இயக்குநர் சுசி கணேசன் தனது பிறந்தநாளில் ‘ஒரண்ட’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து கொண்டாடினார்!

5

சென்னை:

இயக்குநர் சுசி கணேசன் தனது அடுத்த படைப்பாக உருவாக்கி வரும் திரைப்படத்திற்கு ‘ஒரண்ட’ எனப் பெயரிட்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். தலைப்பு அறிவிக்கப்பட்டது முதலே படத்தின் கதை என்ன, யார் நடிக்கிறார்கள், எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று ‘ஒரண்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ளதாக சுசி கணேசன் அறிவித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவு பெற்றதோடு, தனது பிறந்தநாளையும் படக்குழுவினருடன் இணைந்து வித்தியாசமான முறையில் கொண்டாடியிருக்கிறார் சுசி கணேசன். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து பிரியாணி சமைத்து, அனைவருடனும் உணவைப் பகிர்ந்து கொண்டாடிய இந்த நிகழ்வு, படக்குழுவினருக்கு மட்டுமின்றி இயக்குநருக்கும் மறக்க முடியாத பிறந்தநாள் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன் கூறியதாவது:

“சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் வித்தியாசமானதாகவும், மறக்க முடியாததாகவும் அமைந்து விடும். அந்த வகையில், நான் இயக்கியுள்ள படங்களில் ‘ஒரண்ட’ திரைப்படம் மட்டுமே என் பிறந்தநாளன்று படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறது.

அதுவும் என் பிறந்தநாளுடன் படப்பிடிப்பின் நிறைவு நாளையும் சேர்த்து இரட்டை கொண்டாட்டமாக, படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த நாள் நீண்ட நாட்களுக்கு என் நினைவில் இருக்கும்.”

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஒரண்ட’ திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. படத்தின் முக்கிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதன் மூலம், திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை படக்குழு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

படத்தின் நடிகர்கள் யார்? கதாநாயகி யார்? இயக்குநர் சுசி கணேசனுடன் இணைந்து பணியாற்றியிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகும்? டீசர் எப்போது வரும்? கதை எந்த பின்னணியில் உருவாகியுள்ளது? என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

ஆனால், இவற்றில் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற ஒரே தலைப்பை மட்டும் அறிமுகப்படுத்தி, தனது அடுத்த படைப்பை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாற்றியிருக்கிறார் சுசி கணேசன்.

குறிப்பாக, அன்றாட பேச்சுவழக்கில் இயல்பாகப் பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத்தின் தலைப்பாகத் தேர்வு செய்திருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்தச் சொல்லின் பின்னணியில் என்ன இருக்கிறது, திரைப்படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு, கதாபாத்திரங்களின் உலகம் எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே ‘ஒரண்ட’ படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கதை, கதாபாத்திரங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் குழு என திரைப்படம் தொடர்பான முக்கிய அம்சங்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்கும் சுசி கணேசன், ஒவ்வொரு அறிவிப்பையும் எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிறந்தநாளில் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதுடன், படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து இரட்டை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது ‘ஒரண்ட’ படக்குழுவினருக்கு மேலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.

படத்தின் முதல் பார்வை, டீசர் மற்றும் நடிகர்–நடிகையர் உள்ளிட்ட அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.