சென்னை:
‘வீர தீர சூரன் 2’ படத்தில் கதா நாயகனாக விக்ரம் நடிக்க, எஸ் ஜே சூர்யா, சுராஜ், தூஷ்ரா விஜயன், மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். எஸ் யு அருண்குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மதுரையில் உள்ள ஒரு ஊரில் திருவிழாவை விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்த ஊரின் தலைவர் பிருத்வி, அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் குடும்பத்தார் அனைவரும் திருவிழாவில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யா கேங்ஸ்டராக இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அவரது தந்தை பிருத்திவி இருவரையும் என்கவுண்டர் செய்வதற்காக முயற்சித்து வருகிறார். அந்த நேரத்தில் 8 வயது மகளுடன் வரும் ஒரு பெண்மணி காணாமல் போன கணவனை தேடி அங்கு வந்து கணவன் எங்கே என்று சுராஜ் வெஞ்சரமூடுவிடம் பிரச்சனை செய்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சுராஜ் வெஞ்சரமூடு அந்த பெண்ணை அடித்து விரட்டி விடுகிறார்.
அதே ஊரில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார் நாயகன் விக்ரம். இதற்கு முன் பெரிய ரவுடியான பிருத்விராஜ் கேங்கில் முக்கிய நபராக இருந்து வெட்டுக்குத்து என வலம் வந்த விக்ரம், ரவுடிசம் வேண்டாம் என தனது குடும்பத்துடன் மளிகை கடை நடத்தி வருகிறார். தன் மகன் சுராஜ் வெஞ்சரமூடுவைக் கொல்ல நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவைக் எப்படியாவது கொல்லவேண்டும் என்று விக்ரமை நாடி வருகிறார் பிரிதிவிராஜ். ஆனால் காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவை கொலை செய்வதற்கு நாயகன் விக்ரம் ஒப்புக்கொள்ளவில்லை. முதலில் இதற்கு சம்மதிக்காத விக்ரம் பிறகு பிரிதிவிராஜின் பேச்சை தட்ட முடியாமல் எஸ்.ஜே சூர்யாவை போட்டுத்தள்ள பாலாஜியின் உதவியுடன் கிளம்புகிறார்.
இதனிடையே காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவை கொல்ல முயலும் சமயத்தில் எதிர்பாராத விதமாக எஸ்.ஜே சூர்யாவை, விக்ரம் சந்திக்க நேரிடுகிறது. பிருத்விராஜ், அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடு இருவர் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தால், உன் குடும்பத்தை காப்பாற்றித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விக்ரமை தன் வழிக்கு கொண்டு வருகிறார் எஸ்.ஜே சூர்யா. இறுதியில் ரவுடியாக வலம் வந்த விக்ரம் யார்…அவரது வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவம் என்ன? ஊர்ப்பெரும்புள்ளிகளைக் கொல்ல எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுவது எதற்காக? என்பதற்கு இந்த ‘வீர தீர சூரன்’ படம் பதில் சொல்லும்.
காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் தனது மிரட்டலான நடிப்பில் அசத்தி இருக்கிறார். ஒரு மளிகைக்கடைக்காரருக்குரிய அத்தனை அம்சங்களுடனும் அறிமுகமாகிறார் விக்ரம். முரட்டு மனிதராக தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க களமிறங்குவதும், தன்னை கொல்ல வரும் அனைத்து ஆட்களையும் அடித்து துவம்சம் செய்வதும், வில்லன்களுடன் மாட்டிக் கொண்டாலும் அந்த நேரத்தில் சமயோஜிதமாக முடிவெடுத்து தப்பிச் செல்வது என்று ஒவ்வொரு காட்சிகளிலும் தனித்திறமையோடு ஜொலிக்கிறார். பயம், கோபம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் இயல்பான நடிப்பின் மூலம் வெளிபடுத்தி ஆக்க்ஷனில் அதிரடி நாயகனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் விக்ரம்.
விக்ரம் மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயனின் கதாபாத்திரப்படைப்பும் அதில் அவர் நடிப்பும் அருமை.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு பல வருடக் கோபத்தை அடக்கமாக அதேசமயம் அழுத்தமாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி பட்டையை கிளப்பியிருக்கிறார்.
பெரியவராக நடித்திருக்கும் தெலுங்குநடிகர் பிரிதிவிராஜ் அவர் மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் சுராஜ்வெஞ்சரமூடு ஆகியோர் வில்லத்தனத்தில் அனைவரையும் பதற வைத்து இருக்கிறார்கள்.
பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா, ரவி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமார் தன் இசையில் படல்கள் ரசிக்கும்படி இருக்கிறது, பின்னணி இசை மூலம் படத்திற்கான விறுவிறுப்பை குறைய விடாமல், காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக தடம் பதித்துள்ளார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் திருவிழா நடக்கும் ஊரின் இரவுகாட்சிகளை மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
கதை, எழுதி இயக்கியிருக்கும் எஸ்.யூ அருண்குமார் அதிரடி ஆக்ஷ்ன், பிரம்மாண்ட சண்டை என காட்சிகளுக்கு வாய்ப்புகள் இருந்தும் அது எல்லாமே படத்தை சினிமாத்தனமாக்கி விடும் என்பதை உணர்ந்து படம் முழுவதையுமே விறுவிறூப்பு குறையாமல் படத்தின் முதல்காட்சியில் வரும் பெண்மணியும் குழந்தையும் கடைசிக்காட்சியிலும் வரும்போது, .அதன் மூலம் பல காட்சிகளை உணர வைத்திருக்கிறார் இயக்குநர். முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்தி, தான் செய்த வேலை பாவச்செயல் என்று நாயகனைப் பேசவைத்து காட்சிகளை படமாக்கி அசத்தி இருக்கிறார் இயக்குனர் எஸ். யூ.அருண்குமார்.
மொத்தத்தில், ‘வீர தீர சூரன் – பாகம் 2’ படம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.