சென்னை:
ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ், சனியா ஐயப்பன், ஷரஃப் தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, ரவி ராகவேந்திரா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், மவுரிஷ், சாமுவேல் ராபின்சன், காக்கா கோபால், பொற்கொடி, பரம், சந்தானபாரதி, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “சொர்க்கவாசல்” இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஆர்.ஜே பாலாஜி, தன் தாயுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் இட்லி, வடை, தோசை என ஒரு சிறிய கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த இட்லி கடையை மாற்றி ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவுடன் ஆர் ஜே பாலாஜி வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் கொலை வழக்கு சம்பந்தமாக திடீரென்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, செய்யாத கொலைக்கு குற்றவாளியாக்கப்படும் ஆர்ஜே பாலாஜி, சென்னை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்படுகிறார். மத்திய சிறைச்சாலையில் மிகப்பெரிய தாதாவான செல்வராகவன் மத்திய சிறைச்சாலையில் அனைத்து கைதிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.இந்த நிலையில், மத்திய சிறைச்சாலையில் புதிதாக வரும் சிறைத்துறை அதிகாரிக்கும், தாவாவான செல்வராகவனுக்கும் மோதல் ஏற்படுகிறது.
தான் குற்றம் அற்றவன் என்பதை நிரூபித்து விடுதலையாக வேண்டும் என்று நினைக்கும் ஆர்ஜே பாலாஜி, அந்த சிறைத்துறை அதிகாரியிடம் உண்மையில் என்ன நடந்தது என்பதை விவரித்து சொல்கிறார். அதனை புரிந்துக் கொண்ட சிறைத்துறை அதிகாரி, ஆர்ஜே பாலாஜியை வைத்து, மிகப்பெரிய தாவாவான செல்வராகனை தீர்த்துக் கட்டுவதற்கு திட்டம் தீட்டுகிறார். ஒரு நாள் சமையல் அறையில் இருக்கும் ஆர்ஜே பாலாஜியை அழைத்து ஒரு பவுடரைக் கொடுத்து தாதாவான செல்வராகவனின் உணவில் கலந்துக் கொடுக்க சொல்கிறார். சிறைத்துறை அதிகாரியின் திட்டம் நிறைவேறாமல் அங்கு வேறு விதமாக சில நிகழ்வுகள் நடந்துவிட, அதனால் கைதிகளுக்கும், சிறையில் உள்ள காவல்துறையினருக்கும் இடையே சிறைச்சாலையில் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்படுகிறது. அந்த கலவரத்தினிடையே ஆர்ஜே பாலாஜி சிக்கிக் கொள்கிறார். இந்த கலவரத்திற்கு என்ன காரணம்… இதிலிருந்து ஆர் ஜே பாலாஜி உயிர் பிழைத்து தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் “சொர்க்கவாசல்” படத்தின் மீதிக் கதை.
பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக அப்பாவி இளைஞராக ஆர் ஜே பாலாஜி மிகவும் சிறப்பாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் அருமையாக நடித்துள்ளார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு வருபவர், அந்த சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சிகளில் யதார்த்தமாக நடித்து படம் பார்ப்பவர்களை கவர்கிறார். இப்படத்தின் கதைகேற்றவாறு அந்த கதாபாத்திரத்தை தாங்க கூடிய ஒரு நடிகராக வாழ்ந்து இருக்கிறார்.
பிரபல தாதா கதாபாத்திரத்திற்க்கு ஏற்ற குரல் மற்றும் உட்ல்மொழியோடு இருக்கிறார் செல்வராகவன். அவருடைய கதாபாத்திரம்தான் கதையின் மைய கரு என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ஷரப்யுதீன்,அதிகாரத்துக்கான அடையாளத்துடன் இருக்கிறார். சிறையில் துணை அதிகாரியாக நடித்திருக்கும் கருணாஸ், விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், டைகர் மணியாக நடித்திருக்கும் ஹக்கிம்ஷா,முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பாலாஜி சக்திவேல், சீலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்தோணிதாசன் தேசுதாஸ், ரவி ராகவேந்திரா, கெண்ட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாமுவேல் ராபின்சன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கேற்ப அபாரமாக நடித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரின்ஸ்ஆண்டர்சன், கதைக்கு தகுந்தவாறு சிறையில் நடக்கும் காட்சிகளை உணர்த்த மிக சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்து அனைவரும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியரின் இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.
கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஷ்வநாத் ஆகியோரின் எழுத்துகள் கருத்து வலிமை மிக்கதாக அமைந்திருந்தாலும் சில காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது.
1999 ஆம் ஆண்டு காலகட்டங்களில் சென்னை சென்ட்ரலில் உள்ள மத்திய சிறைச்சாலையில் ராயபுரம் காசிமேடு பகுதியில் பிரபல தாதாவாக விளங்கிய ஃபாக்ஸர் வடிவேலு இறந்த பிறகு கைதிகளுக்குள் நடந்த மிகப்பெரிய கலவரத்தை மையமாகக் கொண்டு கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத். தன் முதல் படத்திலேயே சமுதாய அக்கறையுடன் கூடிய அழுத்தமான மற்றும் ஆழமான விசயங்களைக் கையிலெடுத்து அவற்றை திருப்திகரமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘சொர்க்கவாசல்’ இளைஞர்கள் ரசிக்கக் கூடிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.