கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு வித்தியாசமானபடைப்பில் எஸ்.வி.சேகர் – ஷோபனா முதன்மைகதாபாத்திரமாக நடிக்கும் “மீனாட்சி சுந்தரம்” புத்தம்புதிய மெகாத்தொடர் வருகிற ஏப்ரல் 28 முதல் திங்கள்முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகஇருக்கிறது. கதையின் முதன்மை கதாபாத்திரமான சுந்தரத்தின்மனைவி காலமான பிறகு, சுந்தரம் தனது இரண்டுமகன்களான பிரபு, அருள் மற்றும் தனது ஒரே மகளானவைஷ்ணவியுடன் கஸ்தூரி இல்லத்தில் வசித்து வருகிறார்.
இதில், சுந்தரத்துக்கும், அவரது இரு மகன்களுக்கும்இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. மறுபுறம், நாயகியானமீனாட்சி சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகிறாள். ஒருவழியாக சுந்தரத்தை கண்டுபிடிக்கும் மீனாட்சி, சுந்தரத்தைதிருமணம் செய்து கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டானசூழலுக்கு தள்ளப்படுகிறார். இறுதியாக, இவர்களது குடும்பத்துக்கு வரும் சிக்கல்கள்என்னென்ன? இந்த திருமணம் நடக்க காரணம் என்ன?போன்ற சுவாரஸ்யமான தேடல்களுடன் கதைவிறுவிறுப்பாக தொடரும்.