‘நிழற்குடை’- திரைப்பட விமர்சனம்!

117

சென்னை:

தேவயானி, விஜித், கண்மணி, ஜி.வி, நிஹாரிகா, ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, ஆண்டர்சன், அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘நிழற்குடை’. இப்படத்தை சிவ ஆறுமுகம். கதை எழுதி இயக்கி இருக்கிறார். 

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஐ.டி.கம்பெனியில் நல்ல சம்பளத்தில் பணியாற்றும் கண்மணி மற்றும் விஜித் இருவரும் கலப்பு காதல் திருமணம் செய்து கொண்டதால், அவர்களின்  இரு குடும்பங்களின் ஆதரவு இல்லாமல் தனியே வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்ற பெண் குழந்தை இருக்கிறது.  நிலா தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்தால் வலிப்பு ஏற்படும் என்று டாகடர் கூறியதால், குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு பெண் நியமிக்கப்படுகிறாள். அந்த பெண் தன் காதலனை அந்த வீட்டிற்கு வரவழைத்து கொஞ்சி குலாவியதால், அவரின் நடவடிக்கை சரியில்லை என்று வேலையிலிருந்து அவளை கண்மணியும், விஜித்தும் நீக்கி விடுகிறார்கள்.

இந்த சூழலில் தங்களது குழந்தையின் பிறந்த நாளன்று முதியோர் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும்  உணவு வழங்க ஏற்பாடு செய்தபோது, அங்கு  தேவயானியை சந்திக்கிறார்கள். இலங்கையில் குடும்பத்தினரை பறிகொடுத்து விட்டு முதியோர் இல்லத்தில் வேலை செய்து கொண்டு அனைவரிடமும் அன்புடன் பழகுகிறார் தேவயானி. இதனைக் கண்டு இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள தேவயானியை வேலைக்கு சேர்க்கிறார்கள்.

தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள். நீண்ட நாட்களாகஅமெரிக்காவில் குடியேற முயலும் விஜித் – கண்மணி தம்பதிக்கு அதற்கான அனுமதி கிடைத்துவிடுகிறது. இதனால், குழந்தை தன்னை விட்டு பிரிவதை நினைத்து தேவயானி வருத்தமும் வேதனையும் அடைகிறார். இதற்கிடையே, குழந்தை திடீரென்று காணாமல் போக, தாங்கள் அமெரிக்கா செல்வதை தடுப்பதற்காக யாரோ குழந்தையை கடத்தி இருக்கலாம் என்று  நினைக்கும் விஜித் –கண்மணி இருவரும்  காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். காவல் துறையினரும் குழந்தை நிலாவை தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இறுதியில் காவல்துறை குழந்தையை கடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா?என்பதுதான் நிழற்குடை’ ப்படத்தின் மீதிக் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடித்திருக்கும் தேவயானி, குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்றே பயணிக்கும் பெற்றோர்களுக்கு அன்பு முக்கியமானது என்பதை அழுத்தமாகச் சொல்லி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளம் தம்பதியாக நடித்திருக்கும் விஜித் மற்றும் கண்மணி இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பும் படம் பார்க்கும் அனைவரது மனதையும் கவர்கிறது.

மற்றும் வடிவுக்கரசி, நீலிமா ராணி ராஜ்கபூர், இளவரசு, தர்ஷன் சிவா, ஆண்டர்சன், அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன், ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில், மனிதர்களின் உணர்வுகளையும், ஒவ்வொரு கதாபாத்திரங்களின் நடிப்பையும் மிக நேர்த்தியாக படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு தகுந்தவாறு பயணித்து இருக்கிறது.

சிவா ஆறுமுகம் எழுதி இயக்கியிருக்கிறார்.குழந்தை வளர்ப்பை மையமாகக் கொண்டு பல உயரிய சிந்தனைகளை மக்கள் மனதில் பதிய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும், முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும் இத்தகைய சூழலில், இந்த தலைமுறையினருக்கு பாடம் சொல்லும்படி இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘நிழற்குடை’  ஐ.டி.கம்பெனியில் பணி புரியும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

.