தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் மீண்டும் தனது தரமான படைப்புகளுக்கான தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது!

19

CHENNAI:

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் மீண்டும் தனது தரமான படைப்புகளுக்கான தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் தயாரிப்பான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளதுடன், இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ்Special Mention தேசிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

இந்த இரட்டை அங்கீகாரம், ஒரு திரைப்படத்தின் வெற்றியை மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக தரமான திரைப்படங்களை உருவாக்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸின் கலைப் பயணத்திற்கும் கிடைத்த மிக உயரிய பாராட்டாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றி வரும் சத்யஜோதி பிலிம்ஸ், கடந்த ஏழு தசாப்தங்களாக வணிக வெற்றியையும், கலைநயத்தையும் சமநிலைப்படுத்திய திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் தொடக்க காலத்திலேயே தேசிய விருது பெற்ற ‘கல்யாண பரிசு’ திரைப்படம் முதல், ‘ரிக்ஷாக்காரன்’‘மூன்றாம் பிறை’‘விஸ்வாசம்’ போன்ற பல முக்கிய படைப்புகள் வரை, இந்த நிறுவனம் தேசிய அளவில் தொடர்ந்து தனது முத்திரையைப் பதித்து வருகிறது.

தற்போது மூன்றாம் தலைமுறையாக நிறுவனத்தை வழிநடத்தி வரும் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன், அந்த பாரம்பரியத்தை புதிய காலத்திற்கேற்ற பார்வையுடன் முன்னெடுத்து வருகின்றனர். தரமான கதைகள், வலுவான தொழில்நுட்பம் மற்றும் சமூக பொறுப்புணர்வு கொண்ட படைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் அவர்கள், அந்த பயணத்தின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் தேசிய வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ‘கேப்டன் மில்லர்’, இந்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் மனித உணர்வுகள், சமூக நீதி மற்றும் சுதந்திரத்தின் அர்த்தத்தை வலியுறுத்தும் கதையம்சத்தால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இதற்கு முன் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்த இந்த திரைப்படம், தற்போது தேசிய திரைப்பட விருதுகளிலும் இரட்டை அங்கீகாரம் பெற்று தனது சாதனையை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்த வெற்றிக்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய அளவில் Special Mention விருதைப் பெற்ற நடிகர் தனுஷுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் சாதனைகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; காலத்தை வெல்லும் கதைகள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா மற்றும் தலைமுறைகளை கடந்து நிலைத்திருக்கும் படைப்புகளே அதன் உண்மையான அடையாளம் என்பதை சத்யஜோதி பிலிம்ஸ் மீண்டும் நிரூபித்துள்ளது.

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் கிடைத்த இந்த இரண்டு அங்கீகாரங்கள், சத்யஜோதி பிலிம்ஸின் கடந்த கால சாதனைகளுக்கு கிடைத்த பாராட்டாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இந்திய சினிமாவிற்கு மேலும் பல தரமான படைப்புகளை வழங்கும் உறுதியை வலுப்படுத்தும் புதிய உத்வேகமாகவும் அமைந்துள்ளது.