சென்னை:
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே இயக்கியிருக்கும் படம் ‘ஃபயர்’. இப்படத்தில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி, எஸ்.கே.ஜீவா, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
நமது நாட்டில் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்து நாசமாக்குவது பல ஆண்களுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. பலவீனமான பெண்களை வீழ்த்தி காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டும் காம கொடூர ஆண்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் பலதரப்பட்ட பெண்களின் துன்பங்களை நாம் பத்திரிக்கைகளில் படித்து இருக்கிறோம்.அதுபோல் ஒரு பிசியோதெரபி மருத்துவரின் காமலீலைகளைப் பற்றி தத்ரூபமாக வடிவமைத்து, ‘ஃபயர்’ என்ற பெயரில் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது.
பிசியோதெரபிக் செய்யும் மருத்துவராக சிறந்து விளங்கும் பாலாஜி முருகதாஸ், தன்னை நாடி வருகின்ற அனைவருக்கும் நல்ல முறையில் மருத்துவம் செய்து பேரும் புகழும் பெற்று விளங்குகிறார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் இவரது தந்தை தன் மகன் பாலாஜி முருகதாஸை காணவில்லை என்று காவல் துறையில் புகார் கொடுக்கிறார். இந்த புகாரை ஏற்று காவல் துறை அதிகாரியான ஜேஎஸ்கே விசாரிக்க தொடங்குகிறார். அப்போது பலரும் பாலாஜி முருகதாஸை நல்லவர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களது பேச்சை நம்பாத ஜேஎஸ்கே தீவிர விசாரணையில் ஈடுபடும்போது, ஒரு கட்டத்தில் பாலாஜி முருகதாஸ் காம லீலைகள் செய்வதில் வல்லவர் என்று தெரிய வருகிறது. அவரிடம் சிகிச்சை பெறும் பெண்களிடம் பல ஆசை வார்த்தைகளை கூறி தன் காதல் வலையில் விழ செய்து, அழகு மன்மதனாக வலம் வந்து இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
அவர் பல பெண்களை மயக்கி பலவந்தமாக பலாத்காரம் செய்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசமான குற்றவாளி என்று காவல்துறை செய்த விசாரணையிலும் தெரிய வருகிறது. இதற்கிடையே ஒரு பெரியவர் பிசியோதெரபி மருத்துவர் பாலாஜி முருகதாஸை கொன்றுவிட்டதாக அந்த காவல் நிலையத்தில் சரண் அடைகிறார். இந்த சமயத்தில் பாலாஜி முருகதாஸின் பெற்றோர் தங்கள் மகன் உயிரோடு இருப்பதாகவும், தங்களிடம் தொலைபேசியில் பேசியதாகவும், காவல்துறையினரிடம் சொல்கிறார்கள். அதன் பிறகு காவல்துறையின் விசாரணை வேகம் எடுக்க தொடங்குகிறது. பாலாஜி முருகதாஸ் காவல்துறைக்கு பயந்து எங்கேயாவது தப்பி சென்று விட்டாரா? அல்லது அவரது பெற்றோர் பொய் சொல்கிறார்களா? உண்மையிலேயே அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்விகளுக்கு பதில் என்ன என்பதை’ ஃபயர்’ படம் பதில் சொல்லும்.
காசி என்ற பிசியோதெரபி மருத்துவர் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் பாலாஜி முருகதாஸ். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் முன் வந்து இருக்க மாட்டார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.. ஆனால் பாலாஜி முருகதாஸ் தைரியமாக இந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இப்படத்தின் முதல் பாதியில் நல்ல ஒரு உன்னதமான மனம் படைத்த மருத்துவராகவும், இரண்டாம் பாதியில் காமலீலை செய்யும் காதல் மன்னன் ஆகவும் பல பெண்களை தன் காதல் வலையில் விழ வைத்து அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசமான வில்லனாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இவர் மருத்துவர் என்பதால் பல பெண்கள் இவரது காதல் வலையில் விழுந்து ஏமாறும் பெண்கள் எப்படி எல்லாம் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது இந்த படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியும். பல பெண்களை ஏமாற்றி அவர்களை கட்டி அணைத்து கற்பை சூறையாடும் போது பாலாஜி முருகதாஸின் நடிப்பு சூப்பர். பல மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை எப்படி எல்லாம் வசியம் செய்து தங்களுக்கு ஏற்றவாறு ஆசை வார்த்தைகளை கூறி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை இப்படம் நன்றாக புரிய வைக்கிறது. உண்மையிலேயே நல்லவர் போல் ந்டித்து தன்னிடம் சிகிச்சைக்கு வரும் சாந்தினி தமிழரசன்,ஷாக்சி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி, ஆகியோரை கட்டி அனைத்து கட்டிலில் புரட்டி எடுக்கும் காட்சிகள் நம்மை அதிர வைக்கிறது. பாலாஜி முருகதாஸ் தன்னுடைய இமேஜ் கெட்டு விடும் என்று நினைக்காமல் தைரியமாக எதற்க்கும் கவலைப்படாமல் இப்படத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.
பாலாஜி முருகதாஸின் காதல் வலையில் சிக்கிக் கொண்ட நான்கு பெண்களாக சாந்தினி தமிழரசன் சாக்ஷி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான் இவர்கள் அனைவரும் கதைக்கு தகுந்தவாறு கவர்ச்சியை தாறுமாறாக காட்டி படம் பார்க்கும் ரசிகர்களை கிரங்க வைத்திருக்கிறார்கள். இந்த கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை அள்ளித் தெளித்து இருக்கிறார்கள். அந்த கால மலையாள படங்களில் இது போன்ற கவர்ச்சிக்கரமான காட்சிகளை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு ஓடி வருவார்கள். அது போல் தான் இந்த படத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஓடி வருவார்கள் என்பது சொன்னால் மிகையாகாது.
இவர்களுடன் காவல்துறை ஆய்வாளர் சரவணன் ஆக ஜே எஸ் கே படம் முழுவதும் கம்பீரமாக தனது நடிப்பை மிகவும் சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார். ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருப்பாரோ அதுபோல் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார் ஜே எஸ் கே.
மற்றும் இப்படத்தில் சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், ,குழந்தை மனோஜ் ஆகியோர் நேர்த்தியுடன் கதைக்கு ஏற்றவாறு மிக சிறப்பாக நடித்துள்ளனர்.
இசை- டிகே, ஒளிப்பதிவு -சதீஷ் ஜி பாபு, வசனம் எஸ்.கே. ஜீவா,எடிட்டிங்- சி எஸ் பிரேம்குமார், சண்டை-தினேஷ் காசி, கலை-சுசி தேவராஜ், நடனம்-மனஸ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்திற்கான தத்ரூபமான காட்சிகளுக்கு தங்களது முழு பங்களிப்பை கொடுத்து படத்திற்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
2020 ஆண்டில் நாகர்கோவிலில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காசி என்பவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் அடைத்த விவரம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், அதை ஒரு நல்ல கதையாக வடிவமைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் இயக்குனர் ஜேஎஸ்கே இயக்கி இருப்பதை கண்டிப்பாக பாராட்டலாம்.
மொத்தத்தில் “ஃபயர்” படம் இளவட்ட ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
ரேட்டிங்: 3/5.
RADHAPANDIAN.