CHENNAI:
இந்த ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், விது, சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், கஜராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பு: ஜோதிகா சூர்யா, இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. வெளியீடு: சக்தி பிலிம் ஃபேக்டரி.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தூத்துக்குடியில் மிகப் பெரிய தாதாவாகத் திகழ்கிறார் ஜோஜு ஜார்ஜ். இவரது மனைவி ஸ்வாசிகா. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் இவர்களிடம் வேலையாளாக இருந்தவரை ஜோஜு ஜார்ஜின் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட, அவரது மகனான கைக்குழந்தை பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகிறார். பிறக்கும்போதே நெஞ்சில் வேல் படம் தாங்கிப் பிறந்திருக்கும் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறார் மனைவி ஸ்வாசிகா. அந்த குழந்தைக்கு பாரிவேல் கண்ணன் என்று பெயர் சூட்டுகிறார் ஸ்வாசிகா. வளர்ப்பு மகன் சிறுவனாக இருக்கும்போதே தனக்கு எதிராக யார் சண்டைக்கு வந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்து விடுவார். இந்நிலையில் வளர்ப்பு தாய் ஸ்வாசிகா இறந்துவிட,சொந்த மகனாக வளர்ந்த பாரிவேல் கண்ணன் எண்கிற சூர்யா மீது ஜோஜூ ஜார்ஜ் வெறுப்பை காட்டுகிறார். இதனால் சூர்யாவுக்கு சின்ன வயதிலிருந்து சிரிக்கவே தெரியாதவனாக வளருகிறார். யார் சிரிக்க வைத்தாலும் சூர்யாக்கு கொஞ்சமும் சிரிப்பு வரவில்லை. ஒரு இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு பள்ளியில் படித்து வளர்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் ரயில் பயணத்தின் போது ஜோஜூ ஜார்ஜ் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்பட சிறுவனான சூர்யா அதிரடியாய் எதிரிகளை விழ்த்தி அவரை காப்பாற்றுகிறார். இதன் பிறகு ஜோஜூ ஜார்ஜ் தன்னை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய சூர்யாவை சொந்த மகனாக ஏற்றுக்கொள்கிறார். இப்பொழுது வளர்ந்து வாலிபனாகி இருக்கும் சூர்யா, அவனுடைய தந்தையின் அடியாள் வேலையையும், கடத்தல் வேலையையும் மிகவும் திறமையாக செய்து வருகிறான். ஜோஜூ ஜார்ஜிடம் வலது கரமாக இருக்கும் சூர்யா சிறு வயதில் தான் பார்த்த கால் நடை மருத்துவர் பூஜா ஹெக்டேவை பார்த்ததும் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்ய கொள்ள முடிவெடுக்கிறார். அப்போது பூஜா “நீ அடிதடியை விட்டுவிட்டு வந்தால், நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்கிறார். அவருடன் திருமண வாழ்க்கையில் நுழையும் ஆசையில் ரவுடியிசத்தை கைவிட்டு புது வாழ்க்கைக்குத் தயாராகிறார் சூர்யா.
வளர்ப்பு தந்தையான ஜோஜூ ஜார்ஜ் இவர்களது காதல் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட பிறகு இந்தியாவிலிருந்து வெளி நாட்டுக்கு கடத்தப்படும் தங்க மீன் என்ற கடத்தல் பொருளை சொன்ன இடத்திற்கு அனுப்பாமல் மறைத்து வைத்து இருக்கும் இடம் எங்கே? என்று சூர்யாவிடம் கேட்கிறார். சூர்யா-பூஜா இருவருக்கும் திருமண விழா நடைபெறும் மண்டபத்தில் தனது கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த சூர்யாவிடம், பூஜாவை கொன்றால் தான் நீ பதில் சொல்வாய்” என்றவாறு கத்தியுடன் ஜோஜூ ஜார்ஜ் பூஜாவை நெருங்க, காதலியை காப்பாறுவதற்காக மீண்டும் கத்தியை எடுக்கும் சூர்யா, ஜோஜூ ஜார்ஜின் கையை வெட்டி வீழ்த்துகிறார்.
