சென்னை:
ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி, தியாகராஜன், K.பாக்யராஜ், பிரபு, R.பாண்டியராஜன், இளவரசு, முனிஷ்காந்த், பட்டிமன்றம்ராஜா, அனிகா சுரேந்திரன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், YG மதுவந்தி, RJ விக்கி, சுட்டி அரவிந்த், பிரசன்னா பாலச்சந்தர், அபிநக்ஷத்ரா, ப்ரனிக்கா, திரிஷ்வ்சாய், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘PT சார்’ இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி இருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் பிலிம் இண்டர்நேஷனல் பி லிமிடெட். சார்பாக டாக்டர்.ஐசரி K.கணேஷ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் கதைடைப் பொருத்தவரையில்,
கோவை மாவட்டத்தில் கல்வி தந்தையாக இருக்கும் தியாகராஜன் கல்லூரி மற்றும் பல பள்ளிகளை நடத்தி வருகிறார்.அந்த தனியார் பள்ளியில் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இங்கிலீஷ் டீச்சர் காஷ்மிரா மீது காதல். இந்த காதல் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் அனிகா பிரசசினை தொடங்குகிறது. கல்வி தந்தையான தியாகராஜன் நடத்தி வரும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு அனிகா பயின்று வருகிறார். ஒருநாள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் நான்கு இளைஞர்கள் அனிகாவை கட்டிப் பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட நான்கு இளைஞர்களிடம் இருந்து தப்பித்து வந்து விடுகிறார். இதனை தொடர்ந்து, நான்கு இளைஞர்கள் அனிகாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளி வருகிறது.அனிகா அதனைக் கண்டு மனதளவில் பாதிக்கப்படுகிறார். கால்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அனிகாவுக்கு கல்லூரி நிர்வாகம் மூலம் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். அனிகாவின் இறப்பு தற்கொலைதான் என காவல்துறையினர் மற்றும் அனைவரும் கூற, இது கொலைத்தான் என்று நீதிமன்றத்தில் கல்வி தந்தை தியாகராஜன் மீது கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கில் ஹிப் ஹாப் ஆதி உண்மையை நிரூபித்து ஜெயித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘PT சார்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதி, இந்தப் படத்திலும் சிறுபிள்ளைபோல் விளையாட்டுத்தனமாக நடித்து அனைவரையும் கவர்கிறார். பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து கொட்டம் அடிக்கும் காட்சிகளில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் கலகலப்பாக நடித்திருக்கிறார், இன்னொரு சிறுவனை போட்டியாக எண்ணி அவர் காஷ்மீராவை காதலிப்பதாக நினைத்து அவனுடன் போட்டி போடும் காட்சிகளில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். இப்படியே விளையாட்டுத்தனமாக காட்சிகள் இடைவேளை வரை செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வெகுண்டெழும் காட்சிகளில் அதிரடி காட்டி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசிக்கு இப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக பயன்படுத்தி நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குகுப் பிறகு கல்வி நிறுவனங்களின் உரிமையாளராக அதாவது கல்வி தந்தையாக நடித்திருக்கும் தியாகராஜன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக மட்டும் இன்றி மிரட்டலாக நடித்து அசத்திருக்கிறார்.