‘ஆட்டி’ திரைப்பட விமர்சனம்!

13

சென்னை:

இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சௌந்தர் ,செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி கரன் சக்கரவர்த்தி, , ஆலன் கிருஷ்ணா, சிந்து குமரேசன் ,ஆனந்த் சௌந்தரராஜன், நேசன், குயிலி நாச்சியார் ,உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா நடித்துள்ள படம்தான் “ஆட்டி”.

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் நடித்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் கிட்டு.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

1970-களில் ஒரு மலைக்கிராமத்தில் வாழும் தைரியமான பழங்குடி ப​டித்த பெண் அபி நட்சத்திரா.  தன் கிராமத்துக் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் அவள், அங்கு ஒரு சிறிய பள்ளியை பழங்குடி குழந்தைகளுக்காக நடத்தி வருகிறாள். இந்த சூழலில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் அந்த கோடை மலை என்ற மலைக்கிராமத்திற்கு வருகிறார். ஒரு வழக்குகூட வராத அந்த காவல்நிலையத்துக்கு இந்த இன்ஸ்பெக்டர்  வந்த நேரத்தில் ஒரு கொலை வழக்கு வருகிறது.

அப்போது அங்கே புதிதாக வரும் ஒரு ஆசிரியர், பழங்குடி குழந்தைகளுக்காக பள்ளி நடத்தி வரும் அபி நட்சத்திராவிடம் அத்து மீறி நடக்க முயல, கொதித்துப்போன அபி அவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் மர்மமாக இறந்து போனதால் இந்த வழக்கை விசாரிக்க  இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் களம் இறங்குகிறார். இந்த கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்கும்போது எந்தவித தடயமும் கிடைக்கவில்ல. ஆசிரியரை அறைந்ததால் அபி நட்சத்திராதான் முதல் சந்தேக நபராக போலீஸ் வட்டத்தில் சிக்குகிறாள்.

ஆனால் அபிநட்சத்திரா இந்த கொலையை செய்யவில்லை என்பதால் அதனுடன் மர்மமாக இருக்கும் அந்த கொலைச் செயல்களை யார் செய்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது.அப்போது 1880-களில் வாழ்ந்த பழங்குடிப் பெண்களின் விசித்திரமான வரலாற்றுப் பின்னணியும் வெளிவருகிறது. அந்த ஊர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை அறிந்துக் கொள்வதொடு, முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு பலரை கொடூரமாக கொலை செய்வதையும் கண்டுபிடிக்கிறார் இசக்கி கார்வண்ணன். ஒரு கட்டத்தில் எதற்காக இந்த கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன?  ஆசிரியர் கொலைக்கு காரணமனவர்களை இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் “ஆட்டி” படத்தின் மீதிக் கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அமைதி ராஜாவாக  தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் நடித்திருக்கிறார். கம்பீரமான தோற்றமும், முரட்டுத்தனமும் அதிகம் பேசாத புதிர் தன்மையும் கொண்ட அந்த கதா பாத்திரத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக அவர் நடித்துள்ளார்.

அழகு என்கிற கதாபாத்திரத்தில் அபி நட்சத்திரா நடித்துள்ளார் .அந்த மலைவாழ் கிராமத்துப் பெண்ணாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.

ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிசாமி, காவலராக நடித்திருக்கும் செல்வகுமார், காதல் சுகுமார், கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

முகமூடி அணிந்த கொலைக் குழு பெண்களாக உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

1970 காலக்கட்டத்தில் பயணிக்கும் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்  சிபி சதாசிவம் .

இப்படத்தின் மிகப்பெரிய பலமே தீசனின் பின்னணி இசைதான். மலைப்பகுதியில் நிலவும் ஓசைகளை துள்ளியமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

திருமுருகன் திரைக்கதையில் கிட்டு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை,  இதுவரையில்  அதிகம் பேசப்படாத 1970-களின் கொடைக்கானல் மலைக்கிராமப் பின்னணியில் ஒரு மர்மக் கதையை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். மேலாடை அணியாத ஆண்கள், ரவிக்கை அணியாத பெண்கள் என்ற அந்தக்கால மனிதர்களைக் கண்முன் நிறுத்தியதன் வழக்கமான படம்போல் இல்லாமல் மாறுபட்டு ஒரு உன்னதமன் கதையை மனதில் நிற்க வைத்துள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் ‘ஆட்டி’ படம் ஒரு வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு புதிய முயற்சி.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.