CHENNAI:
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படத்தில், கதாநாயகியாக ஶ்ரீ திவ்யாவும், அனான்திகா, ஹரீஷ் பெய்ரடி, டேனியல், அன்னி பாப்பி, ரிஷி ரித்விக், சவுந்தர ராஜா, வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறனர்.
“டாணாக்காரன்” படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் பிரபுக்கு கைகொடுக்கும் அதிரடி,ஆக்ஷன் படமாக வெளி வந்திருக்கும் ‘ரெய்டு’ படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
தமிழ் திரைப்பட உலகில் காவல்துறை சம்பந்தப்பட்ட எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் அதில் ஒரு சில படங்கள் தான் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருக்கிறது. தற்போது தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் ‘ரெய்டு’ படத்தில் கதாநாயகன் விக்ரம் பிரபு ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக வலம் வருகிறார். இவர் ஒரு ஆதரவற்ற இல்லத்தில் படித்து வளர்ந்து ஒரு பெரிய காவல்துறை அதிகாரியாக இருப்பதால் நகரில் எல்லா ரவுடிகளையும் ஒழித்து, அமைதியை நிலைநாட்ட விரும்புகிறார். இந்த சூழ்நிலையில் பெரிய தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடமிருந்து விலகி வந்த ரிஷி, சௌந்தரராஜன் இருவரும் செய்யும் அட்டூழியங்களை ஒழித்துக் கட்ட முயல்கிறார் விக்ரம் பிரபு.
ஆனால் அந்த ரௌடிகளோ விக்ரம் பிரபுவை கொலை செய்ய முயலுகின்றனர். இந்த நிலையில் ரிஷியின் தம்பியான டேனியலை விக்ரம் பிரபு நடுரோட்டில் அவமானப்படுத்தி அவரை ஓட விட்டு என்கவுண்டர் செய்கிறார். இதனால் விக்ரம் பிரபுவை ரிஷியும், சௌந்தரராஜனும் பழிக்கு பழி தீர்க்க திட்டம் போடுகின்றனர். எப்படியாவது விக்ரம் பிரபுவை கொலை செய்ய வெறியுடன் அலையும் தருணத்தில், விக்ரம் பிரபு தன் காதலி ஸ்ரீ திவ்யாவுடன் செல்லும்போது துப்பாயால் சுட்டு ஸ்ரீ திவ்யாவை கொலை செய்து விடுகின்றனர். குண்டடிபட்டு உயிர் தப்பித்த விக்ரம் பிரபு தன் காதலியை கொன்ற ரவுடிகள் ரிஷி மற்றும் சௌந்தரராஜாவை பழிக்கு பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் ‘ரெய்டு’ படத்தின் மீதி கதை.
ஒரு நேர்மையான காவலதிகாரியாக, கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு மிடுக்கான தோற்றத்துடன திரைப்படம் முழுக்க தன் நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார். ஆக்ரோசமான அதிரடிச் சண்டைகள் மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ரிஷியுடன் மோதுவது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது. தன் காதலி ஸ்ரீதிவ்யாவுடன் காதல் காட்சிகளில் அனைவரையும் கவருகிறார்.
தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த ஸ்ரீதிவ்யாவை, மீண்டும் இப்படத்தின் மூலம் அழைத்து வந்திருக்கிறார்கள். இப்படத்தில் பெரிதாக வேலை இல்லா விட்டாலும் கதையின் முக்கிய கதாபாத்திரமாக மட்டும் வருகிறார். ஆனால் இடை வேளைக்கு பிறகுதான் முழுவதுமாக திரையில் தலையே காட்டுகிறார். விக்ரம் பிரபுவுடன் காதல், பாடல் காட்சிகளில் மட்டுமே வந்து ஜொலித்து அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.
வில்லத்தனத்தில் ரிஷி ரித்விக் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் தனது தம்பியை என்கவுண்டர் செய்த கதாநாயகன் விக்ரம் பிரபுவை பழி வாங்க துடிக்கும் காட்சிகளில் மிக சிறப்பான முறையில் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறார். சவுந்தரராஜாவும், அசத்தலான நடிப்பில் மிரட்டி, போட்டி போட்டு இருவரும் நடித்திருக்கின்றனர்.
இயக்குனர் வேலு பிரபாகரன் வில்லனாக தன் அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். ரிஷியின் தம்பியாக வரும் டேனியல் மிக அருமையாக சிறப்பாக நடித்திருக்கிறார். முன்னாள் காவல்துறை அதிகாரியாக செல்வா நடித்திருக்கிறார்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மிகுந்த இரைச்சலுடன் படத்திற்கு மைனஸாக இருக்கிறது. கதிரவனின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அழுத்தம் காட்சிகளில் இல்லை.
கன்னடத்தில் வெளியான ‘டகரு’ படத்தின் தமிழாக்கம் என்று தெரியாத விதத்தில் வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஒரு ஆக்ஷ்ன் படத்திற்கு தேவையான வசனங்களை எழுதி அசத்தி இருக்கிறார்.
முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தி இப்படத்தை ஆக்ஷன் அதிரடி குறையாமல் இயக்கியிருக்கிறார். மையக்கதை பழையது என்பது தெரியாமல் காவல்துறை மற்றும், ரவுடிசம், கொலை, என்கவுண்டர் ஆகியவற்றை சற்று மாற்றியமைத்து வழக்கமான பாணியில் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார இயக்குனர் கார்த்தி. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படமாக அமைந்து இருக்கும்.
மொத்தத்தில் “ரெய்டு’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங்-2.5/5.
RADHAPANDIAN.