சென்னை:
ஆரவ், ஓவியா, ஆஷிமா, யாஷிகா ஆனந்த், கே.எஸ் .ரவிக்குமார், நாசர், யோகி பாபு, பாகுபலி பிரபாகர், சாயாஜி ஷிண்டே, ராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்தான் “ராஜ பீமா” இப்படத்தை நரேஷ் சம்பத் கதை எழுதி இயக்கி இருக்கிறார். சுரபி மோகன் தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தின் கதையஒப் பொருத்த்வரையில்,
பொள்ளாச்சியில் வாழ்ந்து வரும் சுரபி தியேட்டர் உரிமையாளரான நாசரின் மகன் ஆரவ் பள்ளி பருவத்தில் யானை பொம்மைகளின் மேல் அதிக பற்று கொண்டவராக இருக்கிறார். தாய் மீது அதிக பாசம் கொண்ட ஆரவ்வின் தாய் திடீரென்று இறந்து விட்டதால் மனவேதனையில் யாரிடமும் பேசாமல் பித்து பிடித்த மாதிரி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரை எப்படியாவது மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று தந்தையை நாசர் நினைக்கிறார். ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் காட்டு யானை குட்டி ஒன்று அந்த ஊருக்குள் வர அப்போது யானையின் அருகே சென்று பாசத்துடன் ஆரவ் அரவணைத்து மகிழ்ச்சியாக பேசுகிறார்.
இதனைக் கண்ட ஆரவின் தந்தை நாசர் அந்த குட்டி யானையை வளர்க்க முடிவு செய்து வனத்துறையிடம் முறையான அனுமதி பெற்று அந்த யானைக்கு பீமா என்று பெயர் சூட்டி தனது வீட்டிலேயே வளர்க்கிறார். ஆரவுடன் சேர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த யானை யிடம் பாசமுடன் பழகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் பீமா என்ற அந்த யானையுடன் ஆரவ் காட்டில் உள்ள யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்திச் சென்று விற்கும் கும்பலை அடித்து உதைத்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வனத்துறை அமைச்சர் கே எஸ் ரவிக்குமார் இந்த கடத்தலுக்கு உடனடியாக இருக்கிறார். இவர் தனது ஜாதகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதால் தனது ஜாதகப்படி பதவி பறிபோகும் சூழ்நிலை உண்டாகிறது. அதற்குப் பரிகாரமாக ஜோதிடர் யோசனைப்படி ஒரு நல்ல சுழி உள்ள பெரிய தந்தங்கள் உடைய யானையை பலி கொடுத்தால் உன்னுடைய பதவி நீடிக்கும் என்று கூறுகிறார் அந்த ஜோதிடர். இதனை நம்பி அவர் காட்டில் பல யானைகளை தேடியும் கடைசியில் ஆரவ் வளர்த்த யானையை கடத்திச் செல்ல திட்டமிட்டு வனத்துறை அதிகாரிகள் மூலம் அந்த பீமா என்ற யானையை மதம் பிடித்தது என்று சொல்லி யானைகள் முகாமிற்கு எடுத்துச் செல்கின்றனர். அப்போது ஆரவ் தான் வைத்திருந்த வனத்துறை பர்மிஷன் கடிதங்களை எடுத்துக் கொண்டு, பாசத்துடன் வளர்த்த அந்த பீமா என்ற யானையை மீட்க செல்கிறார். ஆனால் முகாமில் அவரது பீமா யானை காணாமல் போய்விடுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஆரவ், தான் வளர்த்த பீமா யானையை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் ‘ராஜ பீமா’ படத்தின் மீதி கதை.
இப்படத்தில் கதாநாயகனாக ஆரவ் நடித்திருக்கிறார். ராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆரவ். மாஸ் கதாநாயகனுக்கான அத்தனை அம்சங்களோடும் யானை மீது பாசம் காட்டும்போது யானை காணாமல் போனவுடன் காட்சிகளில் நெகிழ வைத்து, வில்லன்களுடன் மோதுகின்ற சண்டை காட்சிகளில் உடல்பலம் காட்டி, காதல் காட்சிகளில் திறமஒயாக நடித்து படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஆஷிமா நர்வால், ஆரவை காதலிப்பது, ஒரு பாடல், சில காட்சிகள் என்று தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
வனத்துறை அமைச்சர் மந்திர வாசகமாக கே.எஸ். ரவிக்குமார் அதிகாரத்தை கைப்பற்ற எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி, சிரித்துக் கொண்டே வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.
ஓவியா, ஒரு பாடலுக்கு மட்டுமே கலர்ஃபுல் உடைகளில் கவர்ச்சி காட்டி ரசிக்கும்படி ஆடிவிட்டுப் போகிறார்.
தந்தை சிங்கராயராக நாசர், மாமாவாக அருவி மதன், துர்காவாக யாஷிகா ஆனந்த், கடத்தல் வேட்டைக்காரன் தயாளனாக பாகுபலி பிரபாகர், முதல்வராக சயாஜி ஷின்டே மற்றும் யோகி பாபு, என பலர் படத்தின் காட்சிகளுக்கு சிறப்பு செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் மிக அருமையாக படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையில் பாடல்கள் பின்னணி இசையிலிருக்கும் உழைப்பு கதையோட்டத்திற்கு தகுந்தவாறு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
விலங்கு வதை தடுப்புச் சட்டம் விலங்குகளையோ பறவைகளையோ பயன்படுத்தி படம் எடுக்கக் கூடாது என்ற தடை சட்டம் உள்ள சூழ்நிலையில், ஐந்தறிவு உள்ள யானைகள் ஆறறிவு படைத்த மனிதர்களால் எப்படியெல்லாம் அழிக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டி, யானைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டி வனவிலங்கிற்கும் மனிதனுக்கும் இருக்கும் நட்பை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் நரேஷ் சம்பத்.
மொத்தத்தில், ‘ராஜபீமா’ குடும்பத்துடன் காண வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.