சென்னை:
இயக்குனர் பாரதிராஜா, நட்டி நடராஜ், ரியோ ராஜ், சாண்டி, யோகி பாபு, வடிவுக்கரசி, துளசி, ஆதிரா, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்தான் ‘நிறம் மாறும் உலகில்’. இப்படத்தின் மூலம் நான்கு கதைகளை ஒவ்வொன்றாக அம்மா செண்டிமெண்ட் கலந்து எழுதி பிரிட்டோ ஜே.பி, தமிழ் ரசிகர்கள் ரசிக்கின்ற அளவிற்கு இயக்கியிருக்கிறார். இந்த நான்கு கதைகளையும் இணைக்கக்கூடிய ஒரு ஐந்தாவது கதை. இந்த ஐந்து கதைகளிலும் அடிநாதமாய் இருக்கும் அம்மா – பிள்ளை உறவு.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
லவ்லின் சந்திரசேகர் தனது பிறந்தநாள் விழாவின்போது தன் ஆண் நண்பருடன் கட்டிப் பிடித்து உரையாடும்போது, அவரது தாய் விஜி சந்திரசேகர் கண்டிக்கிறார்.இதனால் கோபமடைந்த லவ்லின் சந்திரசேகர் தன் தாயிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். எங்கேயாவது வெளியூருக்கு சென்று விடலாம் என்று நினைத்த அவர் தன் தோழியின் வீட்டுக்குச் செல்ல ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு, அவரது அருகில் வந்து அமர அப்போது லவ்லின் தன் தோழியிடம் தொலைபேசியில் அம்மாவை திட்டி பேசுகிறார்.
இதனைக் கேட்டதும் யோகி பாபுவுக்கு கோபம் ஏற்படுகிறது. இருந்தாலும் லவ்லினின் நிலையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, அம்மா என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகளைச் சொல்கிறார். தாய் பாசத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொன்னவுடன் லவ்லினின் தாய் பாசம் அதிகமாகிறது. இறுதியில் லவ்லின் தன் தாயுடன் சென்று இணைந்தாரா? இல்லையா? “நிறம் மாறும் உலகில்” படத்தின் மீதிக் கதை.
யோகிபாபு சொன்ன நான்கு கதைகளைப்பற்றி பார்ப்போம்.
மும்பையில் பெரிய தாதாவாகவும், தாய் பாசத்துக்கு ஏங்குபவராகவும் இருக்கிறார் நட்டி நடராஜ். அவருடைய தொழில் எதிரி இன்னொரு தாதாவான சுரேஷ் மேனனின் அடியாட்களை தனது துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார். இதனால் கடுமையான கோபமடைந்த சுரேஷ் மேனன் எப்படியாவது நட்டி நடராஜை கொன்று விட துடிக்கிறார். இவ்விரு தாதாக்களின் மோதலுக்கிடையே, சாதி ஆணவக் கொலைக்கு பயந்து தப்பி ஓடும் இளம் காதலர்களான ரிஷிகாந்த் – காவ்யா அறிவுமணி இருவரும் சுரேஷ் மேன்னனிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களை வைத்து நட்டி நடராஜை கொலை செய்ய முயலுகிறார் சுரேஷ் மேனன். அவரிடமிருந்து இந்த காதலர்கள் தப்பித்தார்களா?ஈல்லையா? என்பதுதான் முதல் கதை.
வயதான தம்பதியரான பாரதிராஜாவும், வடிவுக்கரசியும் தாங்கள் பெற்றெடுத்த இரண்டு மகன்களால் கைவிடப்படுகின்றனர். வயதான இறுதி நாட்களில் பசியோடு வாடுகின்றனர். அப்போது அவர்கள் இளமையில் வாழ்ந்த காதல் வாழ்க்கையை நினைத்துப் பார்த்து மன வேதனை அடைகிறார்கள். பசி தாங்க முடியாமல் அவர்கள் இருவரும் இறந்து விடுவது இரண்டாம் கதை.
மீனவ கிராமத்தில் பிறந்த ரியோராஜ் தன் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு கலெக்டராக வேண்டும் என்று படிக்கிறார். ஆனால் தந்தை இறந்து விட்டதால் மேலும் படிக்க முடியாமல் தவிக்கிறார், இந்த சூழ்நிலையில் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து துடிக்கிறார். தன் தாயைக் காப்பாற்ற கேன்சர் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. ஒரு கொலை செய்தால் பணம் கிடைக்கும் என்று உள்ளூர் தாதா மைம் கோபி சொல்கிறார். பணத்திகாக ரியோரஜ் அந்த கொலையை செய்தாரா? தனது தாயை கேன்சர் நோயிலிருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மூன்றாவது கதை.
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர் சாண்டி அவரது ஆட்டோவில் பயணிக்கும் அய்ரா கிருஷ்ணனை காதலிக்கிறார். காதல் கைகூடி திருமணம் செய்துக் கொள்ளும் சமயத்தில், தற்செயலாக வந்து சேர்ந்த துளசி மூலம் என்ற ’அம்மா’வின் பாசம் கிட்டுகிறது. இதனால் கோபம் அடைந்த அவரது காதலி, புதிதாய் கிடைத்துள்ள அம்மாவாவை விட்டு விட்டு வா…அப்போதுதான் நமது திருமணம் நடக்கும்.. என்கிறார். சாண்டிக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டு இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அவர் யாரைத் தேர்ந்தெடுத்தார்? என்பதுதான் நான்காவது கதை.
இந்த நான்கு கதைகளில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி, ரியோ ராஜ், பாரதிராஜா – வடிவுக்கரசி, சாண்டி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு தகுந்தவாறு அதன் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்க்கும் விதத்தில் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிக நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பந்தத்தையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும், தாய் பாசத்தின் உணர்வுகளையும் அளவுக்கு அதிகமான சொல்லி சோகத்தை பிழிந்திருபதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாரதிராஜாவும், வடிவுக்கரசியும் பசியால் வாடுவதை நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அங்கங்கே நம்பிக்கையூட்டும் விதமாக கதை இருந்தாலும் அவநம்பிக்கையே பெரும்பான்மை இடம் பிடித்திருப்பதைப் பார்க்கும் போதும் சோகத்திற்கு முக்கியத்துவம் அளித்து இருப்பதும் நம்மை கண் கலங்க வைத்து விடுகிறது.
மொத்தத்தில், ‘நிறம் மாறும் உலகில்’ தாயை போற்றும் படம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.