சென்னை;
ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ரூத், வினோத் சாகர், விஷ்வாந்த், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின், ஏ கே, திவ்யா கணேஷ் ம்ற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ’பயமறியா பிரம்மை’ இப்படத்தை ராகுல் கபாலி எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,
25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்த ஒரு மோசமான கொலைக் குற்றவாளி ஜெகதீஷின்(ஜேடி) வாழ்க்கைக் கதையைத் தேர்வு செய்கிறார் எழுத்தாளர் வினோத்சாகர். கொலை குற்றவாளியான ஜேடி, சிறைச்சாலையில் பூட்டிய சிறைக் கதவுகளுக்கு பின்னால் அமர்ந்திருக்க, அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக வெளியிட நினைத்த வினோத்சாகர், சிறைச்சாலையில் அவரை சந்தித்து அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை பற்றி உரையாடுகிறார்.
1978ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்து சிறைச்சாலைக்கு வந்த ஜேடியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக வெளியிட முயற்சி செய்து அவர் செய்த கொலைகளைப் பற்றியும் சில முக்கிய உண்மையான சம்பவங்களை பற்றியும் ஜே டியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.. அப்போது வினோத் சாகர் நாம் எழுதும் புத்தகங்கள் மனிதர்களிடம் சென்றால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேடியிடம் கூறுகிறார். ஜேடி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை கூறிக் கொண்டிருக்கும்போது அந்தக் காட்சிகள் அப்படியே திரையில் பிரதிபலிப்பது தான் ‘பயமறியா பிரம்மை’ என்ற படத்தின் மீதி கதை.
இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான கொலைக் குற்றவாளி ஜெகதீஷாக அறிமுக நாயகன் ஜேடி கதையின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். எனினும் ஜெகதீஷ் கதாபாத்திரம் அவரால் மட்டுமல்ல, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் என ஆறு பேர் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு, வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை திரையில் மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டு சிறப்பான நடிப்பை வெளிக் காட்டியிருக்கிறார்கள்.
மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலனாக நடித்திருக்கும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக இயல்பான நடிப்பின் மூலம் நிறைவு செய்து இருக்கிறார்கள்.
பிரவின் மற்றும் நந்தாவின் நேர்த்தியான ஒளிப்பதிவில் பெரும்பாலான காட்சிகள் இருள் சூழ்ந்த நிலையிலேயே படமாக்கி நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கே -வின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி. இப்படத்தின் ஆரம்பத்தில் கதை சொல்லத் தொடங்கும்போதே வித்தியாசமான முறையில் ஆரம்பித்து, இது வழக்கமான படம் அல்ல என்பதை உணர்த்தியிருக்கிறார். ஆங்கில நாவல்களை மையமாக வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் அதிகம் வசனம் பேசி உரையாடல் கொண்டதாகவே இருக்கும். அதுபோல இந்த படத்தையும் ஒரு புத்தகத்தை போலவே ஒவ்வொரு சேப்டராக படமாக்கி ஒரு கிரைம் நாவலை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், இந்த ‘பயமறியா பிரம்மை’ படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.
.