சென்னை:
நைசாட் மீடியா வொர்க்ஸ் சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரித்திருக்கும் ‘எமகாதகி’ படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். இப்படத்தில் ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா ம்ற்றும் பலர் நடித்திர்ருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தஞ்சாவூரில் உள்ள கிராமத்தில், கோவில் திருவிழாவை அந்த ஊர் தர்மகர்த்தா ராஜுராஜப்பன் முன்னிலையில் மிக சிறப்பாக கொண்டாட முடிவு செய்து கிராமத்தில் உள்ள அனைவரும் இணைந்து ஒற்றுமையாக திருவிழாவை நடத்த முற்படுகின்றனர். , ஊர் தர்மகர்த்தாவான ராஜுராஜப்பன் தனது மனைவி கீதா கைலாசம், மகன் முத்து, மருமகள் ஹரிதா, மகள் ரூபா கொடுவாயூர் ஆகியோருடன் ஒற்றுமையாக தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். தனது மகள் ரூபா கொடுவாயூர் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டாலும், கோபப்பட்டலும் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும். அந்த சமயத்தில் அவருக்கு சுவாச கோளாறு மருந்தை உடனடியாக கொடுத்து சரி செய்து விடுவார்கள்.
இந்த நிலையில் ஊர் திருவிழாவை கொண்டாடும் விஷயத்தை கேள்விப்பட்ட தர்மகர்த்தாவின் மகன் முத்து பதட்ட்ம் அடைகிறார். அவரது பதட்டத்திற்கு காரணம் கோவில் லாக்கரில் உள்ள தங்க கிரீடத்தை திருடி அதனை அடகு வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்ததால் நஷ்டமடைகிறார். கோவில் திருவிழா நடக்கும் போது அதை எப்படியாவது மீட்டு கோவில் லாக்கரில் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கிறார். கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தந்தை ராஜு ராஜப்பன் தனது வீட்டுக்கு மிகுந்த கோபத்துடன் வருகிறார். அவரது கோபத்திற்கு காரணம் என்னவென்று கேட்கும் அவரது மனைவியை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அப்போது அவரது மகளும் ‘எதற்காக அம்மாவை அடிக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு, மகளையும் கன்னத்தில் அறைகிறார் அதனால் கோபித்துக் கொண்டு மாடிக்கு செல்லும் ரூபா கொடுவாயூர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
ரூபா கொடுவாயூர் தற்கொலை செய்துக் கொண்டதைக் கண்டு, அவர் பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். இந்த விஷயம் வெளியேதெரிந்தால் அவமானமாகி விடும் என்று வீட்டில் உள்ளவர்கள் இந்த தற்கொலையை மறைத்து விடுகின்றனர். தங்களது குடும்ப கௌரவம் பாதிக்கும் என்று அங்குள்ள கிராமத்தில் உள்ள அனைவரிடமும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரூபா கொடுவாயூர் இறந்த பிணத்தை வெளியில் கொண்டுவர அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தூக்கும் போது தூக்க முடியாமல் தவிக்கின்றனர். பல பேர் இணைந்து அந்த பிணத்தை தூக்கினாலும் அந்த பிணத்தை வெளியே கொண்டு வர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த பிணத்தை வெளியே கொண்டு வருவதற்காக ஒரு பூஜாரி அங்கு வந்து பூஜை செய்கிறார்.
அவர் பூஜை செய்யும்போது அந்த பிணம் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. இதனைக் கண்டு பயந்து ஓடி விடுகிறார் அந்த பூசாரி. இன்னும் சிலர் அந்தப் பிணத்தை தூக்க முயற்சிக்கும் போது அந்த பிணம் சில அசைவுகளை கொடுத்ததால் அனைவரும் வெளியே வந்து விடுகின்றனர். திடீரென்று அந்த பிணம் எழுந்து நின்று விடுகிறது. இந்த சூழ்நிலையில் இறந்து போன அந்த பிணத்தை இடுகாட்டுக்கு எடுத்து சென்று முறையாக இறுதிச் சடங்கு செய்து எரித்தார்களா? இல்லையா? என்பதுதான் “ஏமகாதகி” படத்தின் மீதி கதை.
இப்படத்தில் எமகாதகி லீலாவாக புதுமுகம் ரூபா கொடுவாயூர் நடித்து இருக்கிறார். இவர் தனது அளவான, எளிமையான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார்., இப்படத்தில் நடிப்பதற்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் தத்ரூபமாக ஒரு உண்மையான கிராமத்து பெண் போல நடித்து அசத்தி இருக்கிறார். அவர் தூக்கு போட்டு இறந்து விடுகின்ற காட்சியிலிருந்து, பிறகு பிணமாகத்தான் படம் முழுவதுமே நடிக்கிறார். உயிரற்ற உடலாக அவர் நடித்து இருந்தாலும் படம் பார்க்கும் நம் மனதை கலக்கி விடுகிறார். தமிழ் சினிமாவில் தனது உன்னதமான நடிப்பின் மூலம் இப்படத்தில் பிணமாக தத்ரூபமாக அனைவரையும் கலக்கிய ரூபா கொடுவாயூருக்கு தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரூபாவின் காதலனாக நடித்திருக்கும் நரேந்திர பிரசாத், சில காட்சிகளில் வந்தாலும் புதுமுக நடிகராக இருந்தாலும் அவரின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
அம்மா சந்திராவாக கீதா கைலாசம் மகளை கண்டிக்கும்போதும், இறந்த தன் மகளின் பிணத்தை பார்த்து இறப்பை தாங்க முடியாமல் கலங்கி அழும்போதும், பிணம் அவரது கையில் விழும்போதும் தாயின் பாசத்தில் நடிப்பில் நம்மை நெகிழ வைத்துவிடுகிறார்.
தந்தையாக நடித்திருக்கும் ராஜு ராஜப்பன், அண்ணனாக நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்திருக்கும் ஹரிதா ஆகியோருடன் ஊர் மக்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், ஒரு கிராமத்து சூழ்நிலையை உணர்ந்து இரவுக் காட்சிகளை மிக சிறப்பாக அதிகமாக உழைத்து காட்சிகளை படமாக்கி இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக தெரிகிறது.
இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜ், இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து, அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து எதிர்பாராத சில விஷயங்களை புகுத்தி, சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு அறிவுரை சொல்லி, மிகுந்த அக்கறையுடன் கையாண்டிருக்கும் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், சிறந்த படைப்பாக இந்த படத்தை இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த ‘எமகாதகி’ அனைவரையும் ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.