சென்னை:
சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்தான் “மண்டாடி’. இப்படத்திற்கு கதை எழுதி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இராமேஸ்வரம் அருகே இருக்கும் முகவை பட்டினம், பாய்மரப் படகுப் போட்டிக்கு பெயர் பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது. மீன்பிடித் தொழில் மட்டுமே இந்த ஊரின் வாழ்வாதாரமாக உள்ளது.. சிறு வயதில் இருந்தே கடலையும், படகுகளையும், மீனையும் பார்த்து வளர்ந்த இந்த ஊர் இளைஞர்கள்… படகுகளை யார் வேகமாக செலுத்துகிறார்கள் என்பதில் ஒரு போட்டி போட்டு வளர்ந்திருக்கிறார்கள்.
சென்னையில் வேலைக்காக வnசூரி), எதிர்பாராத ஒரு சூழ்நிலையால் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். ஒரு காலத்தில் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த பாய்மரப் படகுப் போட்டியை இனி வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வந்த அவரை, அதே போட்டி மீண்டும் விடாமல் துரத்துகிறது.