி தொடர்ந்து சூதாட்ட கேம் ஆடுகிறார் அப்போது ஒருவர் அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த சூதாட்டம் கேம் நடத்துபவர் வீட்டுக்கு வர சொல்கிறார். ராகினி திவேதியும் அந்த நபர் சொன்ன வீட்டுக்கு செல்கிறார். அங்கு அந்த மர்ம நபர் இறந்து கிடக்கிறார். பதற்றம் அடைந்த ராகினி திவேதி ஒன்றும் புரியாமல் விழிக்கும் போது அந்தக் கொலை பழி ராகினி திவேதி மீது விழுகிறது. இந்நிலையில் ராகினி திவேதியை திருமணம் செய்து கொண்ட முருகா அசோக் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இந்தப் பிரச்சினையால் முருகா அசோக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் இந்த விஷயத்தை தன் தோழிகளிடம் சொல்லி, தானே அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார். அவரது தோழிகளும் அவருக்கு உதவி செய்ய முன் வருகின்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் ராகினி திரிவேதியிடம் இருக்கும் ஒரு முக்கிய ஹார்ட் டிஸ்க்கை கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த மர்ம நபர்களிடம் ராகினி திவேதி அந்த ஹார்ட் டிஸ்க்கை கொடுத்தாரா? அந்த ஹார்ட் டிஸ்கில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? என்பதுதான் ‘ஈமெயில்’ படத்தின் மீதி கதை.
கன்னட பட கதாநாயகி ராகினி திவேதி ‘ஈமெயில்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் என்றாலும், கதையின் தன்மையை உணர்ந்து நடிப்பில் அசத்தி இருக்கிறார். இப்படத்தின் கதை முழுக்க, முழுக்க அவரைச் சுற்றியே பின்னப்பட்டிருப்பதால் அதற்கேற்றவாறு தனது பணியை செவ்வனெ செய்து இருக்கிறார். மர்ம நபர் அவரை தாக்க முயலும்போது எதிர்த்து போராடி தாக்கும் காட்சிகளில் ராகினி அதிரடி ஆக்சன் காட்டி மிரட்டி இருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் முருகா அசோக், படத்தில் அதிகமான காட்சிகள் இல்லாமல், குறைவான வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அதில் அதி வேகமாகவே நடித்திருக்கிறார்.
மனோ பாலாவின் காமெடி காட்சிகளும், ஒரு காட்சியில் லொள்ளு சபா மனோகர் வந்தாலும் இருவரும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ என மற்ற கதாபாத்திங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் . ஜுபினின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்தி அதன் பாதிப்புகளைப்பற்றி கதை எழுதி,யாரும் யூகிக்க முடியாத அளவிற்க்கு சஸ்பென்ஸாக பல திருப்பங்களுடனும் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கமர்ஷியல் கலந்த மசாலா படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் இந்தப் படத்தை விறுவிறுப்பாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், இந்த ‘ஈமெயில்’ படம் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.