சென்னை:
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜிகேஎம் தமிழ்குமரன் , பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் தயாரித்திருக்கும் படம்தான் ‘பரிமளா அண்ட் கோ’.
இப்படத்தில் ஜெயராம் ,ஊர்வசி, யோகிபாபு , சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில் குமார்,ஜி கே எம் தமிழ் குமரன், மிஷ்கின் ,சிங்கம் புலி, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்ப தலைவராக பரிமளா என்கிற ஜெயராம், தன் மனைவி ஊர்வசி மற்றும் மகள்கள் சஞ்சனா அனந்திகா ஆகிய இருவருடனும் ஒரு வாடகை வீட்டில் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி வருகிறார் ஜெயராமுக்கு பரிமளா என்ற பெயர் வந்தது காரணம் என்னவென்றால் அவரது பாட்டியின் பெயர் பரிமளா என்பதால் அதே பெயரை வைத்து ஜெயராமை பரிமளா என்று அழைக்கின்றனர். ஜெயராமனின் இரண்டு பெண்களும் கல்லூரியில் படித்து வரும் போது இரண்டாவது மகள் அனந்திகாவை அந்த ஏரியாவில் உள்ள ரவுடி சாண்டி காதலிப்பதாக கூறி அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார் இந்த சூழ்நிலையில் ஜெயராமன் அவரது மனைவி ஊர்வசியும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தன் மகன் சாண்டி ஜெயராமனின் மகளை காதலிப்பது தெரிந்ததும் சாண்டியின் தாய் தாதாவான அவர் ஜெயராமை வந்து மிரட்டுகிறார். இதனால் பயந்து போன ஜெயராம்- ஊர்வசி தம்பதிகள் என்ன செய்வது என்று ஆலோசனை செய்கின்றனர். அப்போது சாண்டியை கொலை செய்து விடலாம் என்று தன் மகள்கள் இருவருடனும் இணைந்து முடிவு செய்கின்றனர் ஆனால் திடீரென்று மறுநாள் காலை சாண்டி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த சூழலில் காவல்துறை அதிகாரி மிஷ்கின் சாண்டியை கொலை செய்தது யார் என்பதை தீவிரமாக விசாரிக்க தொடங்குகிறார் . இப்படிப்பட்ட நிலையில் சாண்டியின் அம்மாவும் கொலை செய்யப் படுகிறார்.
காவல்துறை அதிகாரி மிஷ்கின் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை வளையத்திற்குள் ஜெயராம் ஊர்வசி குடும்பத்தையும் சிக்க வைக்கிறார். ஆனால் ஜெயராம் தனது குடும்பத்தினரை அழைத்து காவல்துறையினர் எதை கேட்டாலும் ‘தெரியாது’ என்று சொல்ல வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார். இந்த சூழலில் ஜெயராம் தனது குடும்பத்தினர் உள்ளவர்களையே கொலைக்கு காரணமாக இருக்கலாமா என்று சந்தேகப்படுகிறார். இறுதியில் சாண்டியை கொலை செய்தது யார்? எதற்காக அவரை கொலை செய்தார்கள்? அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் மீதி கதை.
இப்படத்தில் பரிமளா என்பது ஜெயராம் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான். மிகவும் சிக்கன வாதியாகவும் எதற்கெடுத்தாலும் கணக்கு பார்ப்பவராகவும் அந்த நடுத்தர வர்க்கத்தின் மனநிலையில் இருக்கிற அவரது கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. தனது அனுபவம் மிக்க நடிப்பால் குடும்பத் தலைவனின் கதாபாத்திரத்தை இயல்பாக தாங்கி சுமந்து இருக்கிறார்.
சுதந்திரம் என்கிற கதாபாத்திரத்தில் சுதந்திரமே இல்லாமல் வீட்டின் குடும்ப தலைவியாக தனது அனுபவ மிக்க நடிப்பை அலட்டல் இல்லாமல் வெளிப்படுத்தி அசத்தி உள்ளார். போலீஸ் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் ஊர்வசி தனது அப்பாவித்தனத்துடன் வெளிப்படுத்தும் வசனங்களும் உணர்ச்சிகளும் திரையரங்கில் சிரிப்பலைகள் வர வைக்கின்றன.
மூத்த மகளாக வரும் சஞ்சனாவும், இளைய மகளாக வரும் அனந்திகாவும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வீட்டின் உரிமையாளராக வரும் யோகி பாபு வழக்கமான காமெடியில் கலக்கியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மிஷ்கின், கொலை குறித்து விசாரிக்கும் முறை ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் மேனரிஸமும் படத்திற்குத் தனி சுவாரசியமாக இருக்கிறது.
ரவுடி வர்கீஸாக நடன இயக்குநர் என்ற பிம்பத்தை தாண்டிய நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் சாண்டி.
சப் இன்ஸ்பெக்டராக வரும் ஜிகேஎம்.தமிழ் குமரன் , சாண்டியின் அம்மாவாக வரும் காயத்ரி, மற்றும் சென்ராயன், சந்தோஷ் சோபன், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஃபாக்ஸன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்.ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே கதை சுழல்வதால் அதற்கேற்றவாறு காட்சிகளை மேம்படுத்தி படத்தை ரசித்துப் பார்க்க வைத்திருக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இப்படம் ஆரம்பத்தில் ஒரு குடும்பக் கதையாக நகர்ந்தாலும், பின்னர் மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதைக்களமாக மாறுவது ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது. ஒரு சமூக பிரச்னையை கையிலெடுத்து அதை நேர்த்தியாக இறுதியில் இணைத்து சஸ்பென்ஸ் கலந்து கொடுத்துள்ளார். பாக்யராஜ் ஒரு திரைப்படம் எடுத்தால் அது எப்படி விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் என்பதை அவரது ஸ்டைலில் இந்த படத்தை பாண்டிராஜ் நிரூபித்து காட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘பரிமளா அண்ட் கோ’ குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபோக்குப் படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.