’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ திரைப்பட விமர்சனம்!

108

:

சென்னை:

50 வருடங்களுக்கு முன் சிவாஜி கணேசன் நடித்த ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்திற்கு பிறகு பல ராமாயண கதைகள் வந்திருக்கிறது. ராமாயணக் கதைகள் புத்தக வடிவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நிறைய வந்திருக்கின்றன. 1993 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள தயாரிப்பாளர் இணைந்து தயாரித்த ‘ராமாயணம் தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா’ என்ற முழு நீள அனிமேஷன் திரைப்படம் தற்போது 2டி அனிமேஷன் முறையில் மாற்றி அமைத்து வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ராமாயண கதை பல வடிவங்களில் வெளிவந்தாலும் இந்த அனிமேஷன் முறையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பார்க்கின்ற மாதிரி மிகவும் சிறப்பாக எடுத்து இருக்கின்றனர்.

தசரத மன்னனின் மகனான ராமர் அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த நிலையில் தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயி செய்த சூழ்ச்சியின் காரணமாக ராமர் 14 வருடங்கள் வனவாசத்திற்காக தன் மனைவி சீதாவுடன் காட்டிற்கு செல்கிறார். அவருடன் தம்பி லட்சுமணனும் இணைகிறார். காட்டில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஒரு அழகிய மான் சீதாவின் கண்ணில் தென்படுகிறது. அந்த மானை எப்படியாவது பிடித்துக் கொடுக்குமாறு ராமரிடம் வேண்டுகிறாள் சீதா. ராமரும் அந்த மானை பிடிப்பதற்காக சென்ற போது,  ராவணன் எப்படியாவது சீதாவை கடத்திச் செல்ல முயற்சிக்கிறார். ராமர் சென்ற‌ இடத்திலிருந்து லட்சுமணனை அழைக்கின்ற மாதிரி ஒரு குரல் ஒலிக்கிறது. அதனால் லட்சுமணன் ராமரை தேடி செல்ல சீதாப்பிராட்டியை சுற்றி ஒரு கோடு போட், டு இந்த கோட்டை தாண்டி செல்லக்கூடாது என்று சீதாவிடம் சொல்லிவிட்டு செல்கிறார்.

இந்த நிலையில் இராவணன் ஒரு முனிவர் வேடத்தில் சீதாவிடம் வந்து தனக்கு பசிக்கிறது என்றும், பசியை போக்க ஏதாவது கொடுக்குமாறு கெஞ்சுகிறார். அந்தக் கோட்டை தாண்டி செல்ல முடியாமல் சீதா இருக்கும்போது, ராவணன் சீதாவை கடத்தி சென்று விடுகிறார். சீதாவை கடத்தி சென்ற காட்சியை ஜடாயு என்ற பறவை மூலம் ராவணன் கடத்தி சென்றதை அறிகிறார் ராமன். இலங்கைக்கு கடத்தி சென்ற சீதாவை  ராமர், லட்சுமணன் காப்பாற்ற முயலும்போது அனுமன் தன் வானர படைகளுடன் இணைந்து ராமருக்கு உதவி செய்கிறார்.  இறுதியில் ராவணனை வென்று சீதாவை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பது தான் இந்த ‘ராமாயணம் தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா”  என்ற அனிமேஷன் படத்தின்படத்தின் மீதி கதை.

‘தி லெஜன்ட் ஆப் பிரின்ஸ் ராமா’ திரைப்படம் என்னதான் கார்ட்டூன் வடிவில் அனிமேஷன் வடிவில் சொல்லப்பட்டிருந்தாலும் ராமன், சீதை, லட்சுமணன், ராவணன், அனுமன் போன்ற கதாபாத்திரங்களுக்கு வரையப்பட்டிருக்கும் உருவங்கள் அப்படியே அந்த கதாபாத்திரங்களை நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர்க் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள்,  நிச்சயம் சிறுவர்களை மகிழ்விக்கும்.

ராமரின் முகத்தில் அன்பும், பரிவும், பாசமும் வெளிப்படுவது மனதை வருடுகிறது. அதேபோல் சீதா தோற்றத்தில் எளிமையும், அமைதியும் பொங்குவது அழகு.

ஆறு மாத தூக்கத்திலிருந்து எழுந்து வரும் கும்பகர்ணன் விண்ணுக்கும் மண்ணுக்கும் உடல் பெருத்து நிற்கும் காட்சியும்,  போர் முனையில் கும்பகர்ணன் நடந்து வரும்போது அவரது கால் கட்டை விரலுக்கு கீழாக வானரப் படைகள் உருண்டு ஓடுவதெல்லாம் கற்பனை  செய்ய முடியாத அளவிற்கு காட்சிகளை எடுத்து இருப்பது பாராட்டத்தக்கது.

இந்திரஜித் மற்றும் லக்‌ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே கிராபிக்ஸ் மூலம் மிக நேர்த்தியாகவும், அனைவரும் ரசிக்கும்படி வடிவமைத்து இருப்பது ரசிகர்களுக்கு  உற்சாகத்தை ஏற்படுத்துகின்ற அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ராமன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதாவுக்குக் குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, இராவணனுக்குக் குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லட்சுமணனுக்குக் குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், அனுமானுக்குக் குரல் கொடுத்த லோகேஷ் மற்றும் இராமாயணக் கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா ஆகிய அனைவரும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

வி.விஜயேந்திரபிரசாத் க்ரியேடிவ் இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

மொத்தத்தில், ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.