CHENNAI:
பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கேரளாவில் திருச்சூரில் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வரும் ஜோஜு ஜார்ஜ் ஒரு தாதாவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அவர் தன் மனைவி அபிநயாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் அனைவரும் எந்த விஷயமாக இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.அந்த ஊரில் மெக்கானிக் தொழில் செய்து வரும் சாகர்- ஜூனைஸ் இருவரும் தமது தொழிலில் அதிகம் வருமானம் இல்லாததால் கொலை செய்யும் கூலிப்படையாக உருவாகி ஒரு கொலை செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஜோஜு ஜார்ஜின் மனைவி அபிநயா ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்காக செல்கிறார். அங்கு வரும் அந்த கூலிப்படை யினரான சாகர்- ஜூனைஸ் இருவரும் அபிநயாவின் அழகைப் பார்த்து ரசித்து அவரது இடுப்பை கிள்ளி தடவி விடுகின்றனர்.
அச்சமயத்தில் அபிநயாவின் கணவர் அந்த சூப்பர் மார்க்கெட்டிற்க்குள் நுழைய அங்கு மனம் வேதனையோடு வெளியே வரும் அபிநயாவை என்னவென்று கேட்க இந்த கூலிப்படையினர் தன் இடுப்பை கிள்ளிய விவரத்தை சொல்ல, அதனால் கோபம் அடைந்த கணவர் ஜோஜு ஜார்ஜ் அவர்களை அடித்து நொறுக்குகிறார். அடி வாங்கிய கூலிப்படையை சேர்ந்த இருவரும் ஜோஜு ஜார்ஜை பழிவாங்க துடிக்கின்றனர். இந்த சமயத்தில் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது மனைவி அபிநயாவை கூலிப்படையினர் இருவரும் சேர்ந்து கற்பழித்து மானபங்கம் செய்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோஜு ஜார்ஜ் அந்த இருவரையும் கொல்வதற்கு தனது அடியாட்களை வைத்து பல விதத்தில் முயற்சி செய்கிறார். ஆனால் இருவரும் தப்பித்து ஜோஜு ஜார்ஜின் நண்பரை கொலை செய்கிறார்கள். அதன் பிறகு ஜோஜு ஜார்ஜின் குடும்பத்தில் உள்ள சிலரையும் கொலை செய்கின்றனர். இதனால் வேதனை அடைந்த ஜோஜு ஜார்ஜ் அந்த கூலிப்படையை சேர்ந்த சாகர்- ஜூனைஸ் இருவரையும் பழிவாங்கினாரா? இல்லையா? என்பதுதான் ‘பணி’ படத்தின் மீதி கதை.
முதன்மை கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜே இப்படத்தை இயக்கியிருக்கிறார்.அவர் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். கிரைம் த்ரில்லர் கதைக்கேற்றவாறு அவருடைய நடிப்பும் முன்னணி நடிகர்களையும் முந்தி நிற்கிறது.அவருடைய நடையும் நடவடிக்கைகளும் மக்களை கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது.
மெக்கானிக்காக வரும் இளைஞர்கள் சாகர், ஜூனைஸ் இருவரும் கொடூரமான கூலிப்படை ஆட்களாக இருப்பார்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. குடையை மறைத்துக் கொண்டு செய்யும் முதல் சம்பவத்திலேயே அனைவரையும் அதிர வைக்கிறார்கள்.
கௌரியாக அபிநயா அழுத்தமான நடிப்பை இயல்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்றும் சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதன், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பை வழங்கி படத்திற்க்கு பலம் சேர்த்துள்ளனர்.
விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் ஆகியோர் கதைக்கு தகுந்தவாறு இசையமைத்திருக்கிறார்கள், வேணு, ஜிண்டோ ஜார்ஜ் ஆகியோர் தங்களது ஒளிப்பதிவு மூலம் அனைவரின் கண்களுக்கு விருந்து அளித்திருக்கிறார்கள்.
கிரைம், திரில்லர் கதையை எழுதி இயக்கியிருக்கும் ஜோஜுஜார்ஜ், இப்படத்தின் காட்சிகளை ஏற்கெனவே பார்த்த உணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றைத் தாண்டி திரைக்கதையாலும் புதிய வகைக் காட்சிகளாலும் படத்தைக் ரசிக்க வைத்திருக்கிறார். கடைசிக் கட்ட காட்சியை யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்ததில் ‘பணி’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்த்து ரசிக்கலாம்.
ரேட்டிங்-3.5/5.
RADHAPANDIAN.