‘ஹாட் ஸ்பாட்’ – திரைப்பட விமர்சனம்!

145

சென்னை:

நடிகர் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி,  ஜனனி, சுபாஷ், கௌரி ஜி கிருஷ்ணன், ஆதித்யா பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தான் ‘ஹாட் ஸ்பாட்’  இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த ‘ஹாட் ஸ்பாட்’   படத்தில் நான்கு விதமான கதைகளை சொல்லி இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இப்படத்தின் கதையை பொருத்தவரையில்,

ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்ல நேரம் கேட்கும்போது,  அந்த தயாரிப்பாளர் பத்து நிமிடம் தான் நேரம் கொடுப்பேன் அதற்குள் உன் கதையை சொல்ல வேண்டும் என்று இயக்குனரிடம் கட்டளையிடுகிறார்.  இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கும் அந்த தயாரிப்பாளரிடம் நான்கு விதமான கதைகளை சொல்லி அசத்துகிறார். நான்கு வெவ்வேறு கதைகளை கொண்ட அந்தாலஜி போல் அந்த தயாரிப்பாளிடம் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் சொல்கிறார்.

முதல் கதையில்,  கௌரி கிஷன்-ஆதித்யா பாஸ்கர் இணைந்து நடித்திருக்கும் திருமண கதை. அந்த கதையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க வேண்டும் என்று திறன் கொண்ட இந்த காலகட்டத்திலும் திருமணம் என்ற பெயரில் அனைத்து பெண்களும் இன்றும் மாமனார், மாமியார் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பதை வேறு விதமாக சொல்லி சொல்கிறார். பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி ஒரு பெண்  திருமணம் செய்து கொண்டு ஆணுக்கு பெண் தாலி கட்டுவதும்,  மாமனார் வீட்டிற்கு மருமகன் குடியேறுவதுமாய் கதை நகருகிறது இப்படிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சில முக்கிய சம்பவங்களை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். . இந்த முதல் கதை மிகவும் காமெடியாக அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்.

இரண்டாவது கதையில்,  கதாநாயகனாக நடன இயக்குனர் சாண்டி கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் ஆனால் அந்த காதல் வேறு விதமாக முடிகிறது. அது என்னவென்றால் சாண்டி காதலிக்கும் அம்மு அபிராமி ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் காதலை சொல்லி ஓகே வாங்கி விடுகிறார்.  ஆனால் இவர்களது காதலைப்பற்றி  சாண்டி தந்தையிடம் கூறும்போது சாண்டியின் அம்மா, அம்மு அபிராமியின் அம்மாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு அம்மு அபிராமியிடம், என் வீட்டை விட்டு ஓடிப் போய் காதல் திருமணம் செய்துக் கொண்ட உன்னுடைய அம்மா என்னுடைய தங்கை. எனக்கு திருமணம் ஆகாமல் இருக்கும் போதே அவள் ஒருவனை காதலித்து ஓடிவிட்டாள். அவளுக்கு பிறந்த நீ என் மகன் உனக்கு அண்ணன் நீ அவனுக்கு தங்கை என்று உண்மையை சொல்லி இந்த காதலை முறியடிக்கிறார் இப்படி இரண்டாவது கதை. முடிகிறது.

