‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்பட விமர்சனம்!

23

சென்னை:

ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ் சார்பில் மலைசாமி ஏ.எம்.ராஜா தயாரித்திருக்கும் ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலு எம்.

இப்படத்தில் பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார், சுரேகா, நிஷா துபே, மலைசாமி ஏ.எம்.ராஜா, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

மதுரை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர், விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட இளைஞர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கி அடிக்கின்றனர். இந்த சூழலில் பெரிய ரவுடியாக இருந்த சரவணன், தனது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த இளைஞன் சரவணனின் மகன் என்பதும், அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் மிக்கவர் என்ற தகவல் தெரிந்ததும்,  சுயநினைவு இழந்த அவரது மகனை காவல்துறையினரான  இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி குழுவினர்,  அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் போட்டு விட்டு விடுகிறார்கள்.

மறுநாள் காலை சரவணனின் மகன்  கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக தகவல் வருகிறது., அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தை சரவணனுக்கு தெரிந்து விடுகிறது. மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் தீர்மானத்தில் சரவணன் இறங்குகிறார். தன் மகனை கொலை செய்தவர்களைத் தீர்த்துக்கட்ட வெறியோடு புறப்படுகிறார் சரவணன். இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட காவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை வரிசையாகக் கொலை செய்ய ஆரம்பிக்கிறார். ஆனாலும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும்  எடுக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது .இறுதியில் சரவணனின் மகனை கொன்றது யார்? அந்த கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜா மலைச்சாமி நடித்துள்ளார்.காவல்துறையின் நடவடிக்கைகளைத் தனது கதாபாத்திரத்தின் மூலம் அதை உணர்ந்து சிறப்பாக நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். ஒரு தந்தையாக தன் மகள்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டு கதறும் காட்சிகளில் அனைவரும் கலங்கும்படி நடித்திருக்கிறார்.

இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, தன் மகன் மீது அன்பும் பாசமும் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில் சரவணன் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு, அவரும் அவருடைய அனுபவம் நிறைந்த நடிப்பும் மிக உதவியாக அமைந்திருக்கிறது.

அதேபோல் காதல் சுகுமார் சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே கொடுத்த வேலையை குறையில்லாமல் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற கதாபாத்திர ங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஜெயகுமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இந்தக் கதைக்கு என்ன தேவை? என்பதை உணர்ந்து அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்து மிக கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார்.

ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை இரண்டிலும் குறிப்பிட்டுச் செல்லும்படியாக எதுவும் அமையவில்லை.எல்லாம் ஓகே ரகம்தான்.

அண்மைக் காலமாக நமது தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் லாக்கப் மரணங்கள் மிகவும் சகஜமாகி வரும் இந்த வேளையில் அந்த ஒரு கருவை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பாலு. எம். பட்ஜெட் குறைபாடுகள் சில இடங்களில் தெரிந்தாலும், திரைக்கதையில் சஸ்பென்ஸையும் வேகத்தையும் உருவாக்கும் முயற்சியில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

மொத்தத்தில், ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.