‘ஜாக்கி’ திரைப்பட விமர்சனம்!

81

சென்னை:

பிகே7 ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் – சி தேவதாஸ் – ஜெயா தேவதாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘ஜாக்கி’  படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர். பிரகாபால்.

இப்படத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி,  மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி , பாத்மென், யோகி , சாய்தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற கலாச்சார விளையாட்டுகள் போல் கிடா முட்டு சண்டையும் மதுரை பகுதியில் உள்ள சில இடங்களில் நடைபெற்று வருகிறது. மதுரையில் கிடா சண்டை நாயகர்களுக்கு இடையே நடக்கும் மோதல்தான்  கதையின் முக்கிய அம்சமாக திகழ்கிறது.. அப்படி கிடா சண்டை நடந்த பிறகு போட்டியில் வெற்றி பெற்ற கிடா உரிமையாளருக்கு ஜாக்கி என்கிற பட்டம் கிடைக்கும். அந்த ஜாக்கி என்ற செயினை விற்கவும் முடியாது. சொந்தமாக வைத்திருக்கவும் முடியாது. அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து நடக்கின்ற கிடா சண்டையின்போது  அந்த செயினையும் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். புதிதாக யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு அந்த செயின் கொடுக்கப்படும். இதுதான் அந்தப் பகுதி வழக்கமாக இருந்து வருகிறது.

ஆட்டோ ஓட்டுநரான நாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவராக இருக்கிறார். பெரிய பணம் படைத்தவரான ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையை கெளரவமாக கருதி நல்ல திடகாத்திரமான் கிடாவை வளர்த்து எல்லா சண்டைகளிலும் வெற்றி பெற்று அசத்துகிறார். இதற்கிடையே, யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை ஒரு சண்டையில் வீழ்த்தி விடுகிறது. இந்தத் தோல்வியை ஏற்க முடியாத யுவன் கிருஷ்ணாவின் கோபம் கொடூரமாகமாறுகிறது.

போட்டி என்று வந்து விட்டால் யாராவது ஒருவர் தானே வெற்றி பெற முடியும். ஆனால் தோல்வி அடைந்தவர் இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில்லை. இதனால்  இருவருக்குள்ளும் பகைமை உருவாகிறது. அப்படித்தான் கதையிலும் பகை வளர்கிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது.  இருவருக்கும் அடிக்கடி வெட்டு குத்து  வளருவதால் இந்த  பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மீண்டும் இருவருக்கும்  ஊர்ப்பெரியவர்  மதுசூதன் ராவ், கிடா சண்டை போட்டி வைக்க முடிவு செய்கிறார். இருவரின் கிடாக்களிடையே கடுமையான  போட்டி நடக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார்? அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான் “ஜாக்கி’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டியிருப்பதோடு, தான் வளர்க்கும் கிடா போல் சண்டைக்காட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ரிதன் கிருஷ்ணா,பணக்காரத் திமிரை நடிப்பில் சரியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தனக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.

மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.

கிராமியம் சார்ந்த கதை என்பதால் மதுரை வட்டார மண் நிறத்தை சிறந்த முறையில் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார் தனது உழைப்பில், கிடா சண்டை காட்சிகளையும் நம் கண் முன் நிறுத்தி   இருக்கிறார்.

சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கிடா சண்டை போட்டிகளை விறுவிறுப்பாக பரபரப்பின் உச்சத்திற்கு பயணித்து இருக்கிறது.

டாக்டர் பிரகாபல் கதை, எழுதி இயக்கியிருக்கிறார். ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு, சேவல் சண்டை போன்ற எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஆட்டுக் கிடா சண்டை பற்றிய கதையை பின்புலமாகக் கொண்டு இந்தப் படத்தை காதல், செண்டிமெண்ட் என்று பல அம்சங்களை புகுத்தி, தத்ரூபமாக படமாக்கி அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி இயக்கி இருக்கிறார் பிரகாபல் .

மொத்தத்தில் ‘ஜாக்கி’- அனைவரையும் கவரும் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.