சென்னை:
ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி தயாரித்திருக்கும் லெவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜ்ல்ஸ். இப்படத்தில் நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சென்னை ஆவடியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடைக்கிறது. இதே போலவே மர்மமான முறையில் தொடர்ந்து சில கொலைகள் நடக்கின்றன. அனைத்து கொலைகளும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டதால் காவல்துறையினரால் அந்த சைக்கோ கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்தக் கொலை வழக்குகளை விசாரிக்கும் காவல்துறையை அதிகாரியான ஷாஷாங் பலவித முயற்சிகள் செய்தும் அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் காவல்துறை அதிகாரி ஷா ஷாங் காவல்துறை காரில் செல்லும்போது விபத்தில் சிக்கி கொள்ள, அவர் கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.
அதனால் மற்றொரு காவல்துறை அதிகாரியான நாயகன் நவீன் சந்திராவிடம் இந்த மர்ம கொலைகளை செய்யும் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க உத்தரவிடுகிறார் காவல்துறை கமிஷனர் ஆடுகளம் நரேன். தனக்கு உதவியாக இருக்க உதவி ஆய்வாளர் திலீபனை கூடவே தன்னுடன் இருக்குமாறு சொல்கிறார் நவீன் சந்திரா. சைக்கோ கொலையாளியால் கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவர் வீட்டில் விசாரணையை மேற்கொள்ளும்போது அனைவரிடமும் கொலையானவர்கள் ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும்போது எடுக்கப்பட்ட குருப் போட்டோவை பார்க்கிறார் .அந்த போட்டோவின் அடிப் படையில் பள்ளியின் நிர்வாகியான அபிராமியை சந்த்தித்து இந்த மர்மமான கொலைகளைப்பற்றி நவீன் சந்திரா விசாரிக்கும்போது அவருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அதனை வைத்து அந்த சைக்கோ கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்கிறார். இறுதியில் அந்த மர்ம கொலையாளியை நவீன் சந்திரா கைது செய்தாரா? இல்லையா? என்பதுதான் ’லெவன்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நவீன சந்திரா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தன்னுடைய பார்வையாலும் தனது உடல் மொழியாலும், அரவிந்தன் கதாபாத்திரத்தோடு அத்தனை அம்சங்களும் அவருக்குப் பொருந்தியிருக்கின்றன. படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் தன்னுடைய சிறந்த நடிப்பால் கவனிக்க வைத்து விட்டார். இவரின் கதாபாத்திரம் யாரும் யூகிக்கமுடியாத அளவிற்கு படத்தின் காட்சிகளில் தனித் திறமையை காட்டி அசத்தியுள்ளார்.
பள்ளியின் நிர்வாகியாக நடித்திருக்கும் அபிராமி, காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் திலீபன், காவல்துறை அதிகாரியாக வரும் ஷாஷாங், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இமான் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது. திகில் படத்திலும் சிறப்பாக இசை அமைக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.பின்னணி இசையில் படத்தின் தரத்தை பெரிய அளவில் உயர்த்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் உழைப்பில் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன.
கதை,எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜில்ஸ். இது போல வழக்கமான கதைகள் பல வந்தாலும் இப்படத்தின் கதைக்கு தகுந்தவாறு நடிகர்கள் தேர்வு மற்றும் கொலைக்கான காரணம் ஆகியனவற்றில் படத்தை வேறுபடுத்தி மிக அருமையாக காட்டியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம். மற்ற திரில்லர் படங்களைப் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ், ஜானர் நிறைந்த படத்தை பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘லெவன்’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.