“ட்ராமா” (TRAUMA) – திரைவிமர்சனம்!

57

சென்னை:

விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, பிரதீப் கே விஜயன், ஈஸ்வர், நிழல்கள் ரவி, வையாபுரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “ட்ராமா” இந்தப் படத்தை  எழுதி, இயக்கி இருப்பவர்  தம்பிதுரை மாரியப்பன்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ட்ராமா என்பதற்கு பாதிப்பு என்று அர்த்தம்.. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்படும் பாதிப்பை இப்படத்தின் கதை விளக்குகிறது.

விவேக் பிரசன்னா- சாந்தினி தம்பதியர்களுக்கு திருமணம் செய்து கொண்ட பிறகு நீண்ட நாட்களாகவே குழந்தை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சாந்தினி கர்ப்பம் அடைகிறார். அவர் கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தில் இருக்கும் போது மர்ம மனிதன் ஒருவன் சாந்தினிக்கு போன் மூலம் உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை உன் கணவன் விவேக் பிரசன்னா கிடையாது என்று கூறி மிரட்டுகிறான். அந்த சமயத்தில் சாந்தினியின் போன் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகிறது. அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன சாந்தினியிடம் ஐம்பது லட்ச ரூபாய் பணத்துடன் வருமாறு அந்த மர்ம மனிதன் மிரட்டுகிறான். கர்ப்பமடைந்த சாந்தினி அந்த மர்ம மனிதன் கேட்ட ஐம்பது லட்ச ரூபாயை கொடுத்தாரா?

இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா ரவி தனது காதலன் பிரதோஷை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவருடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பம் அடைகிறார். இந்த சூழ்நிலையில் காதலன் பிரதோஷை தேடி  பூர்ணிமா ரவி  அலையும்போது தான் ஏமாற்றப்பட்டதை உணருகிறார். தன் காதலன் பிரதோஷ் ஒரு மோசமான ஏமாற்றுக்காரன் என்பதை தெரிந்து கொண்டு அவனுடன் வாழக்கூடாது என்று முடிவெடுக்கிறார். தன் மகள் நிலையை அறிந்து மாரிமுத்து குடும்பம் நொந்து போகிறது. மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா ரவி பிரதோஷ்  மூலம் ஏற்பட்ட கருவை கலைத்தாரா?

கார்களை திரு டிவிற்கும் இரண்டு நண்பர்களிடம் ஆசை வார்த்தை காட்டி, கார் மெக்கானிக் ஈஸ்வர் விலை உயர்ந்த கார்களை திருடி வாருங்கள். அதற்கு நல்ல பணம் தருகிறேன் என்று கூறுகிறார். அப்போது மெக்கானிக் சொன்ன வார்த்தைகளை ஏற்று  காஸ்ட்லியான கார்களை திருட இருவரும் முயற்சிக்கின்றனர். அந்த சமயத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பி எம் டபிள்யூ காரை இருவரும் திருடி செல்கிறார்கள். அந்த சமயத்தில் போக்குவரத்து காவல்துறையினர் அந்த ரோட்டில் வரும் கார், மோட்டர் பைக் போன்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர்.  அப்போது இந்த கார் திருடர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்களின் காரை சோதனை செய்யும் காவல்துறை கார்‌ டிக்கியில் ஒரு பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இந்த கார் திருடர்கள் செய்யாத கொலையை செய்ததாக சொல்லி போக்குவரத்து போலீசார் கைது செய்ய முயலும்போது அவர்கள் ஓடி விடுகின்றனர். அந்த கார் திருடர்கள் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார்களா?

இந்த மூன்று கதைகளையும் ஒன்றிணைத்து அதன் பிறகு மூன்று முடிச்சுகளையும் அவிழ்ப்பதுதான் ‘ட்ராமா’ படத்தின் மீதிக் கதை.

குழந்தை பாக்கியம் இல்லாத கணவர் சுந்தர் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார். வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு மூலம் தன் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றவாறு சிறப்பாக உணர்வுகளை காட்டி  அசத்தி இருக்கிறார்.

அவரது மனைவி கீதாவாக சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார். குழந்தை இல்லை என கவலைப்படுவது, கர்ப்பம் தரித்ததும் மகிழ்ச்சியடையும்போதும் நடிப்பில் கலக்கி இருக்கிறார்.

பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் செல்வி கதாபாத்திரத்தில் ’பிக்பாஸ் தமிழ்’ புகழ் பூர்ணிமா ரவியும், அவரை காதலிக்கும் ஜீவா கதாபாத்திரத்தில் பிரதோஷும் நடித்திருக்கிறார்கள். இருவரும் பொருத்தமான ஜோடியாக வலம் வருகிறார்கள். தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

விவேக் பிரசன்னாவின் நண்பராக வரும் ஆனந்த் நாக் மிக சிறப்பாக அனைவரின் கவனத்தை ஈர்த்து நடித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ், மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், வையாபுரி, நிழல்கள் ரவி, ஈஸ்வர், ரமா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான், பின்னணி இசை இந்த கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகளின் தன்மையை உணர்ந்து படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.

மூன்று க்ரைம் கதைகள், அவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு புள்ளி என்ற அந்தாலஜி வகைப்பட்ட கதையை எந்தவித குழப்பமும் இல்லாமல், நேர்த்தியாகவும், ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில்  எதிர்பாராத திருப்பங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன். மூன்று கிரைம் கதைகளை தனித்தனியே வளர்த்தெடுத்து, முடிச்சுகள் நன்றாக இறுகியபின் அவற்றை ஒரு புள்ளியில் ஒன்றிணைத்து இறுதிக்க்ட்ட காட்சிகளை நகர்த்தும் ’ஆந்தாலஜி’ வகைப் படம் என்பதால் இதற்கு பொருத்தமாக ‘ட்ராமா’ (TRAUMA) என்று பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குனர். அவருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘ட்ராமா’  படத்தை அனைவரும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.