சென்னை:
ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி , விஜே பப்பு, விக்ரம், திவ்யா, ஜான் விஜய், தேவி பிரியா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “தி பெட்”. இப்படத்தை எஸ். மணி பாரதி எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஐடி கம்பெனியில் பணி புரியும் ஸ்ரீகாந்த், தனது நண்பர்கள் பிளாக் பாண்டி, பப்பு, விக்ரம்,ஆகியோர் வார இறுதியில் வெளியூர் எங்காவது செல்ல வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். அப்போது நான்கு பேரும் தனியாக செல்லும் போது ஏதாவது ஒரு கால்கேர்ள் தங்களுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டு ஸ்ரீகாந்த் சிருஷ்டி டாங்கேயை தன்னுடன் ஊட்டிக்கு அழைத்து செல்கிறார். நண்பர்கள் அனைவரும் ஜாலியாக வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று அங்கு ஒரு விடுதியில் உல்லாசமாக நேரத்தை கழிக்க திட்டமிடுகிறார்கள். சிருஷ்டி டாங்கேவின் அம்மாவும் இந்த நான்கு பேருடன் இணைந்து இன்பம் அனுபவிப்பதற்காக பணம் வாங்கிக்கொண்டு, அவர்களுடன் ஊட்டிக்கு அழைத்து செல்ல ஒப்புக் கொள்கிறார்.
ஊட்டியில் உள்ள விடுதியில் அனைத்து நண்பர்களும் சிருஷ்டி டாங்கே மீது சிறு சிறு காமவலை வீச, ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் அவர் மீது காதல் வலை வீசுகிறார். சிருஷ்டி டாங்கேவை அடைவதற்காக ஸ்ரீகாந்த் தனது நண்பர்களை தொட முடியாதபடி தவிக்க விடுகிறார். அதே சமயம், சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் துடிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சிருஷ்டி டாங்கேவும், ஸ்ரீகாந்த்துடன் வந்த நண்பனும் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களுடைய கதி என்னானது என்பது கேள்விக்குறியாகிறது. ஊட்டியில் உள்ள காவல்துறையினர் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க முற்படுகின்றனர். இதில் உண்மை வெளிவந்ததா? காணாமல் போன இருவரும் கிடைத்தார்களா? என்பது தான் “தி பெட்” படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், ஐடி கம்பெனியில் பணி புரியும் பணியாளர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.கால் கேர்ள் என்றாலும் அவர் மீது காதல் கொண்டு அவரைப் பாதுகாக்கத் துடிக்கும் காட்சிகளில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார். இந்தப் படத்தில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அனைவரையும் கவர்கிறார்.
கால்கேர்ள் கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே மாறுபட்ட முறையில் ஒரு நடிப்பை கொடுத்து இருக்கிறார். இளமை துள்ளலுடன் ஜிவ்வென கவர்ச்சிகரமான உடையில் காட்சிக்கு காட்சி சிருஷ்டி டாங்கே அழகோடு கொஞ்சம் கவர்ச்சியும் காட்டி வாலிப ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை உணர்ந்து அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தாஜ்நூர் இசையில் பாடல் கேட்கும் ரகம்தான்.பின்னணி இசையில் படத்தை முன்னணிக்குக் கொண்டுவர கடுமையான உழைப்பு தெரிகிறது.
ஊட்டியின் பார்த்துப்பழகிய வழக்கமல்லாத இடங்களில் சென்று ஒளிப்பதிவு செய்யாமல் அழகும், இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் ஒளிப்பதிவாளர் கோகுல் படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி. ஒரு படுக்கையை (பெட்) மையமாக வைத்து கதையை சொல்லி வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். ஒரு கால் கேர்ளை நாயகியை மையப்படுத்திய கதைக்கரு என்றாலும், எந்தவித ஆபாசமும் இன்றி காட்சிகளை இயக்கி இருப்பதை வரவேற்புக்குரிய விசயங்களாக பார்க்க கூடியவை. சஸ்பென்ஸ் திரில்லர் என இரண்டு ஜானர்களை அளவாக கையாண்டு இரண்டு மணி நேரம் படம் செல்வதே தெரியாமல் இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், ‘தி பெட்’ கண்டிப்பாக அனைவரையும் கவரும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.