‘அக்காலி’ திரைப்பட விமர்சனம்!

125

CHENNAI:

படம்: ‘அக்காலி’

நடிப்பு: நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், சுயம்சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தரணி பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மஷிஹா சபீர் மற்றும் பலர்.

தயாரிப்பு: பி விக்னேஸ்வரன்

ஒளிப்பதிவு: கிரி மர்பி

இயக்கம்: முகமத் ஆசிப் ஹமீது

பி ஆர் ஒ: நிகில் முருகன்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கிறிஸ்துவ சிமெண்டரியில் புதைக்கப்படும் இடத்தில் இறந்த உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதை பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள்.. என காவல்துறை அதிகாரியான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த கிறிஸ்துவ சிமெண்டரியில் போலீஸ் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல அதிர்ச்சிகமரான உண்மைகள் தெரிய வருகிறது.

சாத்தானை வழிபடும் குழுவினர், அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது பற்றியும் மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றியும் தெரிய வருகிறது. உயர் அதிகாரி தலைவாசல் விஜய் தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும் ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம சம்பவங்கள் நடைபெறுகிறது. இறுதியில் அனைத்து மர்ம சம்பவங்களுக்கு மத்தியில் சாத்தானை வழிப்படும் கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறை அதிகாரி ஜெய் குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதுதான் இந்த  ‘அக்காலி’ படத்தின் மீதிக்கதை.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய்குமார் தனது நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்., கிறிஸ்துவ மத போதகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர் இரண்டு வேடத்தில் நடித்து அசத்தி இருக்கிறார், காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக் கதைக்கு ஏற்றவாறு  மிக சிறப்பாக பயணித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிரி மர்பி, ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கதையை புரிந்துக் கொண்டு அதற்கேற்றவாறு நேர்த்தியாக பயணித்து  இருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிஷ் மோகனின் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் அருமை.

அக்காலி என்பது பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்படும் வழக்குமொழி. இதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள்.இந்தப் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் படம் எப்படி இருக்கும் என்று அனைவரும் நினைப்பார்களோ அப்படியே அமைந்திருக்கிறது படம். இப்படத்தை இயக்குனர் முகமத் ஆசிப் ஹமீது, சுடுகாடு,சாத்தான்,நரபலி என்று ஏகப்பட்ட அம்சங்களை மையமாக வைத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தைக் கொடுக்க முனைந்திருக்கிறார். சாத்தான்களை வழிபடுபவர்களின் நரபலி சம்பவங்களை மையமாக வைத்து  விறு விறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில், இந்த ‘அக்காலி’  க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.