சென்னை:
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லர்கால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “மதராஸி”. தற்போது தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின்,
கதையைப் பொருத்தவரையில்,
வித்யூத் மற்றும் ஷபீர் இருவரும் இணைந்து துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் பரவ விட நினைத்து, மொத்தம் ஆறு கண்டெய்னர்களில் கைத்துப்பாக்கிகளை கடத்தி, தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரும் வேலையை செய்கின்றனர். மிகப்பெரிய அளவிலான ஆயுதங்களை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும்போது, அதனை தடுக்கும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது. இந்த சூழ்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பில் உள்ள அதிகாரிகள் துப்பாக்கிகள் அடங்கிய கண்டெய்னரை தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்க அதை வழிமறித்து தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனாலும் எதிர் தாக்குதல் நடத்தும் ரவுடிகள் அந்த ஆறு கண்டெய்னர்களை நகருக்குள் கொண்டுவந்து பதுக்கி விடுகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சிவகார்த்திகேயன் ஒரு விபத்தில் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்துவிட்டதால், அதன் காரணமாக அவருக்கு ஒரு விதமான மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் தேசிய புலனாய்வு அதிகாரி பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயனின் கண்ணில் யாராவது விபத்தில் சிக்கி ரத்தம் வழிய இருப்பதை பார்த்துவிட்டால் உடனே அவர்களை தன்னுடைய குடும்பத்தினர் போல நினைத்து அவர்களை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடுவது..அவர்களுக்கு முதலுதவி செய்வது போன்ற நல்ல செயல்களை செய்கிறார். இதற்கிடையே, காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள முயன்று, அதனால் சிவகார்த்திகேயனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்த சூழலில் எதிரிகளுடன் சண்டையிட்டு, அதனால் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் பிஜு மேனனும், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சிவகார்த்திகேயனும் மருத்துவமனையில் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள். ஏற்கனவே பாதுகாப்பு படையினர் பலர் உயிர் இழந்த நிலையில் மற்றொரு வீரரை இழக்க விரும்பாத அதிகாரி பிஜு மேனன், தற்கொலைக்கு தயாராக இருக்கும் சிவகார்த்திகேயனை ஆயுதங்களை அழிக்கும் இடத்துக்கு அனுப்ப முடிவு செய்கிறார். இறுதியில் சிவகார்த்திகேன் கைத்துப்பாக்கிகள் நிறைந்த ஆறு கண்டெய்னர்களை கண்டுபிடித்து தேசிய புலனாய்வு அதிகாரி பிஜு மேனனுக்கு உதவி செய்தாரா? இல்லையா? என்பதுதான் ‘மதராஸி” படத்தின் மீதிக் கதை.
‘அமரன்’ மாபெரும் வெற்றி பெற்ற சூழலில் சிவகார்த்திகேயன் அடுத்து என்ன படம் கொடுக்க போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தபோது, தற்போது ஒரு மாஸ் ஆக்ஷன் அதிரடி சண்டைகள் நிறைந்த படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைக் கொடுத்து இருக்கிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் செண்டிமெண்ட் கலந்த முறையில் நடிப்பில் அசத்தி இருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் இன்றைய கால இளம் ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான ஒரு கதையில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருயிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மாலதியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் மிக அழகான முகத்துடன் தேவதை போல வந்து. சிவகார்த்திகேயனின் தோற்றத்திற்கும், உடல் அமைப்புக்கும் மிக பொருத்தமான கதாநாயகியாக அனைவரின் மனதையும் கவர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
சூப்பர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் வித்யூத் ஜமால், கடைசி சண்டை காட்சியில் வெறித்தனமாக சண்டையிடுவதை பார்க்கும் பொழுது நமக்கே ஒரு பயம் ஏற்படுகிறது. ஆனால் வித்யூத் ஜாமால் சிறப்பாகவே தனது வில்லத்தனத்தை காட்டி அற்புதமாக நடித்து இருக்கிறார்.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் ஷபீர் கல்லரக்கல், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் பார்வையாளர்கள் மனதில் பதிந்துவிடும் வகையில் நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்கள்.
பின்னணி இசையில் மிரட்டி விட்டிருக்கிறார் அனிருத். சலம்பல பாடல் ஆட்டம் போட்டு ரசிக்க வைத்திருக்கிறது.
சுதீப் எலமானின் ஒளிப்பதிவு அற்புதம் என்று சொல்லலாம். அதிலும் தீவிரமான சண்டை காட்சிகளை படம் முழுவதையும் ஹாலிவுட் தரத்தில் சூப்பராக படமாக்கியிருப்பதை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.
தீனா, ரமணா, துப்பாக்கி, கத்தி, என தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவை முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வைத்த ஏ ஆர் முருகதாஸ், இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை ஆக்ஷன் மாஸ் ஹீரோவாக மிக கச்சிதமாக கையாண்டிருப்பவர், அவரது காதல், எமோஷனல் ஆகியவற்றையும் சரியான அளவில் சேர்த்து, அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை புகுத்தி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான தமிழில் ‘மதராஸி’ படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில், ‘மதராஸி’ படம் சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக்கி விட்டது.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.