சென்னை:
நிரஞ்சன் சுதீந்திரா, ,அர்ஜுன் ,ஐஸ்வர்யா அர்ஜுன், பிரகாஷ்ராஜ், , சத்யராஜ், துருவா சார்ஜா, சுமித்ரா,பிதிரிசாதி மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “சீதா பயணம்”. ஆக்சன்கிங் அர்ஜுன் திரைக்கதை அமைத்து இயக்கித் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
பெரும் கோடீஸ்வரரன சத்யராஜின் ஒரே செல்ல மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். தாய் இல்லாத தன் மகளை மிகவும் பாசத்துடன் வளர்க்கிறார். தந்தை பாசத்தில் வளரும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார். ஒரு நாள் ஐஸ்வர்யாவுக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு உணவு திருவிழாவிற்காக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உணவு திருவிழா மற்றும் சமையல் கலை வல்லுநர்கள் பயிற்சி மாநாட்டிற்க்கு தனது காரில் மதுரைக்கு செல்கிறார். தன் மகளைப் பிரிய மனம் இல்லாமல் சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைக்கிறார் சத்யராஜ்.
அப்போது நடுவழியில் ஐஸ்வர்யாவை சந்திக்கும் நிரஞ்சன், அவசரமாக செல்ல வேண்டி இருப்பதால் தன்னை போகிற வழியில் திருச்சியில் இறக்கி விடும்படி கெஞ்சுகிறார். அவரது கெஞ்சலை பார்த்து மனம் இறங்கி தனது காரில் ஏற்றிக் கொள்கிறார் ஐஸ்வர்யா. வழித்துணைக்கு வந்தவர் போல இருந்த நிரஞ்சன், சீதாபுரம் என்கிற அவரது ஊர் அருகே காரை விட்டு இறங்கிக் கொள்கிறார். அப்போது எனது ஊருக்குள்ள வந்து விட்டு போங்களேன்” என்று அழைக்கிறார் நிரஞ்சன். ஆனால், ஐஸ்வர்யா அதற்கு மறுப்பு தெரிவித்து மதுரைக்கு செல்கிறார். அங்கு உணவு திருவிழா மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்லும் போது திடீர் தீவிபத்து ஏற்படுகிறது. பயிற்சி நடைபெறவிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட கேஸ் கசிவு வெடிப்பால் பெரும் விபத்து நிகழ்கிறது.
சில நொடிகள் தாமதமாக வந்ததாலேயே உயிர் தப்பியிருப்பதை உணரும் ஐஸ்வர்யா, இதை யோசித்துப் பார்த்து தனது பயணத்தில் தனக்கு இடையூறு செய்தவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்ல விரும்புகிறார். முதலில் சீதாபுரம் என்ற ஊருக்கு சென்று நிரஞ்சனை சந்த்தித்து நடந்த விவரங்களை சொல்கிறார்.அப்போது அவருடைய குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகுகிறார். அதன் பிறகு நிரஞ்சனையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய பயணத்தில் தான் சந்தித்தவர்கள் எல்லாம் நேரில் பார்த்து நன்றி சொல்ல கிளம்புகிறார். இந்த நிலையில் இருவரும் காரில் பயணம் செய்தபோது ஐஸ்வர்யா மீது நிரஞ்சனுக்கு காதல் வருகிறது. ஐஸ்வர்யாவும் நிரஞ்சனை காதலித்தாலும் அது உண்மையா என்று புரியாமல் தவிக்கிறார்,.இதற்கு இரு வீட்டாரும் சம்மதித்தாலும் இருவரது காதல் நிறைவேறியதா?இல்லையா? என்பதுதான் “சீதா பயணம்” படத்தின் மீதிக் கதை.
ஐஸ்வர்யா அர்ஜுன், சீதா என்ற தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னால் இயன்ற அளவில் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா கொஞ்சம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் அறிவுள்ள துடிப்பான பெண்ணாக நடித்திருக்கிறார் .அவரது தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த குறையும் இல்லாமல் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார்.
சீதாவின் பயணத்தில் வழித்துணையாக துறுதுறு வாலிபனாக வரும் நிரஞ்சன் ஒரு டாக்டர் என்று பின்பு தெரிகிறது.அவர் அந்த கதாபாத்திரத்தில் சரியான முறையில் பொருந்தி உள்ளார்.
ஐஸ்வர்யாவின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ், ஒரு தந்தையின் மனக்குமுறலையும் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தையும் மிக அழகாக வெளிப்படுத்தி வரவேற்பு பெறுகிறார்.
பிரகாஷ்ராஜ் நிரஞ்சனின் தாத்தாவாக வருகிறார். பிரகாஷ்ராஜின் குடும்ப கலகலப்பு பார்க்கும்போது அனைவருக்கும் கூட்டுக் குடும்பத்தின் மீது ஏக்கம் வரும் அளவிற்கு இருக்கிறது. கோவை சரளா குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுமித்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
தாதாவாக வரும் அர்ஜுன் சண்டையும் போடுகிறார். அவரை போலவே துருவ் சார்ஜா கட்டுமஸ்தான தோற்றத்தில் திடீரென்று வந்து ஆக்சன் அதிரடி கிளப்பியிருக்கிறார்.
ஒளிப்பதிவில் வண்ணமயமான காட்சிகள் அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காட்சிகளுமே கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
அனூப் ரூபென்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசை கதையின் உணர்ச்சிக்கு மிக நேர்த்தியாக துணை நிற்கிறது.
ஆக்சன்கிங் அர்ஜுன் இயக்கும்படம் என்றால் அடிதடி சண்டைகள் என்று ஒரு மசாலாதனமாக இருக்கும்.இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நடிகர் அர்ஜுன். ஆனால் மனித மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படம் இயக்கி அர்ஜுன் அனைவருக்கும் ஆச்சரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். குடும்ப உறவுகளின் மேன்மையை மகிமைப்படுத்தும் இந்தப் படத்திற்கு நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.
மொத்தத்தில், “சீதா பயணம்” அனைத்து ரசிகர்களையும் கவரும் படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.