’வங்காள விரிகுடா’ திரைப்பட விமர்சனம்!

26

சென்னை:

புதுமுகம் குகன் சக்கரவர்த்தி, அலினா ஷேக், டிப் லேனா ,வையாபுரி, பொன்னம்பலம் , வாசு விக்ரம், நடித்துள்ளனர். இப்படத்தை குகன் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், நடனம், சண்டைப் பயிற்சி (தனிநபர்), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடல், பின்னணி இசை, தயாரிப்பு வடிவமைப்பு, தலைப்பு, சிகை அலங்காரம், வெளிப்புற அமைப்பு மேலாண்மை, தயாரித்து, இயக்கியும் இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி. இந்த படத்தில் 21 துறைகளையும் தனி ஒருவராக கையாண்டு படத்தை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பகுதியில் பிரபலமான தொழிலதிபராக விளங்கி வருகிறார் குகன் சக்கரவர்த்தி. ஒரு குறுநில மன்னனாக அந்தப் பகுதியில் அண்ணாச்சி என்று நண்பர்களாலும் மற்றவர்களாலும் அன்போடும் மதிப்போடும் வலம் வருகிறார் குகன் சக்கரவர்த்தி. இளம் வயதில் பிரிந்த காதலியை நினைத்து ஏங்கும் போது தன் கண்ணெதிரே முன்னாள் காதலி கடலில் குதித்து தற்கொலைக்கு முயல்வதை பார்க்கும் அண்ணாச்சி அவளைக் காப்பாற்றுகிறார். முன்னாள் காதலியின் திருமண வாழ்க்கையும் தன்னைப் போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் குகன் சக்கரவர்த்தி, அவருக்கு ஆறுதல் சொன்னபோது இருவர் மனமும் ஒன்றிணைகின்றன. பின்னர் கொடுமை செய்யும் காதலியின் கணவனை கொன்று காதலிடன் வாழ்கிறார். இந்த நிலையில் அவரால் கொலை செய்யப்பட்டவர்,அவரது காதலியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். இறந்து போனவர் எப்படி மீண்டும் உயிரோடு வந்து பேச முடியும்?என்று குழம்புகிறார் குகன் சக்கரவர்த்தி. மேலும் நடக்கும் பல சம்பவங்கள் அவரது காதலியையும் அவரையும் அதிர்ச்சிள்ளாக்குகின்றன. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே ‘வங்காள விரிகுடா’ படத்தின்மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, பார்ப்பதற்கு  பழைய நடிகர் கரண் போன்று உருவம் கொண்டிருப்பதால், எளிதில் மக்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். காதல்,ஆடல், பாடல், வசனம், சண்டை  என அனைத்தையும் தனி ஒருவனாகவே கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட்டு இப்படம் முழுவதையும் மிக கவனமாக இயக்கி இருக்கிறார் குகன். .

கதாநாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி என்று இரண்டு கதாநாயகிகளும், வழக்கம் போல காட்சிப் பொருளாக இல்லாமல், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாகவும் நடித்து இருக்கின்றனர்.

பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் இப்படத்தில் பல புதுமுகங்கள் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இப்படத்தைத் தனது தோளில் சுமந்து இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி. அறிஞர் அண்ணா,கலைஞர்,ஸ்டாலின்,அப்துல்கலாம் போல் அனைவரும் வாழுங்கள் என்கிற கருத்தைச் சொல்லி ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் குகன் சக்ரவர்த்தி. அதே சமயத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் துயில் கொண்டிருக்கும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்றவர்களின் சமாதிகளுக்கு புதிய வடிவம் கொடுத்து மெரினா கடற்கரை பெயரை மாற்றி திராவிட கடற்கரை என பெயர் சூட்ட வேண்டும் என  வேண்டுகோள் விடுத்து இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘வங்காள விரிகுடா’ அனைத்து ரசிகர்களும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.