புதியதலைமுறை தொலைக்காட்சியில் தினமும் காலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் தினசரி செய்தி நிகழ்ச்சி “புதிய விடியல்”
CHENNAI:
உண்மை உடனுக்குடன் என உரக்கச் சொல்லி நேயர் விரும்பும் செய்திகளை வழங்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, காலை 5.00 மணிக்கு “புதிய விடியல்” என்ற பெயருடன் தனது செய்திச்சேவையை தொடங்குகிறது . இது நல்ல உணர்வுகளை பரப்பி, பார்வையாளர்கள் தங்களது நாளை மகிழ்ச்சியுடன் தொடங்க ஊக்குவிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இதயத்தை தொடும் செய்திகள் , சாதனைகள் மற்றும் உற்சாகமான செய்திக் கதைகள் போன்றவை இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். நல்ல செய்திகளை மக்களின் பார்வைக்கு தருவதோடு மக்களுக்கு நேர்மறை எண்ணங்களை பரப்புவதே இச்செய்தி நிகழ்ச்சியின் நோக்கம்.
முந்தைய நாளின் முதன்மை செய்திகள், இரவில் நாம் காணத் தவறிய செய்திகள், நாளிதழின் தலைப்புச் செய்திகள், மாநிலம் மற்றும் மாவட்டம் சார்ந்த நிகழ்கவுகள் கோவையாக வழங்கப்படுகிறது. அன்றைய தினத்தில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் குறித்த அலசல், தேசியச் செய்திகள், அரசியல் நகர்வுகள் என பல்வேறு அம்சங்களும் புதிய விடியலில் வலம்வரும். விளையாட்டுலகின் சுவாரசியங்கள், சமூக வலைதள தளங்களில் பேசு பொருளாக அமைந்த செய்திகள், பக்தி மணம் கமழும் ஆன்மிகச் செய்திகள், நேயர்களின் எண்ணத்தை வசப்படுத்தும் வணிகச் செய்திகள், வெள்ளித்திரை, சின்னத்திரை விரும்பிகளின் கவனத்தை ஈர்க்கும் செய்திகளின் கூட்டு கலவையாக ஒளிபரப்பாகிறது.