’மாரீசன்’ திரைப்பட விமர்சனம்!

74

சென்னை:

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில்; ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் ‘மாரீசன்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுதீஸ் சங்கர். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரள, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன்,  பி.எல்.தேனப்பன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ண, ஹரிதா முத்தரசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வரும் திருடரான பகத் பாசில் வரும் வழியில் நாகர்கோவிலுக்கு வந்து தியேட்டரில் படம் பார்க்க சென்ற இடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள்,  ஒரு செல்போனையும் திருடிக் கொண்டு இரவு நேரத்தில்  நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டுக்கு திருடப் போகிறார் . அங்கு பல வீடுகளை பார்த்தாலும், தனக்கு மனதில் படும் வீட்டை மட்டுமே குறிவைக்கும் பழக்கமுடைய  பகத் பாசில் கண்ணீல் படுவது  கவன மறதி  நோயால் பாதிக்கப்ப்ட்டிருக்கும் (அல்சைமர் நோயாளி வடிவேலு) என்பவருக்கு சொந்தமான வீட்டில்  திருட செல்லும் போது படுக்கையில் கை சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பதை கண்டு தன் வீட்டில் வந்திருக்கும்,  நபர் தனது மகன் குமார் என்று நினைத்து பகத் பாசிலை அழைக்கிறார். பிறகு அவரிடம் தனக்கு முதுமையால் ஏற்படும் நினைவிழப்பு நோய் (அல்சைமர் ) இருப்பதாகவும் அதனால் தன் மகன் கட்டிப் போட்டு விட்டுப் போய் இருப்பதாகவும் அவிழ்த்து விட்டு வெளியே அழைத்துப் போனால் இருபத்தைந்து ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறுகிறார். 

 மேலும் அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டால்  அங்கே உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து கொடுப்பதாக சொல்கிறார். அதன் பிறகு பாலகாட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விடுவேன் என்றும் கூறுகிறார். சரி என்று ஒப்புக் கொண்ட பகத் பாசில் ம்வடிவேலு சொன்னபடி ஏ.டி.எம்-ல்  இருந்து 25 ஆயிரம் ரூபாய் எடுத்து அவரிடம் கொடுக்கிறார்,  வடிவேல் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து கொடுக்கும்போது  25 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதை பார்க்கும் பகத் பாசில் அந்த மொத்த பணத்தையும் திருட நினைக்கிறார். அதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வடிவேலுவை அமர வைத்து எங்கும் செல்லாதபடி பகத் பாசில் அவருடனே பயணிக்கிறார். மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்லும் போது நினைவுகள் தவறி முன்னுக்கு பின் முரணாக தான் செல்ல இருக்கும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிகிறார் வடிவேலு.

இதனையடுத்து  திருவண்ணாமலையில் உள்ள உறவினர்  லிவிங்ஸ்டனை பார்க்க வடிவேலு ஆசைப்பட பகத்பாசில் அங்கும் அழைத்து செல்கிறார். இதே நேரத்தில் இருவரும் ஒன்றாக பயணிக்கும் போது, இரவில் ஒய்வெடுக்க அறை எடுத்து தங்கும் ஊர்களில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கிறது.

காவல்துறை அதிகாரியான கோவை சரளா தலைமையிலான காவல்துறையினர், இந்த கொலைகள் எதனால் நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். கொலைகளை செய்த குற்றவாளி யார் என தெரியாமல் காவல்துறையினர் தேடும் நேரத்தில் ஆசிரியர் ஒருவரை சுத்தியால் அடித்து கொலை செய்கிறார் வடிவேலு.  அதே சமயம் பகத் பாசில் தன் நண்பன் விவேக் பிரசன்னாவுடன் இணைந்து வங்கிக் கணக்கில் இருக்கும் வடிவேலுவின் பணம்  25 லட்சத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்.  இறுதியில் வடிவேலுவிடம் இருந்து 25 லட்ச ரூபாயை பகத் பாசில் கொள்ளை அடித்தாரா? காவல்துறையினர் எதற்காக கொலைகள் நடந்தது என்பதை கண்டு பிடித்தார்களா? என்பதுதான் “மாரீசன்” படத்தின் மீதிக் கதை.

வேலாயுதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு, தனது இயல்பான நடிப்பின் மூலம் எந்தவித காமெடி கலப்பு இல்லாமல் ஒரு அமைதியான வயதான மறதி நோயால் அவதிப்படும் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாமல் அனைவரும் ரசிக்கும் விதத்தில் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

வடிவேலுக்கு இணையாக நல்லவன் போல் நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் பகத் பாசிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார். தனது துறுதுறு நடிப்பின் முலம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு  அளவாக நடித்து கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை என்றாலும், இளையராஜாவின் சில பாடல்கள் நம்மை கவர்கிறது.

ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, இருவரது பயணத்தை  வண்ணமயமாக எதார்த்தமாக படமாக்கி இருப்பதோடு, ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் என்று எழுதியிருக்கும் ஏ கிருஷ்ண மூர்த்தியின் படைப்பை இயக்கியிருக்கிறார் சுதீஸ் சங்கர். ஏற்கெனவே பல படங்களில் வெளிவந்த மூலக் கதையை வைத்துக் கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக கொண்டு விறு விறுப்பான முறையில் சஸ்பென்ஸ்  கலந்த படமாக இயக்கி இருந்தாலும் பல காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது. அந்த குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால், ஓகே என்றுதான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில், ‘மாரீசன்’  படத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.