மூன்றாவது கதையில்,  கதாநாயகன் சுபாஷ் கதாநாயகி ஜனனி ஐயர் நடித்திருக்கிறார்கள். சுபாஷ் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் யாருக்கும் தெரியாமல் சுய இன்பம் அனுபவிக்கிறார். அது அங்குள்ள கேமராவில் பதிவாகி விடுகிறது. அதை அந்த அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் பார்த்து விட்டதால்  கிண்டல் செய்து அவமானப்படுத்துகின்றனர். இதனால் அவரது வேலை பறிபோகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எந்த வேலையும்  கிடைக்காத காரணத்தால் ஒருவர் மூலமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு ஆண் விபச்சாரியாக மாறுகிறார். அவர் ஆண் விபச்சாரியாக ஒவ்வொரு இடத்துக்கு செல்லும்போது,  ஒரு ஹோட்டல் அறையில் தன் தாய் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடி வந்துவிடுகிறார். இதுகுறித்து. வீட்டில் வந்து தன் தாயிடம் சண்டை போடும்போது அவர் தனது சிநேகிதியுடன் அந்த ஓட்டலில் தங்கி இருப்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய காதலி ஜனனிக்கு தன் காதலன் சுபாஷ் ஒரு ஆண் விபச்சாரி என்று தெரிகிறது இதனால் இவர்களுக்கு சண்டை சச்சரவு ஏற்பட சுபாஷ் தன் காதலி ஜனனியிடம் உன்னை மட்டும் தான் நான் காதலிக்கிறேன்.. வேறு யாரிடமும் நான் காதல் சொல்லவில்லை ‌ என்று வேதனைப்பட்டு மறுக்கிறார்.  ஆனால் ஜனனி அதை நம்பவில்லை,  நீ தினமும் ஒவ்வொரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு விட்டு எப்படி என்னை காதலிக்கிறாய்…உனக்கு வெட்கமாக இல்லையா என்று கண்டபடி  திட்டுகிறார். ஆண் விபச்சாரியாக இருப்பதால்  நானும் ஒரு ஆணிடம் உடலுறவு கொள்கிறேன் என்று அவரது நண்பனை உடலுறவு கொள்ள அழைக்கிறார். அந்த சூழ்நிலையில் இருவரும் தன் நிலையை உணர்ந்து சமாதானமடைந்து ஒன்று சேர்கிறார்கள் இதுதான் மூன்றாவது கதை.

நான்காவது கதையில் கதாநாயகன் கலையரசன், கதாநாயகி சோபியா இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் சில வேதனையான சம்பவங்களையும் அங்கு நடக்கும் கொடுமைகளையும் மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார்கள். அந்த தொலைக்காட்சியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவில் சிறுவர்,  சிறுமிகளை நடிக்க வைப்பதோடு வயதுக்கு மீறி  சில காம உணர்வு கொண்ட காட்சிகளை அந்த சிறு குழந்தைகளிடம் வசனம் பேச வைத்து கேவலப்படுத்துகிறார்கள்.  இந் நிலையில் கலையரசன் சோபியா இருவரது பெண் குழந்தையை முதலிரவு காட்சியில் நடிக்க வைக்கிறார்கள். இந்த காட்சியில் நடித்த 15 வயது சிறுவன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விடுகிறான். இதனால் வெகுண்டு எழுந்த கலையரசன்,  சிறுவர் சிறுமிகளை மையமாக வைத்து வயதுக்கு மீறிய காட்சிகளை அந்த தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களை எச்சரிக்கிறார். அரசாங்கம் இதுபோன்ற சிறுவர் சிறுமிகளை வைத்து ரியாலிட்டி ஷோ நடத்துவதை தடுக்கவும் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறார்.

இப்படி நான்கு கதைகளில் நடித்து இருக்கும் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், கௌரி ஜி கிஷன், ஆதித்யா பாஸ்கர் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிகவும் சிறப்பாக செய்து கதாபாத்திரத்தின் தன்மையின் உணர்ந்து மிக அருமையான நடித்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் நான்கு கதைகளுக்கு ஏற்ற்வாறு  நான்கு விதமான காட்சியமைப்புகளை மிக சிறப்பாக செய்து இருப்பதை பாராட்டலாம்.

இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் இசையில் கதைக்கேற்றவாறு அமைத்து இருக்கும் பின்னணி பாடலும், பின்னணி இசையும் இப்படத்திற்க்கு பெரிய பலத்தைக் கொடுத்து இருக்கிறது.

இப்போதுள்ள சம காலத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். அந்தாலஜி முறையில் நான்கு சிறு சிறு கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழுநீள திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதையை மிக சிறப்பாக நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார்..இறுதியாக சொல்லும் கதையின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி,  குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்லி இருப்பதை பார்க்கும்போது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கை பாராட்டாமல் இருக்க முடியாது.

மொத்தத்தில், இந்த ‘ஹாட் ஸ்பாட்’  படம் மக்களுக்கு அறிவுரை சொல்லும் படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.