அவர் மீண்டும் வன்முறையில் இறங்கியது கண்டு பூஜா கோபமாக அங்கிருந்து வெளியேறுகிறார். இதனால் இவர்கள் இருவரது திருமணம் தடை படுகிறது. ஜோஜூ ஜார்ஜை கொலை செய்ய முயன்றதால் சிறை செல்கிறார் சூர்யா. சிறையில் ஐந்து ஆண்டுகள் கழிந்த பிறகு தனது காதலி பூஜா எங்கு இருக்கிறார் என்பதை தனது நண்பர்கள் மூலம் கண்டுபிடிக்கிறார் சூர்யா. சிறையில் உள்ள ஒரு சிறைத்துறை காவல் அதிகாரி மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து விடும் சூர்யா தன் காதலி பூஜா இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அவரை திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் “ரெட்ரோ’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருக்கிறார். தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாக தனது நடிப்பை சிறந்த முறையில் வழங்கி இருக்கிறார். காதல் திருமணம் நடக்காமல் ஏற்பட்டதோல்வியாலும், சிறையில் தனது காதலிக்காக வேதனைப்படும் காதலனாகவும், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும் அவர் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யா.
கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை ரசிகர்கள் ரசிக்கும்படி நிறைவாக செய்திருக்கிறார்.
வளர்த்த மகனிடமே தொழிலில் சந்தேகம் ஏற்பட்டு சண்டை செய்யும் தந்தையாக ஜோஜு ஜார்ஜும் வழக்கமான வில்லனாக வந்து போகிறார். அந்தமான் தீவை அரசாட்சி செய்யும் வில்லன்களாக விது, நாசர், ஜோஜு ஜார்ஜஜையே நடுங்க வைக்கும் அரசியல் செல்வாக்குள்ள பிரகாஷ்ராஜ் என மற்ற பெரிய நடிகர்களுக்கு படத்தில் அதிகமான காட்சிகள் இல்லாமல் குறைவாகவே இருப்பதை ரசிக்க முடியவில்லை. ஆனாலும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.
சிரிப்பு மருத்துவராக வரும் ஜெயராம் வரும் காட்சிகளில் பெரிய வேலை எதுவுமின்றி பேசாமல் இருக்கிறார். பூஜாவின் தந்தையாக சிங்கம்புலி, அந்தமானில் சூர்யாவுடன் ஒன்றிரண்டு காட்சிகளில் ஒட்டிக்கொண்டு காணாமல் போகும் கருணாகரன் ஆகிய கதாபாத்திரங்கள் ஏனென்றே தெரியவில்லை. சூர்யாவின் வளர்ப்பு தாயாக ‘லப்பர் பந்து’ சுவாசிகாவும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுடன் பார்க்கும் போது மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணா தன் ஒளிப்பதிவு, மூலம் இப்படத்தை மிகநேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்ஷன் அதிரடி சண்டைக் காட்சிகளை மிகவும் மாறுபட்ட முறையில் படமாக்கி அசத்தியிருக்கிறார்.
ரெட்ரோ படத்தில் தன் புது முயற்சியை கையாண்டு சூர்யாவின் உடல்வாகுவை எப்படி சித்தரிக்க முடியுமா அத்தனையையும் புகுத்தி, ஒரு வளர்ப்பு தந்தைக்கும் – மகனுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து, குடும்ப செண்டிமெண்ட், சண்டைக்காட்சிகள், வித்தியாசமான படு வேகமான ஆக்ஷன் காட்சிகள் என அனைவரும் ரசிக்கும்படி அதிரடி,ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
மொத்தத்தில், ‘ரெட்ரோ’ படம் சூர்யாவுக்கு பெரிய வெற்றி.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.