சென்னை:
ஃபோகஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின்ரோஸ், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘வல்லவன் வகுத்ததடா’ இப்படத்தை விநாயக் துரை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
செக்குரிட்டி காவலாளியாக பணியாற்றுபவரின் இளைய மகள் தான் காதலித்த ஒருவருடன் ஓடிவிட, அவளுடைய மூத்த சகோதரி தந்தையின் ஏமாளித்தனத்தால் சொத்துக்களை இழந்ததால் வாடகை கார் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். சில நாட்கள் கழித்து ஓடிப்போன இளைய மகள் நிறைமாத கர்ப்பிணியாக தனது கணவருடன் தந்தையின் வீட்டிற்கு வருகிறார். இந்த சூழ்நிலையில் கார் ஓட்டுநராக பணி புரியும் மூத்த சகோதரியின் வேலையும் பறிபோகிறது. சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு தாய் வீட்டின் கடமையை செய்வதற்காக பணம் தேவைப்படுவதால் தந்தை கந்து வட்டிபைனான்சியர் ஒருவரிடத்தில் பணம் வாங்கிக் கொண்டு வருகிறார். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது விபத்தில் சிக்கி அந்த பணம் காணாமல் போய் விடுகிறது. காணாமல் போன இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் தனது தந்தைக்கு ஏற்பட்ட விபத்து குறித்தும் மூத்த மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். காவல்துறையில் புகார் கொடுத்த பிறகு இரண்டு லட்சம் ரூபாயை மீட்க நடவடிக்கை எடுத்தார்களா? விபத்துக்குள்ளான தந்தை மருத்துவமனையிலிருந்து உயிர் பிழைத்து காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக சரண் தேஜ்ராஜ் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். மற்றும் ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். முக்கியமாக காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ஒரு தனி ஸ்டைலில் நடித்து அதிகம் கவனம் பெறுகிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து கதையோட்டத்திற்கு ஏற்றவாறு தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார். சகிஷ்னா சேவியர் பின்னணி இசை உறுத்தாமல் படம் பார்க்க வைத்திருக்கிறார்.
ஆறு கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதையை எவ்வித குழப்பமும் இன்றி ரசிகர்கள் புரியும் விதத்தில் எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் விநாயக் துரை, பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை சிறு பட்ஜெட்டில் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார். நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும் என்கிற நல்ல கருத்தைச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் விநாயக்துரை.
மொத்தத்தில், இந்த ‘வல்லவன் வகுத்ததடா’ படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.