‘விஸ்வநாத் & சன்ஸ்’ -திரைப்பட விமர்சனம்!

34

சென்னை:

சூர்யா, மமிதா பைஜு ,ராதிகா சரத்குமார்,ரவீனா டாண்டன், நாசர்,பவானி ஸ்ரீ, காளி வெங்கட் ,ஜார்ஜ் மரியான், மைம் கோபி,ராஜீவ் மேனன், சுனில் ரெட்டி, சுதா, ரகுபாபு நடித்துள்ள படம்தான் “‘விஷ்வநாத் & சன்ஸ்’! இந்தப் படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

மிகப்பெரிய கோடீஸ்வரர் தொழிலதிபர் சூர்யா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டு துப்பாக்கி சுடும் விளையாட்டில் சாம்பியன் ஆகி வெற்றி பெறுகிறார். இந்த சூழ்நிலையில் சூர்யாவுக்கு 42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவர் தன் தாய் ராதிகாவின் மீது மிகுந்த அன்பு கொண்டு வாழ்ந்து வருகிறார்.  அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் அவரது தந்தை ராஜுவ்மேனன் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு தனது தாய்க்கு செய்த துரோகத்தை மறக்க முடியாமல்  அடிக்கடி தன் தாய் ராதிகாவுக்கு சொல்லிக் காட்டி வேதனைப்படுகிறார். இந்த சூழலில் சூர்யாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல விதத்தில் முயற்சி செய்கிறார்.

ஆனால் சூர்யா எதற்கும் செவி சாய்க்காமல் இருக்கும்போது தன் தாய் ராதிகாவின் ஆசைக்காக வாடகை தாய் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து தாயிடம் கொடுக்கிறார்.  இந்த சூழலில் அந்த பிஞ்சு குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நோய் இருப்பது தெரிய வருகிறது.  இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் போது மருத்துவர்கள் வாடகை தாயை கண்டுபிடித்து அவர் மூலமாக இந்த நோயை குணப்படுத்தலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.  இதனால் உண்மையான தாயான மமீதா பைஜுவை கண்டுபிடித்து கோடிக் கணக்கில் அமெரிக்க டாலர் கொடுத்து அமெரிக்கா விலிருந்து இந்தியாவுக்கு அவரை அழைத்து வருகிறார் சூர்யா. தன் குழந்தையை காப்பாற்றுவதாக சூர்யா வீட்டிற்கு வரும் மமிதா பைஜூ,  சூர்யாவின் தாய் ராதிகாவிடம் மிகவும் நெருக்கமாக பழகி அவரது அன்புக்கு பாத்திரம் ஆகிறார்.

சூர்யாவின் நல்ல குணத்தையும், நேர்மையான, உண்மையான அன்பையும் கண்டு சூர்யா மீது காதல் வசப்படுகிறார் 20 வயது இளைவரான மமிதா பைஜு. ஆனால் சூர்யா காதல் என்றாலே வெறுக்கிறார். அது மட்டுமல்லாமல் 20 வயது இளையவரான மமிதா பைஜுவின் காதலை கண்டு சில அறிவுரைகளையும் சொல்லி,  நம்மிடையே இருப்பது வெறும் ஒப்பந்தம் தான், வேறு உறவு எதுவும் கிடையாது ,குழந்தை பெற்றுக் கொடுத்ததோடு அந்த ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று சொல்லி அமெரிக்கா  செல்வதற்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால் மமிதா பைஜு அமெரிக்கவிற்கு செல்லாமல் மீண்டும் சூர்யாவுன் வீட்டிற்கே வந்து விடுகிறார். சூர்யா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் தனது தந்தை ராஜுவ் மேனன் தன் தாய் ராதிகாவுக்கு துரோகம் செய்து, இரண்டாவது மனைவியாக ரவீணா தாண்டனை திருமணம் செய்து கொண்டதால் தன் தாய் ராதிகாவுடன்  தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் வாடகை தாயான மமிதா பைஜூவின் வற்புறுத்தலுக்கு இணங்க அவரை சூர்யா திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? என்பதுதான் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் மீதி கதை.

இப்படத்தில் சூர்யா, சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர வயது தொழிலதிபராக ‘கஜினி’ படத்தில் , சஞ்சய் ராமசாமி மாதியே மிகவும் ஸ்டைலிஸாக, தனது தோற்றத்தாலும் உடல் மொழியாலும் அச்சு அசலாகப் பொருந்தி இருக்கிறார். ஒரு பணக்கார கோடீஸ்வரர் பணம் படைத்தவர்களின் குணம், உதவி செய்யும் மனப்பான்மை ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்றவாறு மிக சிறப்பாக நடித்து அதற்கு முழுநியாயம் செய்யும் வகையில் ரசிகர்களிடம்  வரவேற்பைப் பெறுகிறார். தாய் ராதிகாவை நினைத்து அழும் காட்சியில் படம் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, தன் வயதுக்கு ஏற்றவாறு அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து தனது துள்ளல் நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்கிறார். அவருடைய கதாபாத்திரம் இளம் வயதுள்ள ஒரு பெண் என்றாலும், அதற்கு மீறிய முதிர்ச்சியான உன்னதமான நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

பணக்காரக் குடும்பத்தில் வாழும் பாசக்கார அம்மாவாக இந்தப் படத்தில் நிர்மலா தேவி பாத்திரத்தில் ராதிகா வாழ்ந்திருக்கிறார். அவரது  அனுபவம் வாய்ந்த நடிப்பும், ஒரு வாடகைத் தாயாக வீட்டிற்குள் வரும் மமிதா பைஜுவின் உண்மையான  அன்பையும் குழந்தை மீதான அக்கறையையும் கண்டு தன் சொந்த மருமகளாக ஏற்றுக் கொள்ளும் காட்சிகளில் ராதிகாவின் முகபாவனைகள் அபாரம்.

சூர்யாவின் தந்தையின் இரண்டாம் மனைவி அதாவது சூர்யாவின் சித்தியாக ரவீனா டாண்டன், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு  ஒரு மென்மையான நடிப்பை கொடுத்து இருக்கிறார் .

சூர்யாவின் மைத்துனராக வழக்கறிஞராக வரும் சுனில் அதிகம் பேசாமலேயே தான் வரும் காட்சிகளில் நகைச்சுவையாக சிரிக்க வைத்து இருக்கிறார் .மற்றும் நாசர், மைம் கோபி, காளி வெங்கட், ராஜிவ்மேனன்,சுனில்ரெட்டி போன்றவர்கள் சில காட்சிகளில் வந்தாலும் அதை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி தனது ஒளிப்பதிவால் ஒவ்வொரு காட்சிகளையும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் கலர்ஃபுல்லாக உருவாக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.பின்னணி இசை படத்தை முன்னணிக்குக் கொண்டுவந்து பலம் சேர்த்திருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி. கருப்பு’ என்கிற ஆக்சன் அதிரடி படத்தில் வெற்றி பெற்ற சூர்யாவை அடுத்து அதற்கு மாறாக ஒரு கதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற  எண்ணத்தில் காதலுடன் குடும்ப உறவுகளையும், பாசத்தையும், வாழ்க்கையின் எதிர்பாராராமல் நடக்கும் திருப்பங்களையும் இணைத்து, பணக்கார குடுமப வாழ்வியலை உணர வைத்து  ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் சூப்பராக நடிக்க வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.

மொத்தத்தில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.