சென்னை:
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, தீபா, பிரவீன் குமார், டேனியல் அநி போப், பல கருப்பையா, வெற்றி குமரன், அருள்தாஸ், ஸ்வேதா, கிங்காங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்தான் “‘ராஜாகிளி'” சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்தை உமாபதி ராமையா இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
நடுத்தர மற்றும் பணக்கார குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்டால் அழுக்கு தலை முடியுடன் பல நாட்கள் குளிக்காமல் அழுக்கு வேட்டி சட்டையுடன் ரோட்டில் திரிந்துக் கொண்டிருப்பார்கள். அப்படி மனநல பாதிப்படைந்தவர்களை காப்பாற்றி அவர்களை பராமரிக்கும் காப்பகத்தை நடத்தி வருகிறார் சமுத்திரக்கனி. ஒரு நாள் காரில் அவர் செல்லும்போது வழியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்,அழுக்கு உடையுடன் பல நாட்கள் குளிக்காமல் பெரிய தாடி முடியுடன் குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை கண்டு, அவரை அரவணைத்து தனது காப்பகத்திற்கு அழைத்து வருகிறார்.
அவரை குளிக்க வைத்து பசியை போக்கி பராமரிக்கும்போது அவரது பையில் ஒரு டைரி இருப்பதைக் கண்ட சமுத்திரகனி அதில் என்ன இருக்கிறது என்பதை படிக்கிறார். தொழில அதிபர் முருகப்பா சென்ராயர் என்ற செல்வந்தர்தான் தம்பி ராமையா என்பதை தெரிந்துக் கொள்கிறார். சமுதாயத்தில் உயர்ந்த மதிப்புடன் இருந்த நிலையில், அவரை மனைவி சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார். இந்நிலையில் முருகப்பா கம்பெனியில் வேலை கேட்டு வந்த பெண்ணுடன், வாக்கிங் போகும் வழியில் தம்பி ராமையாவுக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டு அவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு பல பெண்களுடன் நட்பு ஏற்பட்டு பணத்தை வைத்து எது வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று எண்ணியதால் தம்பி ராமையவின் வாழ்க்கை பாதை வேறு திசையில் செல்கிறது.
இதனால ஒரு கொலை வழக்கில் போலீஸ் பிடியில் சிக்கும் தம்பி ராமையா தண்டனை..பெற்று நடுத்தெருவில் பைத்தியம் போல் அலைகிறார். பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் திறந்து பார்த்தால் பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடந்து இருக்கும்.அப்படி ஒரு செல்வந்தரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் ‘ராஜாகிளி’.
மனநலம் பாதிக்கப்பட்டவராக அறிமுகமாகும் தம்பி ராமையா, அழுக்கு படிந்த உடலமைப்புடன் உள்ள கதாபாத்திரத்தில் இதுவரையில் நடித்ததில்லை என்றாலும் தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் பிச்சைக்காரன் கதபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். செல்வந்தர் கதாபாத்திரத்தில் அவருடைய ஆட்டம் பாட்டம் எல்லாம் உற்சாகத் துள்ளலாக அமைந்திருக்கிறது.தற்காலக் கதாநாயகர்களே பொறாமைப்படும் வண்ணம் தோழிகளோடு கும்மாளம் போடுகிற காட்சிகளில் நடிப்பு அபாரம்.
தம்பிராமையாவின் முதல் மனைவியாக தீபா,இரண்டாம் மனைவியாக சுபா இளம்காதலியாக சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முதல் மனைவி தீபா கதாபாத்திரம் உளவியல் ரீதியாக அணுகப்பட்டிருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாகவராக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் சிறந்த நடிப்பும், அவரது செயல்பாடுகளும் அனைவரையும் நெகிழ வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
தம்பிராமையாவே இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கலாம்.சாய் தினேஷ் பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.
கேதார்நாத் – கோபிநாத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.பகட்டான வாழ்வையும், மன நலம் குன்றிய வாழ்க்கையையும் இவை இரண்டையும் காட்சிகளில் மிக சிறப்பாக வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா படத்தை இயக்கி இருக்கிறார். தற்போதுள்ள டிரெண்டுக்கான படமாக இல்லாமல் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் காலத்து கதையாக இயக்கியிருக்கிறார். பெண்களிடம் உள்ள சபல புத்தியினால் ஒரு மனிதன் எப்படிப்பட்ட அவலங்களை சந்திக்கிறார் என்பதை மிக சிறந்த முறையில் இந்த காலத்து ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாடம் புகட்டியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ராஜா கிளி’ தற்போதுள்ள பெண்களுக்கான படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.