சென்னை:
பிரேம்ஜி, திவ்ய தர்ஷினி, தீபா சங்கர், முத்துராமன், சி ஆர் ரஜித், சூப்பர் குட் சுப்பிரமணியன், சுப்பிரமணியன் மாதவன், விது, போராளி திலீபன் மற்றூம் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘வல்லமை’
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மனைவியை இழந்த விவசாயியானபிரேம்ஜி அரியலூரில் மகள் சிறுமி திவதர்ஷினியுடன் வாழ்ந்து வருகிறார். தனது 8 வயது மகளான பெண் பிள்ளையை நன்றாக படிக்க வைத்து சமுதாயத்தில் பெரிய நிலையை மகள் அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னை வருகிறார். தன் காதல் மனைவியை இழந்த துக்கத்தால் பிரேம்ஜி இரண்டு காதுகளும் கேட்காமல் அடுத்தவர்கள் பேசுவதை கேட்பதற்காக சிறப்பு கருவி பொருத்தி பிறர் பேசுவதை கேட்டுக்கொள்கிறார்.
இங்கு வாடகைக்கு வீடு பிடிப்பது, மகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்துவிடுவது போன்ற சவால்களை எளிதாகக் கடந்துவிடும் பிரேம்ஜி, சினிமா போஸ்டர் ஒட்டும் வேலையில் சேர்ந்து, அந்த வருமானத்தில் பிழைப்பை நடத்தி வருகிறார். ஒரு நாள் தனது மகள் திவதர்ஷினி படிக்கும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது மகள் திவதர்ஷினி தனது பிறப்புறுப்பில் ரத்தம் வந்ததாக கூற உடனடியாக தன் மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு, மகளை பரிசோதித்து பார்த்த மருத்துவர் தீபா சங்கர் மயக்க மருந்து கொடுத்து மகளிடம் பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என பிரேம்ஜியிடம் கூறுகிறார். மருத்துவர் தீபா சங்கர் தன் தந்தையிடம் சொன்ன விஷயத்தை புரிந்துகொள்ளும் சிறுமி பூமிகா, தனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது; அதற்கு தன்னை சீரழித்த குற்றவாளியைக் கண்டுபிடித்து, அவனை கொலை செய்ய வேண்டும் என்று உறுதியான குரலில் கூறுகிறார். இறுதியில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவனை கண்டுபிடித்து பழி வாங்கினாரா?இல்லையா? என்பதுதான் ‘வல்லமை’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக பிரேம்ஜி நடித்திருக்கிறார். மிக எளிமையான கதாபாத்திரத்தில் அதன் தன்மையை உணர்ந்து நடிகர் பிரேம்ஜி தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். அவர் எந்தப் படத்திலும் இந்த மாதியான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. தாயில்லாப் பிள்ளையான தன் மகள் தான் உலகம் என்று வாழும் சராசரி தந்தையை இயல்பாக பிரதிபலித்திருக்கிறார்.
பிரேம்ஜி மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவதர்ஷினி மிகவும் எதார்த்தமான நடிப்பைக் கொடுத்து வாழ்ந்து இருக்கிறார்.
மருத்துவராக வரும் தீபா சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் வழக்கு எண் முத்துராமன், சக்கரவர்த்தி என்ற வில்லனாக வரும் சி.ஆர்.ரஜித் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் சூப்பர்குட் சுப்பிரமணி. வில்லனின் கார் டிரைவராக வரும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடன் பாபுவாக வரும் விது, பள்ளிக்கூட பியூனாக வரும் திலீபன் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.கே.வி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு சிறப்பாக பயணித்து இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி இப்படத்திற்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு செய்து, காட்சிகளை மிக அழகாக படமாக்கி பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும் கருப்பையா முருகன், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண் பிள்ளைகள் பற்றி செய்திகளாக மட்டுமே கடந்து போகும் இந்த சமுதாயத்திற்கு உனர்த்தும் விதத்தில், பாதுகாப்பற்ற, ஆபத்தான சூழலில் வாழும் தற்கால அவலத்தை படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்..
மொத்தத்தில், ‘வல்லமை’ பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.