சென்னை:
விஜய் ஆண்டனி, சுவாசிகா ,அஜய் திஷான் ,சக்தி, பாடினி குமார், காவியா அனில், கருணாஸ் , லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் , முனிஷ்காந்த் ,ஜென்ஸன் திவாகர் ,பகவதி பெருமாள் ,வினோதினி வைத்தியநாதன் நடித்துள்ள படம்தான் “நூரு சாமி”. இப்படத்தை சசி எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இரண்டு மகன்களுக்கு தாயான சுவாசிகா தனது இளம் வயதிலேயே கணவனை இழந்து தவிக்கிறார். இந்த இரண்டு மகன்களை தனது உயிராக நினைத்து தன் வாழ்க்கையை நடத்தி வரும் சுவாசிகா பலவித கஷ்டங்களையும், மனரீதியான போராட்டங்களையும், சவால்கள் நிறைந்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் காலங்கள் நகர தனது மகன்களை நன்றாக படிக்க வைத்து, அவர்களது வாழ்க்கை பாதையில் முன்னேற வைத்து அழகு பார்க்கிறார் சுவாசிகா. இந்த சூழலில் அவருடைய தனிமைக்கு துணை தேவை என்று தனது மூத்த மகன் அஜய் தர்ஷானிடம் தனது எதிர்கால வாழ்க்கையை நினைத்து மறுமணம் செய்து கொண்டால் என்ன என்று கேட்கிறார். அதற்கு அஜீத் திஷான் மிகுந்த கோபமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து தன் தாயின் சூழ்நிலை உணர்ந்து மகன்கள் இருவரும் தங்களது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். தனது தாய்க்காக மனைவி இழந்த விஜய் ஆண்டனியை மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார்கள். சுவாசிகாவும் தன் மகன்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு விஜய் ஆண்டனியை மறுமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார்.
ஆனால் ஊரில் உள்ள உறவினர்களும், மற்றவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த சூழலில் சுவாசிகாவுக்கு அவரது மகன்கள் இருவரும் மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? என்பது தான் ‘நூறு சாமி’ படத்தின் மீதி கதை..
இளம்வயதிலேயே கணவனை இழந்த மனைவியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில், இரண்டு மகன்களுக்கு தாயாக, அவரது மன போராட்டங்களையும் சமூகத் தடைகளைத் தாண்டி காதல் உணர்வு ஏற்படுகின்ற சூழலிலும் தன் நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி, வழக்கமான கதாநாயகன் என்பதையும் தாண்டி கதையின் தேவைக்கேற்ப அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இரண்டாவது பாதியில் வந்து எதிர்பாராத நேரத்தில் முகத்தைக் காட்டி ஏழுமலை என்ற கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கு நிறைவு செய்து இருக்கிறார்.
அஜய் திஷான், சக்தி ஆகிய இருவரும் சுவாசிகாவின் மகன்களாக நடித்திருக்கின்றனர். ஒரு தாயின் மகிழ்ச்சிக்காக போராடும் இளம் தலைமுறையின் மனநிலையை அவர்களது கதாபாத்திரங்கள் தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன. இவர்களைத் தவிர பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என துணைப் கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஸ் கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் இயல்பாகக் காட்டி அனைவரையும் கலர்ஃபுல்லாக ரசிக்க வைத்திருக்கிறார்.
பாலாஜி ஸ்ரீராம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான்.அம்மா பாடல் காதுகளில் இனிமையக ஒலிக்கிறது.பின்னணி இசையில் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஓரு உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை- திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சசி. கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை அங்கேயே முடிந்து விடக்கூடாது என்பதையும், அவரின் எதிர்காலத்தை அவர் தானே தீர்மானிக்க உரிமையுடையவர் என்பதையும் மிக தெளிவாக எடுத்து சொல்லி, விதவைகளை சமுதாயம் பார்க்கும் ஏளனப் பார்வையிலிருந்து தவிர்க்கவும், ஒரு சுயமரியாதை உணர்வு என்கிற ரீதியில் பெண்மையை உயர்த்திப் பிடித்துள்ளார் இயக்குநர் சசி.
மொத்தத்தில், ‘நூறுசாமி’ சமூக அக்கறை கொண்ட படம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.