‘பர்த் மார்க்’ திரைப்பட விமர்சனம்!

142

சென்னை:

விக்ரம் ஸ்ரீதர் இயக்கத்தில் ஸ்ரீராம் சிவராமன் விக்ரம் ஸ்ரீதர் இருவது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் “பர்த் மார்க்”. இப்படத்தில் சபீர் கல்லாரக்கல், மிர்ணா, தீப்தி,  இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் தற்போது வெளிவந்துள்ள சூழ்நிலையில் இதன் விமர்சனத்தை பார்ப்போம்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்

கதாநாயகன் சபீர் தன் கர்ப்பிணி மனைவியான மிர்ணாவை அழைத்துக் கொண்டு தனக்கு தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் இயற்கையாக குழந்தை பெற வாக்குறுதி கொடுத்ததால்,  இயற்கை பிரசவத்துக்காக கேரளா செல்கிறார் சபீர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் உள்ள இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் தன்வந்திரி தாய் சேய் நல மையத்தில் தன் மனைவியை அனுமதிக்கிறார் . அங்குள்ள மருத்துவ சிகிச்சை அளிக்கும் பெண்கள் மிர்ணாவுக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்று கொள்ள ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பயிற்சி அளிக்கின்றனர் . மிலிட்டரியில் இருந்து வந்து போர் முனையில் ஏற்பட்ட சில சம்பவங்களால் அதனை மறக்க முடியாமல் தவிக்கிறார் சபீர்.. இதனால் அவருக்கு பல்வேறு சிந்தனைகள் வந்து போகிறது. தன் மனைவி மிர்ணாவிடம் சரியான முறையில் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறார்.

இயற்கை பிரசவத்துக்காக செல்லும் இடத்தில் அங்குள்ள காவலாளியிடம் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு ஒரு சமயத்தில் கைகலப்பாக மாறுகிறது. இதற்கிடையே தன் மனைவி மிர்ணா மீது சந்தேகம் ஏற்பட்டு மிர்ணாவின் வயிற்றில் உருவாகி இருக்கும் குழந்தை தன்னுடையது அல்ல என்று சந்தேகப்பட்டு மிர்ணாவிடம் சண்டை போடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மிர்ணா இந்த குழந்தை உன்னுடைய குழந்தை தான். நமக்கு திருமணம் ஆனபோது முதல் இரவு அன்று நீ நன்றாக குடித்து விட்டு வந்து என்னுடன் உறவு வைத்துக் கொண்டாயே.. அதை மறந்து விட்டாயா? என்று திட்டுகிறார்.  ஆனால் அதை நம்பாமல் மிர்ணாவின் வயிற்றில் வளரும் குழந்தையை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் சபீர். ஆனால் மிர்ணா தன் கணவன் சபீர் தன் குழந்தையை கொன்று விடுவார் என்ற பயத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலையத்தில் தங்கியிருந்த அவர் அந்த குடிசையை தீ வைத்து கொளுத்தி விட்டு சமீரை உள்ளே தள்ளி பூட்டி விடுகிறார். அந்தத் தீ வைத்த குடிசையில் தப்பித்து வெளியே வரும் சபீர் தன் மனைவி மிர்ணாவை துரத்துகிறார். அப்போது மிர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. சபீர் அங்கு சென்று மிர்ணாவை தாங்கி பிடித்து குழந்தையை பெற்றெடுக்க முயல்கிறார். அதன் பிறகு அந்த குழந்தையை கொன்றாரா?  இல்லையா? என்பதுதான் “பர்த் மார்க்” படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக ஷபீர் கல்லாரக்கல் ராணுவ அதிகாரியாக மனைவியை சந்தேகப்படும் கணவனாக பயமுறுத்தும் நடிப்பில் கதாபாத்திரத்திரத்தின் தன்மையை உணர்ந்து அனைவரையும்   மிரட்டுகிறார். அடிக்கடி சைக்கோ மாதிரி தன் முக பாவனையை மாற்றிக் கொண்டு நடிக்கும் காட்சியில் அசத்தி இருக்கிறார்.

கர்ப்பிணியாக வரும் மிர்ணாவை ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை கர்ப்பிணியாகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார். உண்மையிலேயே ஒரு கர்ப்பிணி பெண் எப்படி குழந்தை பிறக்கும் வரையில் கஷ்டப்படுவாரோ அதேபோல் தத்ரூபமாக சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.தன் உடல் மொழியில் கர்ப்பிணியாக அனைத்து வித உணர்ச்சிகளுடன் உணர்வுபூர்வமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

இவர்களுடன் இணைந்து நடித்த தீப்தி, பொற்கொடி, இந்திரஜித் , வரலக்ஷ்மி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

மற்ற படங்களை விட இப்படத்தில் கதைக்கேற்றவாறு மாறுபட்ட இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார்.

உதய் தங்கவேல் ஒளிப்பதிவில் அந்த காட்டு பகுதியில் உள்ள மருத்துவமனையையும், இயற்கை எழில் மிகுந்த பகுதியையும் மிக சிறப்பாக காட்டி இருக்கிறார்.

கதை எதுவாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை விவரிக்கும் முறை தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு கதையை கையாண்டிருக்கும் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் கர்ப்பிணியான மனைவியை சந்தேகப்படும் கணவனின் கதையை மையமாக கொண்டு குழந்தை பெறுவதற்கான இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை இயல்பாக திரைக்கதையுடன் பயணிக்கும்படி காட்சிகள் அமைத்து க்ரைம் கலந்த திரில்லர் ஜானரில் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.