சென்னை:
ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்திருக்கும் ‘ஐபிஎல்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கருணாநிதி. இப்படத்தில் கிஷோர், டி டி எஃப் வாசன், அபிராமி, குஷிதா, நரேன், திலீபன் ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரிஷ் பெராடி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஒரு வாடகை கார் ஓட்டி தனது குடும்பத்தைக் காபாற்றி வருகிறார் கிஷோர். இந்நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை சமாளிக்க அவரது மனைவி அபிராமி தன் கழுத்தில் உள்ள தங்க செயினை கொடுத்து, மேலும் மாதாந்திர கடன் மூலம் சொந்தமாக கார் வாங்கி அதனை டாக்ஸியாக பயன்படுத்து தனது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார். இந்த சூழலில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வரும் நபர் ஒருவர் கிஷோர் மீது மோதிவிட, கிஷோரின் காலில் அடிபட்டு விடுகிறது. காலில் அடிபட்டதால், தனது காரை வாடகைக்கு விடுகிறார். அந்த வாடகை கார் ஒட்டுனரால் கிஷோர் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்.
போஸ் வெங்கட் மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விடுகிறான் என்று சந்தேகப்படுகிறார். அவனை காவல் நிலையம் கொண்டு சென்று கடுமையாகத் தாக்குகிறார், போஸ் வெங்கட் கடுமையாக தாக்கியதால் அவன் போலீஸ் கஸ்டடியில் இறந்து விடுகிறான்.இந்த கொலையின் காரணம். இந்த குற்றத்தின் பழி, கார் டிரைவரான கிஷோர் மீது சுமத்தப்படுகிறது. எந்தவித குற்றமும் செய்யாத கிஷோர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக சாட்சியங்கள் மற்றும் ஆதரங்கள் சமர்க்கப்பிட்டு குற்றவாளியாக்கப்படுகிறார்.மேலிடத்து அழுத்தத்தால் அவரை அடித்து துன்புறுத்தி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள். அந்த சமயத்தில் கிஷோரின் தங்கையை காதலிக்கும் கதாநாயகன் டிடிஎஃப் வாசன், கிஷோரை இந்த பொய்க் குற்றச்சாட்டில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் கிஷோரை இந்த வழக்கில் இருந்து டிடிஎஃப் வாசன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் ‘ஐபிஎல்’ படத்தின் மீதிக் கதை.
கிஷோர் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் படத்தைத் தூக்கி நிறுத்தும் கதை நாயகனாக நடித்துள்ளார். சாதாரண ஒரு நடுத்தர வர்க்க மனிதனாக, தன் மீது விழும் அநியாய குற்றச்சாட்டை எதிர்த்து போராடும் விதத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். செய்யாத குற்றத்திற்காக காவல் நிலையத்தில் அவரை துன்புறுத்தும் கொடுமைகள், மற்றும் குடும்பத்தினர் கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு அவர் தவிக்கிற காட்சிகள் ரசிகர்களை கலங்க வைக்கிறது. இந்த காட்சிகள் “விசாரணை” படத்தில் காட்டப்பட்ட போலீஸ் சித்திரவதை காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
அறிமுக நடிகர் டி.டி.எஃப்.வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். காதல் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளில் சிறப்பாக செய்ய முயற்சி செய்து இருக்கிறார்.
கிஷோரின் மனைவியாக வருகிறார் அபிராமி. போலீஸ் கொடுமைப்படுத்தும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறார். போஸ்ட் வெங்கட் கொடூரமான குணம் கொண்ட போலீசாக வருகிறார் .சிங்கம்புலி சில காட்சிகளில் வந்து செல்கிறார். எதிர்மறையான போலீஸ் எஸ்.பியாக ஹரிஷ் பெராடியும் நேர்மையான போலீஸ் எஸ்பியாக திலீபனும் வந்து தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .முதல்வராக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் தனது நடிப்பில் சலிப்பை ஏற்படுத்துகிறார்.
ஒளிப்பதிவாளர் பிச்சுமணியின் ஒளிப்பதிவில், மோட்டார் சைக்கிள் சேசிங் காட்சி பாராட்டத் தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை குறை சொல்ல முடியாது.
காவல்துறையின் சிறைக்குள் நடக்கும் படுகொலை சம்பவத்தைமையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற நமது அரசியல் சட்டத்தின் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து உண்மையான லாக்-அப் மரணங்களை மையமாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த ‘ஐபிஎல்’ அநீக்கு எதிரான படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.