‘காமி’ – (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்!

224

சென்னை:

வித்யாதர் காகிடா இயக்கத்தில் உருவான ‘காமி’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக விஸ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா,  முகமது சமத், ஹரிகா பெட்டா, மயான்க் பரக், தயானந்த் ரெட்டி, சாந்தி ராவ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,

இதில் மூன்று கதைகளை வேறு, வேறு விதத்தில் சொல்லப்பட்டுக் கொண்டே வருவதுதான்படத்தின் முக்கிய அம்சங்கள் என்றே சொல்லலாம்.  ஒருவகையில் இந்த மூன்று திரைக்கதையின் சுவாரஸ்யம் அதிகம் என்றாலும்,மூன்று வெவ்வேறு கதையை இணைத்து சொல்லப்பட்டிருக்கும்  விஷயங்களைப்பற்றி குறிப்பிடும்போது,

இதன் கதை ஆரம்பமே வாரணாசியில் தொடங்குகிறது. அங்குள்ள அகோரிகள் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் கதாநாயகன் விஸ்வக்சென்னை அவருடன் கூடவே இருக்கும் அகோரிகள் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அதற்குக் காரணம் விஸ்வக்சென்னின் உடல் மீது எந்த மனிதர்கள் தொட்டாலும் இதயம் செயலிழக்கத் தொடங்கி,  அவரது உடல்நிலை மாறி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து அவர் எழுந்து நடமாடுகிறார். இப்படிப்பட்ட விசித்திரமான உடல் தன்மையை பெற்றதற்கு கடவுளின் சாபம் தான் காரணம் என்று சக அகோரிகள் கூறுகின்றனர். இதனால் மனமுடைந்த விஸ்வக்சென், தனக்கு வந்த சாபம் என்ன? கடந்த காலம் நடந்த நிகழ்வுகள் என்ன? என்று தெரியாமல் தத்தளிக்கிறார். இந்நிலையில் அங்குள்ள ஒரு தலைமை அகோரி நீ அலகாபாத் போ.. உன்னை அழைத்து வந்து எங்கள் ஆசிரமத்தில் விட்டுச் சென்ற கேதார் பாபா அங்குதான் இருக்கிறார். அவரை நீ சந்தித்தால் உன் கடந்த காலம் பற்றி உனக்கு தெரிய வரலாம்.

உன் சாபத்துக்கு விமர்சனமும் கிடைக்கலாம் என்று கூற,  கேதார் பாபாவை தேடி அலகாபாத் செல்கிறார் விஸ்வக்சென். கேதார் பாபாவை தேடிச்சென்ற இடத்தில் அவர் இறந்து விடுகிறார் என்று தெரிய வருகிறது இதனால் ஒன்றும் புரியாமல் தவித்த விஸ்வக் சென்னிடம் கேதார் பாபா இறக்கும்போது கொடுத்த சில பொருட்களை சீடர் ஒருவர் அவரிடம் கொடுக்கிறார். அப்போது  விஸ்வக் சென்னின் சூழ்நிலையை புரிந்து கொண்ட கேதார் பாபாவின் சீடர் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை முளைக்கும் சக்தி வாய்ந்த காளான் ஒன்றை நீ பறித்து கையில் வைத்துக் கொண்டால் நீ பழையபடி மாறி விடுவாய். ஆனால் அந்த காளான் 24 மணி நேரத்தில் அழிந்து விடும் என்றும் கூறுகிறார்.  இந்த நிலையில் அந்த அதிசய சக்தி வாய்ந்த காளான் குறித்து பல வருடங்களாக ஆய்வு மேற்கொண்டிருக்கும் மருத்துவர் சாந்தினியும், அவருடன் சேர்ந்து அந்த காளானை எடுப்பதற்காக  பல ஆபத்துகள் நிறைந்த இமயமலை உச்சிக்கு செல்ல இருவரும்  பயணப்படுகிறார்கள்.

இவர்களது பயணத்தின் போது பல்வேறு ஆபத்துக்கள் வந்தாலும்,  அதையெல்லம் தாண்டி அந்த சக்தி வாய்ந்த அதிசய காளான் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அவர்கள் தேடிச்சென்ற ஒளிரும் சக்தி வாய்ந்த  காளான் அவர்களுக்கு கிடைத்ததா? இல்லையா? இது ஒரு கதை என்றாலும்,  இதனை அடுத்து தனக்கு குழந்தை பிறந்தால் தேவதாசியாக வாழ வருகிறேன் என்று கடவுளிடம் வேண்டி கொண்ட அபிநயா, தனக்கு மகள் பிறந்ததும்  தேவதாசியாக மாறுகிறார். இந்த சூழலில் தன் மகளை வேறு ஒருவரிடம் வளர்க்க சொல்லி கொடுத்து விட, அங்கு வயதுக்கு வருகின்ற சமயத்தில்அந்த சிறுமியை தேவதாசியாக்க முயலும் கயவர்கள் சிலரிடம் இருந்து காப்பாற்ற போராடி வருகிறார்.  அந்த சிறுமியை கயவர்களிடமிருந்து காப்பாற்றினாரா? இல்லையா? இது ஒரு பக்கம் இருக்க, சில சிறுவர்களை ஜெயில் போன்ற ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்து, அவர்களது மூளையை பிரித்து சில மருத்துவர்கள் ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஏன் இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்? இது போன்ற மூன்று கதைகளை வேறு, வேறு விதத்தில் சொல்லப்பட்டுக்கொண்டே வருவதுதான் ‘காமி’ – (தெலுங்கு) படத்தின் மீதிக் கதை..

அகோரி சங்கராக வரும் விஸ்வக் சென் தனது நடிப்பை நேர்த்தியாகவும்,சிறப்பாகவும் வெளிபடுத்தி அசர வைத்து இருக்கிறார்.  மருத்துவர்ர் ஜானவியாக வரும் சாந்தினி சௌத்ரி, சிடி 333 ஆக வரும் முகமது சமத், தேவதாசி துர்காவாக வரும் அபிநயா, அவரது மகள் உமாவாக வரும் ஹரிகா பெட்டா மற்றும்  மயான்க் பரக், தயானந்த் ரெட்டி, சாந்தி ராவ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தை முழுவதுமாக உள்வாங்கி, ரசித்து, எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

விஸ்வநாத் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவு, ராகவேந்திர திருனின் படத்தொகுப்பு, ஸ்வீகர் அகஸ்தியின் பாடலிசை, நரேஷ் குமரனின் பின்னணி இசை ஆகியவை இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பலம் சேர்த்துள்ளன.

மூன்று கதைகளை இணைத்து மூன்று விதமான உணர்வுகளை வெளிப்படுத்தி,  வேறு வேறு விதமாக கதை மாறி சென்றாலும்,  ரசிகர்களை படத்தோடு ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர் வித்யாதர் காகிடா, சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட காளானை மையமாக வைத்துக்கொண்டு ஆங்காங்கே சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், திரைக்கதையின் வேகத்தை படத்திற்கு சரியான முறையில்  ஈடு கொடுத்து மிகுந்த அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து இப்படைப்பை மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில் ‘காமி’ என்ற இந்த தெலுங்கு படத்தை அனைவரும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.