சென்னை:
டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் தயாரித்து இட்லி கடை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் தனுஷ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன், கீதா கைலாசம், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மதுரை மாவட்டத்தில் தேனி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ராஜ்கிரண் தன் மனைவி கீதா கைலாசம் மற்றும் மகன் தனுசுடன் இணைந்து ஒரு குடிசையில் இட்லி கடை வைத்து மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார் ஆட்டுக்கல்லில் அரைத்து எடுத்த மாவை மிகவும் ருசியாக இட்லி கடை நடத்தி வருவதால் அங்குள்ள கிராம மக்கள் ராஜ்கிரண் கடையில் வந்து மிகவும் விருப்பத்துடன் இட்லியை ருசித்து சாப்பிடுகின்றனர். தனுஷ் சிறுவயதிலிருந்தே அந்த இட்லி கடை நடத்தும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் கேட்டரிங் படிப்பு படிக்கிறார். இந்த சூழ்நிலையில் சென்னையில் ஏதாவது நல்ல ஹோட்டலில் வேலை பார்க்க வேண்டும் என்று வந்த தனுஷ், தாய்லாந்தில் உள்ள பாங்காங் சென்று அங்கு பெரிய கோடீஸ்வரனான சத்யராஜின் பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறார் தனுஷ். அந்தப் பெரிய நிறுவனத்தை நடத்தி வரும் சத்யராஜுக்கு அருண் விஜய் என்ற மகனும் ஷாலினி பாண்டே என்ற மகளும் இருக்கின்றனர்.
அப்போது மகன் அருண் விஜய்யிடம் தந்தை சத்யராஜ், தனுஷின் திறமையை கண்டு அடிக்கடி சொல்லி பெருமைப்படுகிறார். இதனால் அருண் விஜய்க்கு தனுஷ் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் அருண் விஜய்யின் தங்கை ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்கிறார். தொழில் அதிபரன சத்யராஜும் தனது மகளை தனுஷுக்கு மணமுடிக்க ஒப்புக்கொள்கிறார். இந்த நிலையில் தனுஷின் தந்தை ராஜ்கிரண் தனது கிராமத்தில் இறந்து விடுவதாக செய்தி வருகிறது. இந்த செய்தி கேட்டு அதிச்சியடைந்த தனுஷ் அதற்காக தேனியில் உள்ள தனது கிராமத்திற்கு வருகிறார். அதன் பிறகு தந்தை இறந்த மறுநாளே தனது தாய் கீதா கைலாசமும் இறந்து விடுகிறார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்த தனுஷ் தனது தந்தை வாழ்ந்த வீட்டையும் அந்த இட்லி கடையையும் விட்டு செல்ல மனம் இல்லாமல் அந்த கிராமத்திலேயே இருக்க நினைக்கும்போது அவருக்கு உதவியாக தனது பள்ளி தோழி நித்யா மேனனும் உதவி செய்ய முன் வருகிறார்.
இந்த சூழலில் பாங்காக்கில் உள்ள சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிடுகிறார். இதனால் கோபம் அடைந்த அருண் விஜய் தனது தந்தையையும், தங்கையையும் அவமானப்படுத்திவிட்ட தனுஷை பழிவாங்க தேனி மாவட்டத்தில் உள்ள அந்த கிராமத்திற்கு வருகிறார். இறுதியில் அந்த கிராமத்திற்கு வந்த அருண் விஜய், தனுஷை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் மீதி கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் தனுஷ், பாங்காக்கில் கோட் சூட் போட்டுக் கொண்டு வலம் வரும்போதும், கிராமத்தில் வேட்டி சட்டையுடன் நடமாடும்போதும் தனது நடிப்பில் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை எப்போதுமே, சிறப்பாக செய்து முடிப்பவர் நடிகர் தனுஷ். இப்படத்திலும், அதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். மூன்று பருவமாக தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு சென்று முருகன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மனிதர்களின் ஆழமான உணர்வுகளை கிளறி வெளியே எடுக்கக் கூடிய வேடமேற்று அதற்குத் தக்க நடித்து நினைத்ததைச் சாதித்திருக்கிறார் தனுஷ்.
கிராமத்து நாயகியாக நித்யாமேனன், இவர் உண்மையான கிராமத்துப் பெண் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் அனைவரும் நம்பிவிடுவார்கள். அவ்வளவு சிறப்பான ஈடுபாட்டுடன் எதார்த்தமான நடிப்பின் மூலமாக வரவேற்புப் பெறுகிறார்.
சிவநேசனாக ராஜ்கிரண் எளிமை, அறவழி கொள்கை, கிராம மக்களை நல்வழிப்படுத்தும் குணம், பணத்திற்காக ஆசைப்படாமல், அவர் மூலம் சொல்லப்படும் கருத்துகள் அவர் சொல்வதாலேயே பலம் பெறுகின்றன.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஷாலிணி பாண்டேவின் நடிப்பிலும் குறையில்லை.
தொழிலதிபராக நடித்திருக்கும் சத்யராஜ், தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக முதலில் கதையில் அறியப்பட்டாலும், அவருக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து அதை சரியாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் அருண் விஜய்.
பார்த்திபன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் என்றாலும் மிக நேர்த்தியாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் கிராமத்து அழகையும், பாங்காக் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு காட்சிகளையும் ரசிக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கவும் செய்திருக்கிறார் தனுஷ். பெற்ற தாய், தந்தையர்களை கவனித்துக் கொள்ளாத பிள்ளைகள் பொறுப்பற்றவர்கள் என்பதை திரைக்கதையில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொன்றையும் கதைக்கு தகுந்தவாறு அழகாக வடிவமைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார். தற்போதுள்ள மக்கள் வெளிநாட்டுக்கு சென்று, எவ்வளவு பொருள் சம்பாதித்தாலும், நம் சொந்த மண் மற்றும் மக்களுடன் பயணிக்கும் போது கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது என்பதை உணர்வுபூர்வமாக கவனம் செலுத்தி இயக்கி இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில், ‘இட்லி கடை’ மக்கள் மனதை கவரும்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.