சென்னை:
‘சிறகன்’ என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாத நிலையில் அது ஒரு வகை பட்டாம்பூச்சியின் பெயர் என்று சொல்லி இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இந்தப் பட இயக்குனர் வெங்கடேஸ்வராஜ்.
‘சிறகன்’ படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பயங்கரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த கொலை வழக்கை காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் பணபலமும் அரசியல் பலமும் கொண்ட எம்.எல்.ஏ ஜீவா ரவி மற்றும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும் தன் மகனை காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த விவகாரத்தில் பிரபலமான வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரணைக்கு ஆளாக்குகிறார்கள்..
ஆனால், காவல்துறை அதிகாரி வினோத், கஜராஜை விசாரிக்கையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது. இதனையடுத்து, மூன்று கொலைகள் பற்றி விசாரிக்கும் வினோத், அவ்வபோது மறைந்த தனது தங்கையின் உயிரிழப்புக்கு காரணம் யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது அவரது நினைவால் வேதனைப்படுகிறார். இப்படி பல கதாபாத்திரங்களை மையமாக வைத்து திகில், திரில்லிங், திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த ‘சிறகன்’. படத்தில் எதற்காக இந்த கொலைகள் நடந்தது? அந்த கொலைகளை செய்த கொலையாளி யார்? என்பதை பல திருப்பங்களோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் வெங்கடேஸ்வராஜ்.
தன் மகளைத் தாக்கி கோமாவுக்கு கொண்டுபோன கேடு கெட்டஇளைஞர்களை பழிதீர்க்க, திட்டம் தீட்டி செயல்படுத்தும் வழக்கறிஞராக கஜராஜ், தனது வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியை நடிப்பிலும் வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வினோத், எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் ஜீவா ரவி, ஆனந்த் நாக், கஜராஜின் மகளாக நடித்திருக்கும் பெளசி ஹிதாயா, கர்ஷிதா ராம், பள்ளி மாணவராக நடித்திருக்கும் பாலாஜி, எம்.எல்.ஏவின் உதவியாளராக நடித்திருக்கும் பூவேந்தன், மாலிக், சானு என்று படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாகவே செய்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நம் மனதில் நின்று விடுகின்றனர்.
சேட்டை சிக்கந்தரின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாகவும், காட்சிகளை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கி அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.
ராம் கணேஷ்.கே இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் தன்மைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஏதோ ஓரிடத்தில் ஆரம்பிக்கிற கதை எங்கெங்கோ போய் முன்னும் பின்னுமாக நகர்ந்து கடைசியில் ஒரு முடிவுக்கு வரும்போது நமக்குள் எந்தக் குழப்பமும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அனைத்து கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் பதிலும், விளக்கமும் அளிக்கும் இயக்குநர் வெங்கடேஷ்வராஜை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘சிறகன்’ க்ரைம், திகில், திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் படம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.