‘படவா’ -திரைப்பட விமர்சனம்!

81

சென்னை:

விமல், சூரி, ஷிரிட்டா ராவ், கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில், வினோதினி ம்ற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “படவா” இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.வி.நந்தா.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இதில் கதாநாயகன் நடித்திருக்கும் விமல், தனது நண்பன் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வேலை, வெட்டி எதுவும் இல்லாமல் ஊரை சுற்றி வருவதோடு, சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு கிடைக்கும் பொருட்களை விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை  கொடுப்பது என்று மற்றவர்களுக்கு மிகுந்த பாரமாக இருக்கிறார். ஊரில் வம்பிழுத்து திரிந்து கொண்டிருந்த விமலை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மலேசியா நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கே யாருக்கும் தொல்லை இல்லாமல் பணி புரிந்துக் கொண்டிருந்த விமலுக்கு வேலை பறிபோகிறது. மலேசியாவில் வேலை இல்லாத சூழ்நிலையில் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்புகிறார் விமல்.

மீண்டும் ஊருக்கு வந்தால் அங்குள்ள அனைவரும் தன்னை ஆளாளுக்கு  அவமானப்படுத்துவார்கள் என்று நினைத்த விமலை அந்த  ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்பதோடு, அவரை ஊர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஊரே சேர்ந்து விரட்டி அடித்த விமலை மீண்டும் ஊரே சேர்ந்து ஊர் தலவராக்க என்ன காரணம் என்பதையும், ஊரையே தனது சுயநலத்துக்காக பலிகடாவாக்கும் வில்லன் என்ன ஆனான் என்பதையும் காமெடியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லும் படம்தான் “படவா”

ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற திருட்டு இளைஞன் கதாபாத்திரம் விமலுக்குப் புதிதல்ல.அதனால் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அநாயசமாக தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அடுத்தவருக்கு டார்ச்சர் கொடுப்பது,  காதலியிடம் வழிவது,  வில்லனிடம் ஆக்ரோசமாக மோதுவது, ஊர்த்தலைவராக பஞ்சாயத்து பேசுவது போன்ற காட்சிகளில் சற்றும் குறைவின்றி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

வழக்கம் போல கதாநாயகனுடன் சுற்றும் காமெடி கதாபாத்திரம்தான் சூரிக்கு. எப்போதும் போல இவரும் காமெடியில் ரசிக்கவைக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ், இவருக்கு படத்தில் அதிக காட்சிகள் இல்லை என்றாலும் அளவான அழகுடன்மிக சிறப்பாக நடித்து கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக, எளிமையாக  நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் கேஜிஎஃப் ராம், தன்னுடைய ஸ்டைலில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு தகுந்தவாறு பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கதைக்கேற்ற ஒளியமைப்பு படத்திற்கு பலம் சேர்த்து  இருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா வழக்கமான இது போன்ற கதைகள் பல வந்தாலும் தற்போதுள்ள ரசிகர்களுக்கு ஏற்ற்வாறு  இந்த கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கமர்ஷியலாகவும் இயக்கியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நம் நாட்டில் சீமைக்கருவேல மரங்களை வளர்த்து  அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிச் சுட்டி காட்டியதோடு அதைக் கடந்து வருவதற்கான வழிமுறைகளையும் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், ‘படவா’  படத்தைப் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.